முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து
1348 |
அறிவ தரியா னனைத்துலகும் உடையா னென்னை யாளுடையான் குறிய மாணி யுருவாய கூத்தன் மன்னி யமருமிடம், நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே |
1.1 |
1349 |
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய், புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே |
1.2 |
1350 |
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம்துரந்து, மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம், காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும், பூவார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே |
1.3 |
1351 |
வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன், வற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம், கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள், பொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே |
1.4 |
1352 |
மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர், நெய்யார் பாலோ டமுதுசெய்த நேமி யங்கை மாயனிடம், செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும், பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே |
1.5 |
1353 |
மின்னி னன்ன நுண்மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்கா, மன்னு சினத்த மழவிடைகள் ஏழன் றடர்த்த மாலதிடம், மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட, புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே |
1.6 |
1354 |
குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து, சடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம், குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும், புடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே |
1.7 |
1355 |
கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி, இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம், மறையால் மூத்தீ யவைவளர்க்கும் மன்னு புகழால் வண்மையால், பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே |
1.8 |
1356 |
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள், அன்ன மாகி யருமறைகள் அருளிச் செய்த அமலனிடம், மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும், பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே |
1.9 |
1357 |
கற்றா மறித்து காளியன்றன் சென்னி நடுங்க நடம்பயின்ற பொற்றாமரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல் கற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி, சொல்தானீரைந் திவைபாடச் சோர நில்லா துயர்தாமே |
1.10 |
1358 |
தாம்தம் பெருமை யறியார், தூது வேந்தர்க் காய வேந்த ரூர்போல், காந்தள் விரல்மென் கலைநன் மடவார், கூந்தல் கமழும் கூட லூரே |
2.1 |
1359 |
செறும்திண் திமிலே றுடைய, பின்னை பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல், நறுந்தண் தீம் தே னுண்ட வண்டு, குறிஞ்சி பாடும் கூட லூரே |
2.2 |
1360 |
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன் உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல், கள்ள நாரை வயலுள், கயல்மீன் கொள்ளை கொள்ளும் கூட லூரே |
2.3 |
1361 |
கூற்றே ருருவின் குறளாய், நிலநீர் ஏற்றா னெந்தை பெருமா னூர்போல், சேற்றே ருழுவர் கோதைப் போதூண், கோல்தேன் முரலும் கூட லூரே |
2.4 |
1362 |
தொண்டர் பரவச் சுடர்சென் றணவ, அண்டத் தமரும் அடிக ளூர்போல், வண்ட லலையுள் கெண்டை மிளிர, கொண்ட லதிரும் கூட லூரே |
2.5 |
1363 |
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன், துக்கம் துடைத்த துணைவ ரூர்போல், எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும் கொக்கின் பழம்வீழ் கூட லூரே |
2.6 |
1364 |
கருந்தண் கடலும் மலையு முலகும், அருந்தும் அடிகள் அமரு மூர்போல், பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி, குருந்தம் தழுவும் கூட லூரே |
2.7 |
1365 |
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர் மலைவா ழெந்தை மருவு மூர்போல், இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே |
2.8 |
1366 |
பெருகு காத லடியேன் உள்ளம், உருகப் புகுந்த வொருவ ரூர்போல், அருகு கைதை மலர, கெண்டை குருகென் றஞ்சும் கூட லூரே |
2.9 |
1367 |
காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன் மேவித் திகழும் கூட லூர்மேல், கோவைத் தமிழால் கலியன் சொன்ன, பாவைப் பாடப் பாவம் போமே |
2.10 |
1368 |
வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே, மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி, தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே |
3.1 |
1369 |
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய், இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே, உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய், திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே |
3.2 |
1370 |
வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா, கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே, மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள், தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே |
3.3 |
1371 |
வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த, காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின் காதலை யருளெனக்கு, மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த, தீம்ப லங்கனித் தேனது _கர்திரு வெள்ளறை நின்றானே |
3.4 |
1372 |
மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில், ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே எனக் கருள்புரியே, கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற, தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே |
3.5 |
1373 |
பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான், அங்கொ ராமைய தாகிய வாதி.நின் னடிமையை யருளெனக்கு, தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழலணைவான், திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை திரு வெள்ளறை நின்றானே |
3.6 |
1374 |
ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம், வேறு வேறுக வில்லது வளைத்தவ னே எனக் கருள்புரியே, மாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த, தேறல் மாந்திவண் டின்னிசை முரல திரு வெள்ளறை நின்றானே |
3.7 |
1375 |
முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த, அன்ன மாகியன் றருமறை பயந்தவ னே.எனக் கருள்புரியே, மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள், தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே |
3.8 |
1376 |
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும், பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே, ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர, மாவேறித் தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே |
3.9 |
1377 |
மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய, அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை, நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும், எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே |
3.10 |
1378 |
உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன் எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால், சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி, அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே |
4.1 |
1379 |
வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி, பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால், தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை, செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே |
4.2 |
1380 |
பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர் கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால், வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே |
4.3 |
1381 |
விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட, வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால், துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன் திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே |
4.4 |
1382 |
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக, அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால், உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும், நல் செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே |
4.5 |
1383 |
கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென, முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால், குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன் அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே |
4.6 |
1384 |
கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால், துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால், மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர் செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே |
4.7 |
1385 |
ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய், தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால், வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல் தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே |
4.8 |
1386 |
சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய, இம் மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால், வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி, ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே |
4.9 |
1387 |
அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை, கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல், நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன், வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே |
4.10 |
1388 |
வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால், மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல் உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட திருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே . |
5.1 |
1389 |
கலையாளா வகலல்குல் கனவளையும் விலையாளா வடியேனை வேண்டுதியோ மலையாளன் வானவர்த்தம் தலையாளன் சிலையாளன், என் மகளைச் செய்தனகள் |
5.2 |
1390 |
மானாய மென்னோக்கி வாநெடுங்கண் தேனாய நறுந்துழா யலங்கலின் கானாயன் கடிமனையில் தயிருண்டு ஆனாயன், என் மகளைச் செய்தனகள் |
5.3 |
1391 |
தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான் பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட மாமாய னென்மகளைச் செய்தனகள் |
5.4 |
1392 |
பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி, ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் |
5.5 |
1393 |
தாதாடு வனமாலை தாரானோ யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் மாதாளன் குடமாடி மதுசூதன் தூதாளன், என்மகளைச் செய்தனகள் |
5.6 |
1394 |
வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே பேராளன் பேரல்லால் பேசாள் இப் தாராளன் தண்குடந்தை நகராளன் தேராளன், என்மகளைச் செய்தனகள் |
5.7 |
1395 |
உறவாது மிலளென்றென் றொழியாது மறவாதே யெப்பொழுதும் மாயவனே. பிறவாத பேராளன் பெண்ணாளன் அறவாளன், என்மகளைச் செய்தனகள் |
5.8 |
1396 |
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் வந்தானோ திருவரங்கன் வாரானோ சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு அந்தோ.வந் தென்மகளைச் செய்தனகள் |
5.9 |
1397 |
சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் காலவேல் பரகாலன் கலிகன்றி மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் |
5.10 |
1398 |
கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை, மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை, எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த வம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே |
6.1 |
1399 |
பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும், அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே |
6.2 |
1400 |
ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும், தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும் தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால் ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே |
6.3 |
1401 |
வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம், தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப் பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள் அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே |
6.4 |
1402 |
நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன் ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே, பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின், ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே |
6.5 |
1403 |
தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை, வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த, அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே |
6.6 |
1404 |
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார் கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே |
6.7 |
1405 |
துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லச் சமணர்க்கும், அவர்கட்கங் கருளில்லா அருளானை, தன்னடைந்த எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும், அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே |
6.8 |
1406 |
பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து, மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை, மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின், அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே |
6.9 |
1407 |
ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை, காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர் நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும், நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே |
6.10 |
1408 |
பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும், கொடல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும், அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.1 |
1409 |
இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற, தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப் பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம், அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.2 |
1410 |
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் |
7.3 |
1411 |
மாயிருங் குன்ற மொன்றுமத் தாக பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் |
7.4 |
1412 |
எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்குபூ ணகலம், பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் அங்ஙனே யொக்க அரியுரு வானான் |
7.5 |
1413 |
ஆயிரும் குன்றம் சென்றுதொக் கனைய ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் |
7.6 |
1414 |
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் வரிசிலை வளைய அடிசரம் துரந்து அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் |
7.7 |
1415 |
ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் ஆழியா லன்றங் காழியை மறைத்தான் |
7.8 |
1416 |
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென் ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான் |
7.9 |
1417 |
பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த மன்னுமா மாட மங்கையர் தலைவன் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் |
7.10 |
1418 |
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா சுரந்து மாழை மான்மட நோக்கியுன் தோழி, தோழ னீயெனக் கிங்கொழி என்ற ஆழி வண்ணநின்னடியிணை யடைந்தேன் |
8.1 |
1419 |
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு காதல் ஆதரம் கடலினும் பெருகச் கோதில் வாய்மையி னாயொடு முடனே ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் |
8.2 |
1420 |
கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை முடியும் வண்ணமோர் முழுவலி முதலை கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் |
8.3 |
1421 |
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக் வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் |
8.4 |
1422 |
மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் தோகை மாமயி லன்னவ ரின்பம் போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் |
8.5 |
1423 |
மன்னு நான்மறை மாமுனி பெற்ற தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த் பின்னை யென்றும்நின் திருவடி பிரியா அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் |
8.6 |
1424 |
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் காத லென்மகன் புகலிடங் காணேன், கோதில் வாய்மையி னானுனை வேண்டிய ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் |
8.7 |
1425 |
வேத வாய்மொழி யந்தண னொருவன் காதல் மக்களைப் பயத்தலும் காணாள் ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் |
8.8 |
1426 |
துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில் உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் |
8.9 |
1427 |
மாடமாளிகை சூழ்திரு மங்கை ஆடல் மாவல் வன்கலி கன்றி நீடு தொல்புக ழாழிவல் லானை பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர். |
8.10 |
1428 |
கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன், பொய்யிலன் மெய்யன் தந்தாள் அடைவரே லடிமை யாக்கும், செய்யலர் கமல மோங்கு செறிபொழில் தென்தி ருப்பேர் பையர வணையான் நாமம் பரவிநா னுய்ந்த வாறே |
9.1 |
1429 |
வங்கமார் கடல்க ளேழும் மலையும்வா னகமும் மற்றும், அங்கண்மா ஞால மெல்லாம் அமுதுசெய் துமிழ்ந்த எந்தை, திங்கள்மா முகில்அ ணவு செறிபொழில் தெந்தி ருப்பேர், எங்கள்மா லிறைவன் நாமம் ஏத்திநா னுய்ந்த வாறே |
9.2 |
1430 |
ஒருவனை யுந்திப் பூமேல் ஓங்குவித் தாகந் தன்னால், ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் , என்று விட்டான், பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவ ணைமேல் கருவரை வண்ணன் தென்பேர் கருதிநா னுய்ந்த வாறே |
9.3 |
1431 |
ஊனமர் தலையொன் றேந்தி உலகெலாம் திரியு மீசன் ஈனமர் சாபம் நீக்காய், என்னவொண் புனலை யீந்தான், தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறிவயல் தென்தி ருப்பேர், வானவர் தலைவன் நாமம் வாழ்த்திநா னுய்ந்த வாறே |
9.4 |
1432 |
வக்கரன் வாய்முன் கீண்ட மாயவனே என்று வானேர் புக்கு, அரண் தந்த ருள்வாய், என்னப்பொன் னாகத் தானை, நக்கரி யுருவ மாகி நகங்கிளர்ந் திடந்து கந்த, சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன்தா ளடைந்துய்ந் தேனே |
9.5 |
1433 |
விலங்கலால் கடல டைத்து விளங்கிழை பொருட்டு, வில்லால், இலங்கைமா நகர்க்கி றைவன் இருபது புயம்து ணித்தான், நலங்கொள்நான் மறைவல் லார்கள் ஒத்தொலி யேத்தக் கேட்டு மலங்குபாய் வயல்தி ருப்பேர் மருவிநான் வாழ்ந்த வாறே |
9.6 |
1434 |
வெண்ணெய்தா னமுது செய்ய வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி, கண்ணியர் குறுங்க யிற்றால் கட்டவெட் டென்றி ருந்தான், திண்ணமா மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள், வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய்மொழிந் துய்ந்த வாறே |
9.7 |
1435 |
அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள், கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான், செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும், எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே |
9.8 |
1436 |
நால்வகை வேத மைந்து வேள்வியா றங்கம் வல்லார், மேலைவா னவரின் மிக்க வேதிய ராதி காலம், சேலுகள் வயல்தி ருப்பேர்ச் செங்கண்மா லோடும் வாழ்வார், சீலமா தவத்தர் சிந்தை யாளியென் சிந்தை யானே |
9.9 |
1437 |
வண்டறை பொழில்தி ருப்பேர் வரியர வணையில் பள்ளி கொண்டுறை கின்ற மாலைக் கொடிமதிள் மாட மங்கை, திண்டிறல் தோள்க லியன் செஞ்சொலால் மொழிந்த மாலை, கொண்டிவை பாடி யாடக் கூடுவார் நீள்வி சும்பே |
9.10 |
1438 |
தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி சும்பு மவையாய், மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் |
10.1 |
1439 |
உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன் மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர் நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம் |
10.2 |
1440 |
உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் |
10.3 |
1441 |
பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென வந்த அசுரர் இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் |
10.4 |
1442 |
மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென வந்த அசுரர், தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை யங்கை யுடையான், நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் |
10.5 |
1443 |
தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி லார்பு றவுசேர், நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் |
10.6 |
1444 |
தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல் எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள் நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம் |
10.7 |
1445 |
எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி யாளர் திருவார், பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு கூட எழிலார், மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள் நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் |
10.8 |
1446 |
வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக மிக்க பெருநீர், அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம் |
10.9 |
1447 |
நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள் |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - நந்திபுர, விண்ணகரம், நகரமர்ந், வெள்ளறை, அரங்கமா, ழில்திரு, வரங்கத்தம், புள்ளம், னரங்கமே, னரங்கத்தே, குடிதானே, நின்றானே, மென்பரால், செய்தனகள், யடைந்தேன், கருள்புரியே, கண்டதுதென், ருப்பேர், கின்றநகர், னுய்ந்த, சூழ்ந்த, அம்மனைமீரறிகி, சூழ்திரு, என்னும், எங்ஙனம்நான், பெருமான், என்மகளைச், ரூர்போல், யான்கண்ட, நகர்தான், எனக்கும், மணியும், நீண்முடி, சிந்தை, காவிரி, முனநாள், நாளும், தலைவன், பின்னை, கலிகன்றி, றடியிணை, எம்பெருமான், மதிள்கள், ஒருகால், வானவர், மன்னுமா, மலைகளும், நிலனும், லுண்டானைக், தணிநீர்த்தென், விசும்பும், ஆயிரந், மணிமுடி, ஆயிரம், லலைகடல், துரந்து, வாய்மையி, வயல்தி, ஏத்திநா, தென்தி, செறிபொழில், தென்திருப், பேருள், மழைதவழும், அசுரர், தகைசேர், மார்வர், அடியிணை, லால்வந்துன், வேண்டுமென், கோதில், உகந்து, றொழிந்திலை, தறிந்து, வந்துநின், கொடுத்தாய், னொருவன், சரணெனச், மற்றவற், சாந்தணியாள், தயிருண்டு, உள்ளம், பிள்ளை, பாடும், முத்தும், கூந்தல், புகுந்த, கெண்டை, வண்ணன், நான்மறை, பெருநீர், மூர்போல், கடலும், வேயின், மண்ணும், மாலதிடம், தெங்கின், பிளந்து, குறளாய், எழிலார், யெழிலாரும், விறல்வா, விலங்கல், கையில், தடந்தோள், வல்வில், துணித்த, பயந்தவ, யருளெனக்கு, மலர்மேல், திருவரங்க, ஆனாயன், நந்தன், காண்மின், மெங்கே, பேணாள், மாயவனே, வல்லார், யிற்றால், பேராளன், பூமேல், சோரும், வளையும், கன்றிசொல், அழகார்தென், வன்கலி, டின்னிசை, மாகியன், விரிசூழ்தென், தன்னால், கேன்நான், மகளைச், சிந்திக், வேங்கடமே, வணங்கும், திருமாலை