முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
பெரிய திருவந்தாதி தனியன்
எம்புருமானார் அருளிச்செய்தது
முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல் குருகூரன் மாறன் பேர் கூறு. |
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி
2585 |
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே, இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் |
1 |
2586 |
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற் றெங்கள் மால். செங்கண் மால். சீறல்நீ, தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை. |
2 |
2587 |
இவையன்றே நல்ல இவையன்றே தீய, இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம் என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே, என்னால் செயற்பால தென்? |
3 |
2588 |
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற் றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப் பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று? |
4 |
2589 |
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ மற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ மாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த நீயம்மா. காட்டும் நெறி. |
5 |
2590 |
நெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா முறிமேனி காட்டுதியோ, மேனாள்-அறியோமை எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய் எஞ்செய்தா லென்படோம் யாம்? |
6 |
2591 |
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார் தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த அம்மா. நின் பாதத் தருகு. |
7 |
2592 |
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம் பண்புடையீர்.பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய _ண்புடையீர் _ம்மை _மக்கு. |
8 |
2593 |
_மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார் தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்?-எமக்கினி யாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே யாதானும் சிந்தித் திரு. |
9 |
2594 |
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ டொருநால்வர் μரிருவர் அல்லால், திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ்? |
10 |
2595 |
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை, வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ, நீரும்நீ யாய்நின்ற நீ. |
11 |
2596 |
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்? போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும் காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. |
12 |
2597 |
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட, இழக்கவும் காண்டும் இறைவ.-இழபுண்டே, எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள் தம்மால்காட் டுன்மேனிச் சாய்? |
13 |
2598 |
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே, பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த் தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம் பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து. |
14 |
2599 |
பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம் பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம் தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய செம்மேனிக் கண்வளர்வார் சீர். |
15 |
2600 |
சீரால் பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப் புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே? சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து. |
16 |
2601 |
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும் வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய, தாள்வரைவில் லேந்தினார் தாம். |
17 |
2602 |
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக, பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன் தொல்லுருவை யாரறிவார் சொல்லு? |
18 |
2603 |
சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே, எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண் மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக, காத்தானைக் காண்டும்நீ காண். |
19 |
2604 |
காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம், நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான், திருவாகம் தீண்டிற்றுச் சென்று. |
20 |
2605 |
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப் பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய, காருருவன் தன் நிமிர்த்த கால் |
21 |
2606 |
காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள், மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால் தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற் றிருக்குமிடம் காணா திளைத்து. |
22 |
2607 |
இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன், இளைக்க நமன்தமர்கள் பற்றி-இளைப்பெய்த நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான், தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான். |
23 |
2608 |
தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான் தானே பிறர்கட்ட்கும் தற்றோன்றல்,-தானே இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால், அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்? |
24 |
2609 |
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன், வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான். |
25 |
2610 |
யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான்,-தானோர் இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த, அருளென்னும் தண்டால் அடித்து. |
26 |
2611 |
அடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல் முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய். செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம், அறிகிலாமால் நீயளந்த அன்று. |
27 |
2612 |
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம், இன்றேநாம் காணா திருப்பதுவும்,-என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் உட்கண்ணால் காணு முணர்ந்து. |
28 |
2613 |
உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே, இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத் தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால், எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு. |
29 |
2614 |
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்,மீண் டடியெடுப்ப தன்றோ அழகு? |
30 |
2615 |
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான், நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக் குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத் தடங்கடலை மேயார் தமக்கு. |
31 |
2616 |
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார், தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார், யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது? |
32 |
2617 |
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ, யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,-யாதானும் தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால் பாறுபா றாக்கினான் பால். |
33 |
2618 |
பாலாழி நீகிடக்கும் பண்பை, யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச் சோதியாய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும், நீதியாய். நிற்சார்ந்து நின்று. |
34 |
2619 |
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான், அன்புடைய னன்றே யவன்? |
35 |
2620 |
அவனாம் இவனாம் உவனாம், மற் றும்பர் வனாம் அவனென் றிராதே,-அவனாம் அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால், அவனே எவனேலும் ஆம். |
36 |
2621 |
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே? நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய் மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம் அதுகரமே அன்பால் அமை. |
37 |
2622 |
அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே, இமைக்கும் பொழுதும் இடைச்சி-குமைத்திறங்கள், ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே, பேசியே போக்காய் பிழை. |
38 |
2623 |
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய், தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால் போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு? |
39 |
2624 |
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே, போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை மாய்த்தானை வாழ்தே வலி. |
40 |
2625 |
வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி,-வலியநின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே, பன்னாளும் நிற்குமிப் பார். |
41 |
2626 |
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன்படைத்தா னென்பரால்,-பாரிடம் ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு ஆவான் பூகாவால் அவை. |
42 |
2627 |
அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே, நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில் மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ, மனத்துயரை மாய்க்கும் வகை? |
43 |
2628 |
வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும், மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே, மேலைத்தாம் செய்யும் வினை? |
44 |
2629 |
வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி, தினையாம் சிறிதளவும் செல்ல-நினையாது வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும், நாயகத்தான் பொன்னடிகள் நான். |
45 |
2630 |
நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும் தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, நீகதியா நெஞ்சே. நினை. |
46 |
2631 |
நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே, நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும் எவ்வளவு முண்டோ எமக்கு? |
47 |
2632 |
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை, அமைத்திருந்தோம் அதன்றே யாமாறு,-அமைப் பொலிந்த மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே, கொன்றானை யேமனத்துக் கொண்டு? |
48 |
2633 |
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான் வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள் காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார் பேருருவென் றெம்மைப் பிரிந்து. |
49 |
2634 |
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே, திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால் ஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல், மாவை பிளந்தார் மனம்? |
50 |
2635 |
மனவாளும் μரைவர் வன்குறும்பர் தம்மை, சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய தண்டுழா யானடியே தான்காணும் அதன்றே, வண்டுழாம் சீராக்கு மாண்பு? |
51 |
2636 |
மாண்பாவித் தந்நான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ் சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங் கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா துண்ணவாய் தானுறுமோ ஒன்று? |
52 |
2637 |
ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில் வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு வைகுந்த மென்றருளும் வான்? |
53 |
2638 |
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ, கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம், வன்துயரை யாவா. மருங்கு. |
54 |
2639 |
மருங்கோத மோதும் மணிநா கணையார், மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங்கே எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால், மனக்கவலை தீர்ப்பார் வரவு. |
55 |
2640 |
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே. ஒருவா றொருவன் புகவாறு,-உருமாறும் ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம், மாயவர்தாம் காட்டும் வழி. |
56 |
2641 |
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே, தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும் தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள, வாழ்வடங்க மார்விடந்த மால்? |
57 |
2642 |
மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால் பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று, மறப்பின்மை யான்வேண்டும் மாடு. |
58 |
2643 |
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார் காடானும் ஆதானும் கைகொள்ளார்,-ஊடேபோய்ப் போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன் பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து. |
59 |
2644 |
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும் தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லைகாண் மற்றோர் இறை. |
60 |
2645 |
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள், மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின் தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின் மீதிலகித் தாங்கிடக்கும் மீன். |
61 |
2646 |
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர் மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள் பிணிக்காம் பெருமருந்து பின். |
62 |
2647 |
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய், வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும், பருச்செவியு மீர்ந்த பரன். |
63 |
2648 |
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில், உரனா லொருமூன்று போதும்,-மரமேழன் றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர் கைதான் தொழாவே கலந்து? |
64 |
2649 |
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல் தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை, சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு. |
65 |
2650 |
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை, மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே. அறிகண்டாய் சொன்னேன் அது. |
66 |
2651 |
அதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில், அதுவோ பொருளில்லை யன்றே?, அதுவொழிந்து மண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே, கண்ணன் தாள் வாழ்த்துவதே கல். |
67 |
2652 |
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென் றழிந்தனகொல் ஏபாவம்,-வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேன துள்ளத் தகம். |
68 |
2653 |
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார், முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால் சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை, ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து? |
69 |
2654 |
அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை, சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே யாதாகில் யாதே இனி? |
70 |
2655 |
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே, தனிநின்ற சார்விலா மூர்த்தி,-பனிநீர் அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு முகத்தான்நின் உந்தி முதல். |
71 |
2656 |
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் மென்பர்-முதல்வா, நிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே, புகரிலகு தாமரையின் பூ? |
72 |
2657 |
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை எல்லாம் பிரானுருவே என்று. |
73 |
2658 |
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால், ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே. புடைதான் பெரிதே புவி. |
74 |
2659 |
புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென் செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,-அவிவின்றி யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாய். உள்ளு. |
75 |
2660 |
உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம், விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள உலகளவு யானும் உளனாவன் என்கொல், உலகளந்த மூர்த்தி. உரை. |
76 |
2661 |
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே, இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம், நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர் சொல்நன்றி யாகும் துணை. |
77 |
2662 |
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், கணைநாணில் μவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, μவாத வூணாக உண். |
78 |
2663 |
உண்ணாட்டுத் தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே, விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப் பேராயற் காளாம் பிறப்பு? |
79 |
2664 |
பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும் இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம் ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான் பாதமே யேத்தாப் பகல்? |
80 |
2665 |
பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத் தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என் றோரார், செழும்பரவை மேயார் தெரிந்து. |
81 |
2666 |
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில் அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தா தயர்ந்து. |
82 |
2667 |
அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன் உயப்போம் நெறியிதுவே கண்டாய், செயற்பால அல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன் மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து. |
83 |
2668 |
வாழ்த்தி அவனடியைய்ப் பூப்புனைந்து, நிந்தலையைத் தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி, எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே, தங்கத்தா னாமேலும் தங்கு. |
84 |
2669 |
தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து, எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத் தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்? |
85 |
2670 |
கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான், பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை, என்நினைந்து போக்குவரிப் போது? |
86 |
2671 |
இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் மெய்கழலே ஏத்த முயல். |
87 |
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - நெஞ்சே, நெஞ்சமே, கண்டாய், யாதானும், வெந்நரகில், வல்வினையார், நன்னெஞ்சே, கண்ணன், காப்பதற்கு, செங்கண்மால், சேராமல், சொன்னேன், நேமியான், பாரிடம், தண்டுழாய், மேயார், சீர்க்கும், தமக்கடிமை, அவனாம், ஈன்துழாய், மாயனையே, காண்தோறும், கலந்து, மண்ணளந்தான், மூர்த்தி, எல்லாம், மேலும், தாழ்விசும்பின், என்னெஞ்சே, என்னுடைய, அதன்றே, நோக்காது, வைகுந்த, கண்வளரும், மிகவாய்ந்து, தானோர், காட்டும், நெஞ்சினார், மாலார், ஏபாவம், செயற்பால, என்னால், முந்துற்ற, முயற்றி, நம்மாழ்வார், இவையன்றே, இன்னுயிரை, வாழ்த்துவதே, அடித்து, முத்தோ, ஆழியான், காருருவம், திருவந்தாதி, வானோர், தம்முடைய, யாரறிவார், மேலால், ஆதானும், செவ்வே