முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பெருமாள் திருமொழி தனியன்கள்
உடயவர் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் குலசே கரனென்றே கூறு |
மணக்கால் நம்பி அருளிச் செய்தது
கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே |
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ: குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
647 |
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் |
1 |
648 |
வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் |
2 |
649 |
எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் |
3 |
650 |
மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் |
4 |
651 |
இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத் துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால் மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென் |
5 |
652 |
அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித் களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக் ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென் |
6 |
653 |
மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி துறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் |
7 |
654 |
கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி |
8 |
655 |
தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும் போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் |
9 |
656 |
வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச் அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் |
10 |
657 |
திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள் நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் |
11 |
சந்தக் கலி விருத்தம்
658 |
தேட்டரும்திறல் தேனினைத்தென் வாட்டமில்வன மாலைமார்வனை ஆட்டமேவி யலந்தழைத்தயர் ஈட்டம்கண்டிடக் கூடுமேலது |
1 |
659 |
தோடுலாமலர் மங்கைதோளிணை நீடுமாமரம் செற்றதும்நிரை ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் |
2 |
660 |
ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் மாறடர்த்ததும் மண்ணளந்ததும் ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் |
3 |
661 |
தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன நாத்தழும்பெழ நாரணாவென்ற தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி |
4 |
662 |
பொய்சிலைக்குர லேற்றெருத்தமி செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் |
5 |
663 |
ஆதியந்தம னந்தமற்புதம் பாதமாமலர் சூடும்பத்தியி தீதில்நன்னெரி காட்டியெங்கும் காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் |
6 |
664 |
காரினம்புரை மேனிநல்கதிர் ஆரமார்வ னரங்கனென்னும் சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக வாரநிற்பவர் தாளிணைக்கொரு |
7 |
665 |
மாலையுற்றக டல்கிடந்தவன் மாலையுற்றவ ரைப்பெருந்திரு மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு |
8 |
666 |
மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் அத்தனச்ச னரங்கனுக்கடி பித்தராமவர் பித்தரல்லர்கள் |
9 |
667 |
அல்லிமாமலர் மங்கைநாதன் எல்லையிலடி மைத்திறத்தினில் கொல்லிகாவலன் கூடல்நாயகன் சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் |
10 |
கலி விருத்தம்
668 |
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான் ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே . |
1 |
669 |
நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும் ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான் ஆலியா அழையா அரங்கா வென்று மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே . |
2 |
670 | மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும் பாரி னாரொடும் கூடுவ தில்லையான் ஆர மார்வ னரங்க னனந்தன்நல் நார ணன்நர காந்தகன் பித்தனே . |
3 |
671 |
உண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம் மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான் அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே . |
4 |
672 |
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய் நீதி யாரொடும் கூடுவ தில்லையான் ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப் பேதை மாமண வாளன்றன் பித்தனே . |
5 |
673 |
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன் உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன் தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர் எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே . |
6 |
674 |
எத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச் சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே . |
7 |
675 |
பேய ரேயெனக் கியாவரும் யானுமோர் பேய னேயெவர்க் கும்இது பேசியென் ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே . |
8 |
676 |
அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய் கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல் இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே . |
9 |
தாவு கொச்சகக் கலிப்பா
677 |
ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன் ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால் கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே . |
1 |
678 |
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே . |
2 |
679 |
பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும் துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல் மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே . |
3 |
680 |
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள் கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே . |
4 |
681 |
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே . |
5 |
682 |
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும் அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன் தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே . |
6 |
683 |
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே . |
7 |
684 |
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும் முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே . |
8 |
685 |
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே . |
9 |
686 |
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன் அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன் செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே . |
10 |
687 |
மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன் பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே . |
11 |
தரவு கொச்சகக் கலிப்பா
688 |
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே . |
1 |
689 |
கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும் கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல் விண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே . |
2 |
690 |
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன் பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே . |
3 |
691 |
வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே . |
4 |
692 |
வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால் எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே . |
5 |
693 |
செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால் வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன் அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே . |
6 |
694 |
எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல் மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே . |
7 |
695 |
தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல் மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன் புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே . |
8 |
696 |
நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே . |
9 |
697 |
விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும் மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே . |
10 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
698 |
ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் மார்வு தழுவுதற் காசையின்மை கூர்மழை போல்பனிக் கூதலெய்திக் வார்மணற் குன்றில் புலரநின்றேன் |
1 |
699 |
கொண்டையொண் கண்மட வாளொருத்தி கண்டுஒல்லை நானும் கடைவனென்று வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் |
2 |
700 |
கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் மருவி மனம்வைத்து மற்றொருத்திக் புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே |
3 |
701 |
தாய்முலைப் பாலி லமுதிருக்கத் பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு ஆய்மிகு காதலோடு யானிருப்ப நீமிகு போகத்தை நன்குகந்தாய் |
4 |
702 |
மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் |
5 |
703 |
மற்பொரு தோளுடை வாசுதேவா இற்றை யிரவிடை யேமத்தென்னை அற்றை யிரவுமோர் பிற்றைநாளும் எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய் |
6 |
704 |
பையர வின்னணைப் பள்ளியினாய் மையரி யொண்கண்ணி னாருமல்லோம் செய்ய வுடையும் திருமுகமும் பொய்யொரு நாள்பட்ட தேயமையும் |
7 |
705 |
என்னை வருக வெனக்குறித்திட் மன்னி யவளைப் புணரப்புக்கு பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் இன்னமென் கையகத் தீங்கொருநாள் |
8 |
706 |
மங்கல நல்வன மாலைமார்வில் பொங்கிள வாடை யரையில்சாத்திப் கொங்கு நறுங்குழ லார்களோடு எங்களுக் கேயொரு நாள்வந்தூத |
9 |
707 |
அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன் எல்லிப் பொழுதினி லேமத்தூடி கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும் |
10 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
708 |
ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ ஏல வார்குழ லென்மகன் தாலோ தாலொ லித்திடும் திருவினை யில்லாத் |
1 |
709 |
வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண் முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ |
2 |
710 |
முந்தை நன்முறை யுன்புடை மகளிர் எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ் நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா |
3 |
711 |
களிநி லாவெழில் மதிபுரை முகமும் தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த |
4 |
712 |
மருவு நின்திரு நெற்றியில் சுட்டி தருத லும்,உன்றன் தாதையைப் போலும் விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் |
5 |
713 |
தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன் வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும் உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன் |
6 |
714 |
குழக னேஎன்றன் கோமளப் பிள்ளாய் ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல் மழலை மென்னகை யிடையிடை யருளா எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கந் |
7 |
715 |
முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும் எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும் அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும் தொழுகை யுமிவை கண்ட அசோதை |
8 |
716 |
குன்றி னால்குடை கவித்ததும் கோலக் கன்றி னால்விள வெறிந்ததும் காலால் வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம் ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன் |
9 |
717 |
வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய் தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன் |
10 |
718 |
மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை எல்லை யில்பிள்ளை செய்வன காணாத் கொல்லி காவலன் மாலடி முடிமேல் நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள் |
11 |
தரவு கொச்சகக் கலிப்பா
719 |
மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர் கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ . |
1 |
720 |
புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தய் கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ . |
2 |
721 |
கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ . |
3 |
722 |
தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன் மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள் காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ . |
4 |
723 |
பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ . |
5 |
724 |
சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ . |
6 |
725 |
ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ . |
7 |
726 |
மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ . |
8 |
727 |
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ . |
9 |
728 |
தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ . |
10 |
729 |
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே . |
11 |
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
730 |
வன்தாளி னிணைவணங்கி வளநகரம் நின்றாயை அரியணைமே லிருந்தாயை என்றாள்,எம் இராமாவோ உனைப்பயந்த நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் |
.1 |
731 |
வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை மைவாய களிறொழிந்து தேரொழிந்து நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ |
2 |
732 |
கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ |
3 |
733 |
வாபோகு வாஇன்னம் வந்தொருகால் வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் |
4 |
734 |
பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் |
5 |
735 |
அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே கைம்மாவின் நடையன்ன மென்னடையும் எம்மானை யென்மகனை யிழந்திட்ட |
6 |
736 |
பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் காமரெழில் விழலுடுத்துக் கலனணியா ஏமருதோ ளென்புதல்வன் யானின்று தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே |
7 |
737 |
பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில் |
8 |
738 |
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி உன்னையுமுன் னருமையையு முன்மோயின் என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் |
9 |
739 |
தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும் கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கானகமே மிகவிரும்பி நீதுறந்த வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் |
10 |
740 |
ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான் கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் |
.11 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
741 |
அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை |
1 |
742 |
வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த |
2 |
743 |
செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை |
3 |
744 |
தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற |
4 |
745 |
வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத் தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் |
5 |
746 |
தனமருவு வைதேகி பிரிய லுற்றுத் வனமருவு கவியரசன் காதல் கொண்டு சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை |
6 |
747 |
குரைகடலை யடலம்பால் மறுக வெய்து எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் |
7 |
748 |
அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் |
8 |
749 |
செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத் திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத் உறைவானை மறவாத வுள்ளந் தன்னை |
9 |
750 |
அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி வென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத் என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும் |
10 |
751 |
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் |
11 |
குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - திருச்சித்ர, தன்னுள், தில்லைநகர்த், தாலேலோ, விற்றுவக்கோட், கொள்ளும், கணபுரத்தென், கருமணியே, தரவணையில், விருத்தம், னாவேனே, இராகவனே, றன்னைத், என்றுகொலோ, தில்லையான், ஆசிரிய, கழிநெடிலடி, கொண்டு, சோலைத், தமிழ்மாலை, காஎன்ற, ழைக்கின்றேன், னேஅரங், எம்பெருமான், பெருமாள், சேகரன், திருவேங், டம்மானே, கரஞ்சொன்ன, பித்தனே, கொச்சகக், கலிப்பா, வண்டினங்கள், யான்வேண்டேன், படைத்தவனே, வென்றி, குடைக்குலசே, குலமதலாய், கடமலைமேல், சிலைவலவா, செய்திடினும், வல்லார், திருவரங்க, னடியேனே, நிற்கும், தாமரைக், எண்சீர்க், நின்னையே, வாழும், வொள்வாள், டம்மாநீ, செஞ்சிறு, மதிள்புடைசூழ், தங்கள், லனைத்தும், கண்டிடப், வாயிடை, கன்னிநன்மா, மின்றே, முகமும், புலம்பல், பெற்றிலே, எழில்கொள், பெற்றிலேன், கண்ணால், யின்பத்தை, போலும், திறல்விளங்கு, தாசரதீ, சிலைவாங்கி, கோழியர்கோன், சொற்கேட்ட, செற்றாய், வல்வினையேன், மனமுருக்கும், கரஞ்சொற், விண்முழுது, ரிணையடியே, வம்மான், கண்குளிரக், மீந்து, யிராமன், நெடுங்கானம், வேல்வலவன், கோசலைதன், மடைந்தவனே, தாடகைதன், கொன்று, குந்தத், வாங்கி, கதிபதியே, கொல்லி, யழித்தவனே, தயரதன்றன், மதிளிலங்கை, வாலியைகொன், தாம்வாழும், தேற்றி, பன்னியநூல், தொண்டர், யேத்தி, யெய்தி, யில்லாத், திருமுகமும், துறந்து, நாளும், சீரார்ந்த, யார்கள்தம், நெஞ்சமே, ரணனடிக்கீழ், நலந்திகழ்நா, பத்தும், சென்று, யென்றுகொலோ, குலசேகரப்பெருமாள், திருவடிகளே, காவலன், செய்தது, திருமொழி, அருளிச், ளார்ந்த, னென்னும், மணிமாட, கொண்டென், யின்பத், அணியரங்கத், பொன்னி, மானுக்கே, னெஞ்சமே, டம்மாஎன், மாயத்தால், யாகிலுமுன், பத்தர்களே, பண்பாடும், பாங்காய, டாவிடினும், டம்மாஉன், உன்றன், நானும், அறுசீர்க், தான்வேண்டி, எத்தனையும், பிரமனு, சடையானும், பேய்முலை, யாரொடும், வென்று, மாலுக்கே, தன்னொடும், தேனென்றன், னாயொழிந், தேனெம்பி, வானாளும், தேனார்பூஞ், வேங்கடத்து, செல்வத், ரானுக்கே, வாயும்