முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவாய் மொழி எட்டாம் பத்து
3563 |
தேவிமா ராவார் திருமகள் பூமி யேவமற் றமரராட் செய்வார், மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டுவேண் டுருவம்நின் னுருவம், பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணதோர் பவளவாய் மணியே, ஆவியே. அமுதே. அலைகடல் கடைந்த அப்பனே. காணுமா றருளாய். |
1.1 |
3564 |
காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன் பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே பிதற்றுமா றருளெனக் கந்தோ, காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா. தொண்டனேன் கற்பகக் கனியே, பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ் பெருநிலம் எடுத்தபே ராளா. |
1.2 |
3565 |
எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன் இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக் கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே. அடியனேன் பெரியவம் மானே, கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக் கையுகி ராண்டவெங் கடலே, அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே? |
1.3 |
3566 |
உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம் ஆகியுன் தனக்கன்ப ரானார் அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன், அமரது பண்ணி அகலிடம் புடைசூழ் அடுபடை அவித்தாம் மானே, அமரர்தம் அமுதே. அசுரர்கள் நஞ்சே. என்னுடை ஆருயி ரேயோ. |
1.4 |
3567 |
ஆருயி ரேயோ. அகலிடம் முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த, பேருயி ரேயோ. பெரியநீர் படைத்தங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த, சீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர் போலத்தே வர்க்கும்தே வாவோ, ஒருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம் உன்னைநான் எங்குவந் துறுகோ? |
1.5 |
3568 |
எங்குவந் துறுகோ என்னையாள் வானே. ஏழுல கங்களும் நீயே, அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே, பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீயின்னே யானால் மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலம் இறந்ததும் நீயே. |
1.6 |
3569 |
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீயின்னே யானால், சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென் றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன், கறந்தபால் நெய்யே. நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில் பிறந்தவின் சுவையே. சுவையது பயனே. பின்னைதோள் மணந்தபே ராயா. |
1.7 |
3570 |
மணந்தபே ராயா. மாயத்தால் முழுதும் வல்வினை யேனையீர் கின்ற, குணங்களை யுடையாய். அசுரர்வன் கையர் கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய், பணங்களா யிரமும் உடையபைந் நாகப் பள்ளியாய். பாற்கடல் சேர்ப்பா, வணங்குமா றாறியேன். மனமும்வா சகமும் செய்கையும் யானும்நீ தானே. |
1.8 |
3571 |
யானும்நீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீயானால், வானுய ரின்பம் எய்திலென் மற்றை நரகமே யெய்திலென்? எனிலும், யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம்நா னடைதல், வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய். அருளுநின் தாள்களை யெனக்கே. |
1.9 |
3572 |
தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத் தந்தபே ருதவிக்கைம் மாறா, தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை அறவிலை செய்தனன் சோதீ, தோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய். துணைமலர்க் கண்களா யிரத்தாய், தாள்களா யிரத்தாய். பேர்களா யிரத்தாய். தமியனேன் பெரிய அப்பனே. |
1.10 |
3573 |
பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை, முனிவர்க் குரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை, பெரியவண் குருகூர் வண்சட கோபன் பேணின ஆயிரத் துள்ளும், உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால் உய்யலாம் தொண்டீர்.நங் கட்கே. |
1.11 |
3574 |
நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி, நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன், சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன், வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே. |
2.1 |
3575 |
வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும், ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ. காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான், காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால், ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின் றேனே. |
2.2 |
3576 |
காலம் இளைக்கிலல் லால்வி னையேன் நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின், ஞாலம் அறியப் பழிசு மந்தேன் நன்னுத லீர்.இனி நாணித் தானென், நீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட, கோல வளையொடு மாமை கொள்வான் எத்தனை காலம்கூ டச்சென்றே? |
2.3 |
3577 |
கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம், பாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன், மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன், ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவினை யாதரித்தே. |
2.4 |
3578 |
ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவும் எல்லாம், தோழியர் காள்.நம் முடைய மேதான்? சொல்லுவ தோவிங் கரியதுதான், ஊழிதோ றூழி ஒருவ னாக நன்குணர் வார்க்கும் உணர லாகா, சூழ லுடைய சுடர்கொ ளாதித் தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே. |
2.5 |
3579 |
தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென் சொல்லள வன்றிமை யோர்த மக்கும், எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான், அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான் ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர், வல்லி வளவயல் சூழ்கு டந்தை மாமலர்க் கண்வளர் கின்ற மாலே. |
2.6 |
3580 |
மாலரி கேசவன் நார ணஞ்சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று, ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட் டொன்று முருவும் சுவடும் காட்டான், ஏல மலர்குழல் அன்னை மீர்காள். என்னுடைத் தோழியர் காள்.என் செய்கேன்? காலம் பலசென்றும் காண்ப தாணை உங்களோ டெங்க ளிடையில் லையே. |
2.7 |
3581 |
இடையில் லையான் வளர்த்த கிளிகாள். பூவைகள் காள்.குயில் காள்.ம யில்காள், உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான், அடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவைந ணிய, கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே. |
2.8 |
3582 |
காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால், மாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த, சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு, நாண்கொடுத் தேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். |
2.9 |
3583 |
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை, நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு, பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல, நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்fம லர்ப்பா தமடைந் ததுவே. |
2.10 |
3584 |
பாதம் அடைவதன் பாசத் தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு, கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல் வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன, தீதிலந்தாதியோ ராயி ரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார், ஆதுமோர் தீதில ராகி யிங்கும் அங்குமெல் லாமமை வார்கள் தாமே. |
2.11 |
3585 |
அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும், எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி, அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள், சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே. |
3.1 |
3586 |
சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே, மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம், கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி, அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே. |
3.2 |
3587 |
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம், வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை, தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன், நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே. |
3.3 |
3588 |
ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி, ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே, காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன் கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே. |
3.4 |
3589 |
கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும், மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப் படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. |
3.5 |
3590 |
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம், அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின், தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே. |
3.6 |
3591 |
வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என் திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென், உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு, ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே. |
3.7 |
3592 |
என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ், நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான், குன்றெழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும், நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே. |
3.8 |
3593 |
திருமால் நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம் பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென், ஒருமா முதல்வா. ஊழிப் பிரானென் னையாளுடை, கருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே. |
3.9 |
3594 |
கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோ ர், துளக்க மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள், மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை, உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே. |
3.10 |
3595 |
உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை, வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன், உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும், நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே. |
3.11 |
3596 |
வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பிணைக் குவடிறுத் துருட்டி, ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல், போர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த, சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே. |
4.1 |
3597 |
எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன், பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன், செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே? |
4.2 |
3598 |
என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான், முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான், தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால் நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே. |
4.3 |
3599 |
பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும் நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த, குறியமாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமா ணிக்கமென் எம்மான், செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான் அடியிணை யல்லதோர் அரணே. |
4.4 |
3600 |
அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும், அவனை அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனுறை கின்ற, நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும், நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே. |
4.5 |
3601 |
எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை, தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை, மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ், கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே. |
4.6 |
3602 |
திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும், திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும், திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும், திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே. |
4.7 |
3603 |
திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர், திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை, புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை, புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே. |
4.8 |
3604 |
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே, இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே, கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம், நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே. |
4.9 |
3605 |
அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை, அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு, அமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே. |
4.10 |
3606 |
தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை, வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை, கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும், வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே. |
4.11 |
3607 |
மாயக் கூத்தா. வாமனா. வினையேன் கண்ணா. கண்கைகால் தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதா, சாயல் சாமத் திருமேனி தண்பா சடையா, தாமரைநீள் வாசத் தடம்போல் வருவானே. ஒருநாள் காண வாராயே. |
5.1 |
3608 |
காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன் நாணி நன்னாட் டலமந்தால் இரங்கி யொருநாள் நீயந்தோ, காண வாராய் கருநாயி றுதிக்கும் கருமா மாணிக்க, நாணல் மலைபோல் சுடர்ச்சோதி முடிசேர் சென்னி யம்மானே. |
5.2 |
3609 |
முடிசேர் சென்னி யம்மா.நின் மொய்பூந் தாமத் தண்டுழாய், கடிசேர் கண்ணிப் பெருமானே. என்றென் றேங்கி யழுதக்கால், படிசேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால்தோளும், துடிசே ரிடையும் அமைந்ததோர் தூநீர் முகில்போல் தோன்றாயே. |
5.3 |
3610 |
தூநீர் முகில்போல் தோன்றும்நின் சுடர்க்கொள் வடிவும் கனிவாயும், தேநீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா, மாநீர் வெள்ளீ மலைதன்மேல் வண்கார் நீல முகில்போல, தூநீர்க் கடலுள் துயில்வானே. எந்தாய். சொல்ல மாட்டேனே. |
5.4 |
3611 |
சொல்ல மாட்டேன் அடியேனுன் துளங்கு சோதித் திருப்பாதம், எல்லை யில்சீ ரிளஞாயி றிரண்டு போலென் னுள்ளவா., அல்லல் என்னும் இருள்சேர்தற் குபாயம் என்னே?, ஆழிசூழ் மல்லல் ஞால முழுதுண்ட மாநீர்க் கொண்டல் வண்ணனே. |
5.5 |
3612 |
கொண்டல் வண்ணா. குடக்கூத்தா. வினையேன் கண்ணா. கண்ணா,என் அண்ட வாணா. என்றென்னை ஆளக் கூப்பிட் டழைத்தக்கால், விண்டன் மேல்தான் மண்மேல்தான் விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான், தொண்ட னேனுள் கழல்லாண ஒருநாள் வந்து தோன்றாயே. |
5.6 |
3613 |
வந்து தோன்றா யன்றேலுன் வையம் தாய மலரடிக்கீழ், முந்தி வந்து யான்நிற்ப முகப்பே கூவிப் பணிகொள்ளாய், செந்தண் கமலக் கண்கைகால் சிவந்த வாயோர் கருநாயிறு, அந்த மில்லாக் கதிர்பரப்பி அலர்ந்த தொக்கும் அம்மானே. |
5.7 |
3614 |
ஒக்கும் அம்மா னுருவமென் றுள்ளம் குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந் தோறும் தொலைவன்நான், தக்க ஐவர் தமக்காயன்று றீரைம் பதின்மர் தாள்சாய, புக்க நல்தேர்த் தனிப்பாகா. வாராய் இதுவோ பொருத்தமே? |
5.8 |
3615 |
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள், அதுவே கொடியா வுயர்த்தானே. என்றென் றேங்கி யழுதக்கால், எதுவே யாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான், மதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே? |
5.9 |
3616 |
பிறந்த மாயா. பாரதம் பொருத மாயா. நீயின்னே, சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே, கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்று ளெங்கும் கண்டுகொள், இறந்து நின்ற பெருமாயா. உன்னை எங்கே காண்கேனே? |
5.10 |
3617 |
எங்கே காண்கேன் ஈன்துழாய் அம்மான் றன்னை யான்? என்றென்று அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன், செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே. |
5.11 |
3618 |
எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ, நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான், அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர், செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. |
6.1 |
3619 |
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர், செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை, உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. |
6.2 |
3620 |
ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று, உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான், திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை, மருவி யுரைகின்ற மாயப் பிரானே. |
6.3 |
3621 |
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற, நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான், தேசத் தமரர் திருக்கடித் தானத்தை, வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே. |
6.4 |
3622 |
கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை, கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம், கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம் கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே. |
6.5 |
3623 |
கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும், மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை, பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை, ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே. |
6.6 |
3624 |
கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன், மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை, மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து, நண்ணு திருக்கடித் தான நகரே. |
6.7 |
3625 |
தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும், வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே, ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித் தான நகரும், தனதாயப் பதியே. |
6.8 |
3626 |
தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும், மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை, தேயத் தமரர் திருக்கடித் தானத்துள், ஆயர்க் கதிபதி அற்புதன் தானே. |
6.9 |
3627 |
அற்புதன் நாரா யணனரி வாமனன், நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம், நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர், கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. |
6.10 |
3628 |
சோலை திருக்கடித் தானத் துறைதிரு மாலை, மதிள்குரு கூர்ச்சடகோபன்fசொல், பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும், மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே. |
6.11 |
3629 |
இருத்தும் வியந்தென்னைத் தன்பொன் னடிக்கீழென்று, அருத்தித் தெனைத்தோர் பலநாள் அழைத்தேற்கு, பொருத்த முடைவா மனன்தான் புகுந்து,என்தன் கருத்தை யுறவீற் றிருந்தான் கண்டுகொண்டே. |
7.1 |
3630 |
இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும், திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி, பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான், தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே. |
7.2 |
3631 |
அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள், இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால், பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல, மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே. |
7.3 |
3632 |
மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து, ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான், தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான், தேயம் திகழும்தன் திருவருள் செய்தே. |
7.4 |
3633 |
திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார், புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள் திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான், புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே? |
7.5 |
3634 |
பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத் தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?, கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல், திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே. |
7.6 |
3635 |
செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள, செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த, அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே. |
7.7 |
3636 |
அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார், வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து, சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம் நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே. |
7.8 |
3637 |
வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும், வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம் வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை, வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே. |
7.9 |
3638 |
வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே, எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்பொதும், மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால், பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே. |
7.10 |
3639 |
சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை, அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன், முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம் விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே. |
7.11 |
3640 |
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே வெண்பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன், கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன், ஒண்சங் கதைவா ளாழியான் ஒருவன் அடியே னுள்ளானே. |
8.1 |
3641 |
அடியே னுள்ளான் உடலுள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான், படியே யிதுவென் றுரைக்கலாம், படியன் அல்லன் பரம்பரன், கடிசேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழிநேர்மை, ஒடியா இன்பப் பெருமையோன் உணர்வி லும்ப ரொருவனே. |
8.2 |
3652 |
உணர்வி லும்ப ரொருவனை அவன தருளா லுறல்பொருட்டு,என் உணர்வி னுள்ளே யிருத்தினேன் அதுவும் அவன தின்னருளே, உணர்வும் உயிரும் உடம்பும்மற் றுலப்பி லனவும் பழுதேயாம், உணர்வைப் பெறவூர்ந் திறவேறி யானும் தானா யொழிந்தானே. |
8.3 |
3643 |
யானும் தானா யொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை, தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை, தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்தித்து,என் ஊனி லுயிரி லுணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே. |
8.4 |
3644 |
நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக் கதனுள் நேர்மை அதுவிதுவென்று, ஒன்றும் ஒருவர்க் குணரலாகா துணர்ந்தும் மேலும் காண்பரிது சென்று சென்று பரம்பரமாய் யாது மின்றித் தேய்ந்தற்று, நன்று தீதென் றறிவரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே. |
8.5 |
3645 |
நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து, ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து, சென்றாங் கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால், அன்றே யப்போ தேவீடு அதுவே வீடு வீடாமே. |
8.6 |
3646 |
அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறி, எதுவே தானும் பற்றின்றி யாது மிலிக ளாகிற்கில், அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறாது, எதுவே வீடே தின்பம்? என் றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே. |
8.7 |
3647 |
எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென் றில்லாத் தாரும் புறத்தாரும் மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம் போகும் போது,உன் மத்தர்போல் பித்தே யேறி யனுராகம் பொழியும் போதெம் பெம்மானோடு ஒத்தே சென்று,அங் குளம்கூடக் கூடிற் றாகில் நல்லுறைப்பே. |
8.8 |
3648 |
கூடிற் றாகில் நல்லுறைப்புக் கூடா மையைக் கூடினால், ஆடல் பறவை யுயர்கொடியெம் ஆய னாவ ததுவதுவே, வீடைப் பண்ணி யொருபரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய், ஓடித் திரியும் யோகிகளும் உளரு மில்லை யல்லரே. |
8.9 |
3649 |
உளரு மில்லை யல்லராய் உளரா யில்லை யாகியே, உளரெம் மொருவர் அவர்வந்தென் உள்ளத் துள்ளே யுறைகின்றார் வளரும் பிறையும் தேய்பிறையும் போல் அசைவும் ஆக்கமும், வளரும் சுடரும் இருளும்போல் தெருளும் மருளும் மாய்த்தோமே. |
8.10 |
3650 |
தெருளும் மருளும் மாய்த்துத்தன் திருந்து செம்பொற் கழலடிக்கீழ் அருளி யிருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம்,திருமாலால் அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்து ளிப்பத்தால், அருளி யடிக்கீ ழிருத்தும்நம் அண்ணல் கருமா ணிக்கமே. |
8.11 |
3651 |
கருமா ணிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல், திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்யபிரான் திருமா லெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர், அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீரிதற் கென்செய்கேனா. |
9.1 |
3652 |
அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும், துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல், மின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான், புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே. |
9.2 |
3653 |
புகழு மிவள்நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும் திகழு மெரியோடு செல்வதொப்பச் செழுங்கதி ராழிமுதல் புகழும் பொருபடை யேந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான் திகழு மணிநெடு மாடம்நீடு திருப்பூலி யுர்வளமே. |
9.3 |
3654 |
ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து ஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர், சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான், பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே. |
9.4 |
3655 |
புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும், நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால், சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர், முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ்கினளே. |
9.5 |
3656 |
திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான், திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள, திருவருள் அருளால் அவன்fசென்று சேர்தண் திருப்பூலியுர், திருவருள் கமுகொண் பழத்தது மெல்லியல் செவ்விதழே. |
9.6 |
3657 |
மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின், மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து, புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர், மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே. |
9.7 |
3658 |
மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய் திடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர், படவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே. |
9.8 |
3659 |
பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான், விரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப, கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும், புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே. |
9.9 |
3660 |
அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல், குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி, தென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர், நின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே. |
9.10 |
3661 |
நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை, நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோ பன்,சொல் நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும் நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே. |
9.11 |
அறுசீர் ஆசிரிய விருத்தம்
3662 |
நெடுமாற் கடிமை செய்வேன்போல் அவனை கருத வஞ்சித்து, தடுமாற் றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால், கொடுமா வினையேன் அவனடியார் அடியே கூடும் இதுவல்லால், விடுமா றென்ப தென்னந்தோ. வியன்மூ வுலகு பெறினுமே? |
10.1 |
3663 |
வியன்மூ வுலகு பெறினும்போய்த் தானே தானே யானாலும், புயல்மே கம்போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக்கீழ், சயமே யடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே பயனே யின்பம் யான்பெற்ற துறுமோ பாவி யேனுக்கே? |
10.2 |
3664 |
உறுமோ பாவி யேனுக்கிவ் வுலகம் மூன்றும் உடன்நிறைய, சிறுமா மேனி நிமிர்த்தவென் செந்தா மரைக்கண் திருக்குறளன் நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார், சிறுமா மனிச ராயென்னை ஆண்டா ரிங்கே திரியவே. |
10.3 |
3665 |
இங்கே திரிந்தேற் கிழக்குற்றென். இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த, செங்கோ லத்த பவளவாய்ச் செந்தா மரைக்க ணென்னம்மான் பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன்கொள் வடிவென் மனத்தாய் அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட் டோ ட அருளிலே? |
10.4 |
3666 |
வழிபட் டோ ட அருள்பெற்று மாயன் கோல மலரடிக்கீழ், சுழிபட் டோ டும் சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற் றிருந்தாலும், இழிபட் டோ டும் உடலினிற் பிறந்து தன்fசீர் யான்கற்று, மொழிபட் டோ டும் கவியமுத நுகர்ச்சி யுறுமோ முழுதுமே? |
10.5 |
3667 |
நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு தன்கேழில், புகர்ச்செம் முகத்த களிறட்ட பொன்னா ழிக்கை யென்னம்மான், நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள் நீண்ட அசுர ருயிரெல்லாம், தகர்த்துண் டுழலும் புட்பாகன் பெரிய தனிமாப் புகழே? |
10.6 |
3668 |
தனிமாப் புகழே யெஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான்தோன்றி, முனிமாப் பிரம முதல்வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த, தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவனடியார், நனிமாக் கலவி யின்பமே நாளும் வாய்க்க நங்கட்கே. |
10.7 |
3669 |
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன் தாளும் தோளும் முடிகளும் சமனி லாத பலபரப்பி, நீளும் படர்பூங் கற்பகக் காவும் நிறைபன் னாயிற்றின், கோளு முடைய மணிமலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே. |
10.8 |
3670 |
தமர்கள் கூட்ட வல்வினையை நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி, அமர்கொள் ஆழி சங்குவாள் வில்தண் டாதி பல்படையன், குமரன் கோல ஐங்கணைவேள் தாதை கோதில் அடியார்தம். தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே. |
10.9 |
3671 |
வாய்க்க தமியேற் கூழிதோ றூழி யூழி மாகாயாம் பூக்கொள் மேனி நான்குதோள் பொன்னா ழிக்கை யென்னம்மான், நீக்க மில்லா அடியார்தம் அடியார் அடியார் அடியாரெங் கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே. |
10.10 |
3672 |
நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான்நிறைந்த, அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன், சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே. |
10.11 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - திருக்கடித், திருச்செங்குன், பெருமான், றூரில், திருவருள், திருச்சிற்றா, வினையேன், குருகூர்ச், யிரத்தாய், வயிற்றிற்கொண்டு, வுலகும், திருப்பூலியுர், சடகோபன், தமர்கள், வாயும், வாராய், நாளும், சங்கும், தானும், கோயில்கொண், வாய்க்க, அப்பனை, தானத்தை, என்றென்று, சென்று, கொண்டல், மீர்காள், உணர்வி, பத்தும், அடியார், றங்கரை, இமையவர், செவ்வாய், திருச்செய்ய, சுடர்ச்சோதி, மில்லா, புகழும், தன்னைக், நேர்ப்பட்ட, தோழியர், ளம்கிளர், குட்டநாட்டுத், முழுதும், யானும்நீ, என்னுடை, றருளாய், நீயின்னே, காணுமா, அவனடியார், எல்லியும், பொன்னா, யுறுமோ, துள்ளே, வழிபட், னெஞ்சகம், செந்தா, புகுதல், வல்லார்கள், நுகர்ச்சி, அம்மான், யழுதக்கால், தூநீர், முகில்போல், றேங்கி, என்றென், பெருமானே, அடியார்தம், தோன்றாயே, தனிமாப், சிறுமா, அந்தண், பிறந்த, ழிக்கை, மலரடிக்கீழ், யென்னம்மான், இவையும், கூத்தவம், சூழ்திருப், யானும், கழலடிக்கீழ், சிவந்து, பணைநம், சுடர்ப்பாம், கடிசேர், மருளும், நன்றாய், மில்லை, தெருளும், றாகில், கூடிற், பேற்றின்பந், ரெய்த்தா, தாரும், நின்றொழிந், அற்புதன், றிருந்தான், தெங்கெங்கும், கொண்டமின், வியன்மூ, வளரும், இதுவல்லால், வஞ்சித்து, அறியேன்மற், றிராப்பகல், சுடரும், வெண்பல், கண்ணபிரான், றெனக்குமோர், மூன்றும், வேள்வியுள், என்னுடைத், தாமரைக், கண்ணன், மாட்டேன், ரைக்கும், யெனக்கே, ஆயிரத், நுங்கட், கொள்வான், எத்தனை, கோவிந்தன், செய்கேன், நெஞ்சும், கொண்டான், செய்யும், வலவினை, தொல்லையஞ், நினைக்குங், தாள்களை, ரின்பம், சங்கிப்பன், அகலிடம், புடைசூழ், எடுத்தபே, கற்பகக், னுருவம், கடைந்த, அப்பனே, எங்குவந், துறுகோ, மணந்தபே, வல்வினை, அசுரர்வன், சுவையே, இறந்ததும், என்னையாள், யானால், ஒன்றும், பாசங்கள், எம்மான், மறையோர், வுலகம், பிறிதில்லை, நின்றவெம், றூர்த்திருச், சிற்றாறு, அல்லால், சிவனும், திகழவென், திருமேனி, ஒருநாள், முடிசேர், கண்கைகால், சொன்னவா, சிந்தை, படைப்பொடு, பரம்பரன், பொருந்துமூ, யிரத்து, வானவர், எங்கும், நான்மறை, வல்லார், கோதில், நன்னுதல், செய்வதென், சூழ்சுடர், ஆழியும், செல்வார், அல்லல், திருந்த, நின்றே, அம்மானே, அடியேன், தாளும், தோளும், சென்னி