முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி நான்காம்
பத்து
1248 |
போதலர்ந்த பொழில்சோலைப் தாதுதிர வந்தலைக்கும் மாதவன்றா னுறையுமிடம் தேதெனவென் றிசைபாடும் |
1.1 |
1249 |
யாவருமா யாவையுமா மூவருமாய் முதலாய மாவரும்திண் படைமன்னை தேவரும்சென் றிறைஞ்சுபொழில் |
1.2 |
1250 |
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம், ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள் தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே |
1.3 |
1251 |
இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும், எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே |
1.4 |
1252 |
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும் உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம், தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல், திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே |
1.5 |
1253 |
ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம், சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல் சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே |
1.6 |
1254 |
ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம், ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள், சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே |
1.7 |
1255 |
வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான், காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம் ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள், சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே |
1.8 |
1256 |
கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவிழ கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம், வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள், செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே |
1.9 |
1257 |
காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம், சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல் கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார் எரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே |
1.10 |
1258 |
கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ் வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் |
2.1 |
1259 |
பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் |
2.2 |
1260 |
அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன் கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் வண்டு தானிசை பாடிடு நாங்கூர் |
2.3 |
1261 |
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் |
2.4 |
1262 |
சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் ஓட வாணனை யாயிரந் தோள்களும் ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் |
2.5 |
1263 |
அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் |
2.6 |
1264 |
உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் |
2.7 |
1265 |
வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் |
2.8 |
1266 |
இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் குந்தி வாழையின் கொழுங்கனி _கர்ந்துதன் மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் |
2.9 |
1267 |
மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ |
2.10 |
1268 |
பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப, சீரணி மாட நாங்கைநன் னடுவுள் காரணி மேகம் நின்றதொப் பானைக் |
3.1 |
1269 |
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் இறப்பெதிர் காலக் கழிவுமா னானை சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் |
3.2 |
1270 |
திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள் கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் |
3.3 |
1271 |
வசையறு குறளாய் மாவலி வேள்வி அசைவறு மமர ரடியிணை வணங்க திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் |
3.4 |
1272 |
தீமனத் தரக்கர் திறலழித் தவனே. தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் |
3.5 |
1273 |
மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் |
3.6 |
1274 |
வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் |
3.7 |
1275 |
அன்றிய வாண னாயிரம் தோளும் மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை |
3.8 |
1276 |
களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன் உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள் வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை |
3.9 |
1277 |
தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி, ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு |
3.10 |
1278 |
மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் |
4.1 |
1279 |
பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவு கொண்ட பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும் நெல்தொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல் சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த் |
4.2 |
1280 |
படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப் அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த் |
4.3 |
1281 |
வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி காரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும் சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த் |
4.4 |
1282 |
கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப கண்டீர், மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த் |
4.5 |
1283 |
தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் |
4.6 |
1284 |
பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த் |
4.7 |
1285 |
சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு குலுங்க, நில மடந்தைதனை யிடந்து புல்கிக் இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் |
4.8 |
1286 |
ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம் ஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத் சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் |
4.9 |
1287 |
சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் |
4.10 |
1288 |
தூம்புடைப் பனைக்கை வேழம் காம்புடைக் குன்ற மேந்திக் பூம்புனல் பொன்னி முற்றும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் |
5.1 |
1289 |
கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் வவ்விய இடும்பை தீரக் கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் தெய்வநீர் கமழும் நாங்கூர்த் |
5.2 |
1290 |
மாத்தொழில் மடங்கக் செற்று சேத்தொழில் சிதைத்துப் பின்னை நாத்தொழில் மறைவல் லார்கள் தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் |
5.3 |
1291 |
தாங்கருஞ் சினத்து வன்தாள் பூங்குருந் தொசித்துப் புள்வாய் மாங்கனி நுகர்ந்த மந்தி தீங்கனி நுகரும் நாங்கூர்த் |
5.4 |
1292 |
கருமக ளிலங்கை யாட்டி வருமவள் செவியும் மூக்கும் பெருமகள் பேதை மங்கை திருமகள் மருவும் நாங்கூர்த் |
5.5 |
1293 |
கெண்டையும் குறளும் புள்ளும் அண்டமும் சுடரும் அல்ல ஓண்டிறல் தென்ன னோட திண்டிற லாளர் நாங்கூர்த் |
5.6 |
1294 |
குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு, நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை, மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும் தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே . |
5.7 |
1295 |
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும், பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை, பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய, செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே . |
5.8 |
1296 |
பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை, மூவரி லெங்கள் மூர்த்தி இவன், என முனிவரோடு, தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே . |
5.9 |
1297 |
திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார், பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும் வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே |
5.10 |
1298 |
தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு, நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந்தீர்த்தாய், மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே |
6.1 |
1299 |
மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான், விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய் துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய, கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே |
6.2 |
1300 |
உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி, கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரசளித்தாய், பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக் கருத்தனே காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே |
6.3 |
1301 |
முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து, ஆங் கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே, சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக், கனைகழல் காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே |
6.4 |
1302 |
படவர வுச்சி தன்மேல் பாய்ந்துபன்னடங்கள் செய்து, மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே, தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய, கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே |
6.5 |
1303 |
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று, பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய், நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய, கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே |
6.6 |
1304 |
மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி, மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய், பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக் காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களை கணீயே |
6.7 |
1305 |
ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று, காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய், பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே |
6.8 |
1306 |
சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி, அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய், மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை, கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே |
6.9 |
1307 |
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன, பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி, கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே |
6.10 |
1308 |
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய், நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர், திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள் அண்ணா, அடியே னிடரைக் களையாயே |
7.1 |
1309 |
கொந்தார் துளவ மலர்கொன் டணிவானே, நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர், செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள் எந்தாய், அடியே னிடரைக் களையாயே |
7.2 |
1310 |
குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே, நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர் சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள் நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே |
7.3 |
1311 |
கானார் கரிகொம் பதொசித்த களிறே, நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர், தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள் ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே |
7.4 |
1312 |
வேடார் திருவேங் கடம்மேய விளக்கே, நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர், சேடார் பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய், பாடா வருவேன் விணையா யினபாற்றே |
7.5 |
1313 |
கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய், நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச் செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே, எல்லா இடரும் கெடுமா றருளாயே |
7.6 |
1314 |
கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே, நாலா கியவே தியர்மன் னியநாங்கூர், சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள் மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே |
7.7 |
1315 |
வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய், நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர், சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள் ஆரா வமுதே, அடியேற் கருளாயே |
7.8 |
1316 |
பூவார் திருமா மகள்புல் லியமார்பா, நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த் தேவா திருவெள்ளக் குளத்துறை வானே, ஆவா அடியா னிவன், என் றருளாயே |
7.9 |
1317 |
நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச் செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை, கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை, வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே |
7.10 |
1318 |
கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும், காமருசீர்க் குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும், தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும், பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.1 |
1319 |
கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும், வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும், செஞ்சொலாளர் நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.2 |
1320 |
அண்டர்கோனென் னானையென்றும் ஆயர்மாதர் கொங்கைபுல்கு செண்டனென்றும், நான்மறைகள் தேடியோடும் செல்வனென்றும், வண்டுலவு பொழில்கொள்நாங்கை மன்னுமாய னென்றென்றோதி, பண்டுபோலன் றென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.3 |
1321 |
கொல்லையானாள் பரிசழிந்தாள் கோல்வளையார் தம்முகப்பே, மல்லைமுன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயனென்றும், செல்வம்மல்கு மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி, பல்வளையா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.4 |
1322 |
அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற, குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும், மாமதியை நெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி, பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.5 |
1323 |
ஞாலமுற்று முண்டுமிழிந்த நாதனென்றும், நானிலஞ்சூழ் வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும், மேலெழுந்து சேலுகளும் வயல்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பாலின்நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.6 |
1324 |
நாடியென்ற னுள்ளொங்கொண்ட நாதனென்றும், நான்மறைகள் தேடியென்றும் காணமாட்டாச் செல்வனென்றும், சிறைகொள்வண்டு சேடுலவு பொழில்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பாடகம்சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.7 |
1325 |
உலகமேத்து மொருவனென்றும் ஒண்சுடரோ டும்பரெய்தா, நிலவுமாழிப் படையனென்றும் நேசனென்றும், தென்திசைக்குத் திலதமன்ன மறையோர்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பலருமேச வென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.8 |
1326 |
கண்ணனென்றும் வானவர்கள் காதலித்து மலர்கள்தூவும், எண்ணனென்று மின்பனென்றும் ஏழுலுகுக் காதியென்றும், திண்ணமாட நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி, பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே |
8.9 |
1327 |
பாருள்நல்ல மறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளி செங்கண்மாலை, வார்கொள்நல்ல முலைமடவாள் பாடலைந்தாய் மொழிந்தமாற்றம், கூர்கொள்நல்ல வேல்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார், ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள் இன்பம்நாளு மெய்துவாரே |
8.10 |
1328 |
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும்நும்மடியோம், இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்தளூரீரே, எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி, நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே? |
9.1 |
1329 |
சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய மைந்தா, அந்த ணாலி மாலே. சோலை மழகளிறே நந்தா விளக்கின் சுடரே. நறையூர் நின்ற நம்பீ, என் எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. |
9.2 |
1330 |
பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த, மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும் ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும் ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே. |
9.3 |
1331 |
ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத் தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு, காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான் வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே. |
9.4 |
1332 |
தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால், தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்- கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே. |
9.5 |
1333 |
சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார், எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை, நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில், எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. |
9.6 |
1334 |
மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா விட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே, காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த, நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே |
9.7 |
1335 |
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற, பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால், பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி, இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. |
9.8 |
1336 |
எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும், வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால், சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி, இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே |
9.9 |
1337 |
ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை, காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த, சீரா ரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து, ஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே |
9.10 |
1338 |
ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டொருகால் ஆலிலை வளர்ந்தவெம் பெருமான், பேய்ச்சியை முலயுண் டிணைமரு திறுத்துப் பெருநில மளந்தவன் கோயில், காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களி னடுவே, வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளி யங்குடி யதுவே |
10.1 |
1339 |
ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டரக்கர் தம் சிரங்களை யுருட்டி, கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில், பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி, தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே |
10.2 |
1340 |
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன் படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில், படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய், அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே |
10.3 |
1341 |
கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன், பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில், துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால், செறிமணி மாடக் கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே |
10.4 |
1342 |
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து, ஒருகால் தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில், ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென்றெண்ணி, சீர்மலி பொய்கை சென்றணை கின்ற திருவெள்ளி யங்குடி யதுவே |
10.5 |
1343 |
காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை, கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன் கோயில், ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி, சேற்றிடைக் கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே |
10.6 |
1344 |
ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு, தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே |
10.7 |
1345 |
முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர் தம்பெரு மானை,அன் றரியாய் மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில், படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபன் மணிகளி னொளியால், விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே |
10.8 |
1346 |
குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில், கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய, வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே |
10.9 |
1347 |
பண்டுமுன் ஏன மாகியன் றொருகால், பாரிடந் தெயிற்றினில் கொண்டு, தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை, வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள், கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - நாங்கூர்த், நாங்கூர், பார்த்தன்பள்ளி, யங்குடி, யம்பலத்தென், செங்கண், செம்பொன்செய், திருமணிக், னுள்ளே, திருத்தேவ, கோயிலி, வண்புரு, கண்டீர், கோயில், டோத்தமமே, திருவெள்ளி, பாடுவாளே, னார்தொகையே, திருவெள்ளக், னடுவுள், நாங்கைநன், னென்றென்றோதி, வண்ணம், பாடியாய், ளந்தண், நாங்கைக், திருத்தெற்றி, ளூரீரே, குளத்துள், தேவதேவ, கண்டுகொண், மறையோர், பொழில்சூழ், னுறைகோயில், தியர்மன், திகழும், நாங்கை, கொண்டு, திருதெற்றி, புகழ்வே, டுய்ந்தொழிந், துறைகோயில், நாங்கைதன்னுள், துறையுமிடம், பெருமான், காவளம், மணிமாடம், பெருஞ்செல்வத், நீடுநாங்கைத், ளென்மடந்தை, வாழ்ந்தொழிந், மூர்த்தி, புக்கு, வல்லார், தென்கரைமேல், கலியன், துரந்த, கண்ணனே, முற்றும், துயின்ற, தியர்நாங்கூர், காட்டீர், லார்கள், வானவர், திருமேனி, னியநாங்கூர், கொங்கை, சுடரும், வயல்சூழ், னியநாங்கூர்ச், னிடரைக், குளத்துறை, தொழுகும், எந்தாய், றருளாயே, களையாயே, செல்வனென்றும், மென்று, ரானீர், ரறிவீர், பெருமா, யமரர்க், மண்ணியின், பாரினை, பாற்கடல், தென்பால், திதுவே, தன்னுள், மெல்லடியாள், மாயனென்றும், னானையென்றும், கண்ணனென்றும், நான்மறைகள், நாதனென்றும், சிந்தை, ளுய்யோமே, மென்மொழியாள், அடியேற், கமழும், கோனைக், றன்னைநா, பானைக், நின்றதொப், வாழையின், னடியேன், குறளாய், வணங்கிநான், தங்கள், கஞ்சனைக், டல்லல்தீர்ந், ளிலங்கை, சூழ்தரு, கஞ்சனை, சேலுகளும், தெழில்மறையோர், பொழில்புடைசூழ், மலர்பொழில்சூழ், னுறையுமிடம், காரார்திண், ஏராரும், மல்கிய, உகந்தினி, காளியன், பத்தும்வல்லார், கூறுதமிழ், மாண்டு, கண்ணர், தலைவன், கலியன்வா, மங்கையர், மாவும், தன்மேல், யொலிகள், பொய்கை, மறையவர், வாழும், மன்னும், பெருகி, மாவளம், நுகரும், பின்னை, முலைமடவாள், விளங்கு, பொன்னி, வாங்கி, பொல்லாத, மென்றெழுந்தான், சீரணிந்த, வன்தாள், செற்று, தடமண்ணித், எங்கும், வேள்வியில்