முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவாய் மொழி பத்தாம் பத்து
3783 |
தாள தாமரைத் தடமணி வயல் திரு மோகூர் நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய் காள மேகத்தை யன் றிமற் றொன் றிலம் கதியே. |
1.1 |
3784 |
இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின் அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான் நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர் நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. |
1.2 |
3785 |
அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர் நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. |
1.3 |
3786 |
இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர் இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர். வம்மினே. |
1.4 |
3787 |
தொண்டீர். வம்மின்நம் சுடரொளி யொருதனி முதல்வன் அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர் எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே. |
1.5 |
3888 |
கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நங்கடகும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர் ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே. |
1.6 |
3789 |
மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர் சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ. |
1.7 |
3790 |
துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின் உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர் பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே. |
1.8 |
3791 |
மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய் அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும் துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே. |
1.9 |
3792 |
நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர் தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால் காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர் நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள். |
1.10. |
3793 |
ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல் வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே. |
1.11 |
3794 |
கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே. |
2.1 |
3795 |
இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம் ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. |
2.2 |
3796 |
ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான் சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில் தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம் பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. |
2.3 |
3797 |
பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம் நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. |
2.4 |
3798 |
புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால் திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். |
2.5 |
3799 |
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர் நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும் குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. |
2.6 |
3800 |
துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும் படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான் மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. |
2.7 |
3801 |
கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம். |
2.8 |
3802 |
நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. |
2.9 |
3803 |
மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும் ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. |
2.10. |
3804 |
அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில் பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. |
2.11 |
3805 |
வேய்மரு தோளிணை மெலியு மாலோ. மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா காமரு குயில்களும் கூவு மாலோ. கணமயில் அவைகலந்தாலு மாலோ ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு ஒருபக லாயிர மூழி யாலோ தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ. தகவிலை தகவிலையே நீ கண்ணா. |
3.1 |
3806 |
தகவிலை தகவிலை யேநீ கண்ணா. தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே அகவுயிர் அகமதந்தோறும் உள்புக் காவியின் பரமல்ல வேட்கை யந்தோ மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால் வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே. |
3.2 |
3807 |
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால் யாவரும் துணையில்லை யானி ருந்துன் அஞ்சன மேனியை யாட்டம் காணேன் போவதன் றொருபகல் நீய கன்றால் பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப் பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே. |
3.3 |
3808 |
தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந் தா நின் தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித் துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம் பாவியேன் மனமகந் தோறு முள்புக் கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி நினை தொறும் ஆவி வேமால். |
3.4 |
3809 |
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெருமத மாலையும் வந்தின் றாலோ மணிமிகு மார்வினில் முல்லைப் போதென் வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து அணிமிகு தாமரைக் கையை யந்தோ. அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய். |
3.5 |
3810 |
அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய் ஆழியங் கண்ணா. உன் கோலப் பாதம் பிடித்தது நடுவுனக் கரிவை மாரும் பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம் வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே. |
3.6 |
3811 |
வேமெம துயிரழல் மெழுகில் உக்கு வெள்வளை மேகலை கழன்று வீழ தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத் தூணைமுலை பயந்து என தோள்கள் வாட மாமணி வண்ணா உன்செங்கமல வண்ணமென் மலரடி நோவ நீபோய் ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? |
3.7 |
3812 |
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல் கசிகையும் வேட்கையும் உள்க லந்து கலவியும் நலியுமென் கைகழி யேல் வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ உகக்குநல் லவரொடும் உழித ராயே. |
3.8 |
3813 |
உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன் திருவுள்ளம் இடர்கெடுந் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றோம் எம்பெரு மான். பசு மேய்க்கப் போகேல் மிதப்பல அசுரர்கள் வேண்டும் உருவங் கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. |
3.9 |
3814 |
அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத் தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கு இராமனையும் உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று ஊடுற வென்னுடை யாவிவேமால் திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே. |
3.10. |
3815 |
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு அத்திருவடி திருவடி மேல் பொ ருநல் சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண்சட கோபன்சொல் லாயி ரத்துள் மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல் அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான் உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே. |
3.11 |
3816 |
சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள், கார்மேக வண்ணன் கமல நயனத்தன், நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான், பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே. |
4.1 |
3817 |
பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற் கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும் திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும் இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே. |
4.2 |
3818 |
ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்? மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம், வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன் கேள்வன், தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே. |
4.3 |
3819 |
தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே. |
4.4 |
3820 |
நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன் நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே. |
4.5 |
3821 |
நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை மாகத் திள மதியம் சேரும் சடையானை பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே. |
4.6 |
3822 |
பணிநெஞ்சே. நாளும் பரம பரம்பரனை பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும் மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான் அணிநின்ற செம்பொன் அடலாழி யானே. |
4.7 |
3823 |
ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியா னூழி படைத்தான் நிரைமேய்த்தான் பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள் வாழியென் நெஞ்சே. மறவாது வாழ்கண்டாய். |
4.8 |
3824 |
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே யொழிந்த வினையா யினவெல்லாம் தொண்டேசெய் தென்றும் தொழுது வழியொழுக பண்டே பரமன் பணித்த பணிவகையே. |
4.9 |
3825 |
வகையால் மனமொன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புதுமலரால் நீரால் திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே. |
4.10. |
3826 |
பற்றென்று பற்றிப் பரம பரமபரனை மற்றிண்டோ ள் மாலை வழுதி வளநாடன் சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும் கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே. |
4.11 |
பத்து வகை பத்தியும் பிரபத்தியும்
3827 |
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே. |
5.1 |
3828 |
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே. |
5.2 |
3829 |
தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே. |
5.3 |
3830 |
ஆள்வான் ஆழிநீர் கோள்வாய அரவணையான் தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீரே. |
5.4 |
3831 |
நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே. |
5.5 |
3832 |
மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன் பேயார் முலையுண்ட வாயான் மாதவனே. |
5.6 |
3833 |
மாதவன் என்றென்று ஓத வல்லீரேல் தீதொன்று மடையா ஏதம் சாராவே. |
5.7 |
3834 |
சாரா ஏதங்கள் நீரார் முகில்வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே. |
5.8 |
3835 |
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே. |
5.9 |
3836 |
வினைவல் இருளென்னும் முனைகள் வெருவிப்போம் சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே. |
5.10. |
3837 |
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே. |
5.11 |
3838 |
அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன் மருளொழிநீ மடநெஞ்சே. வாட்டாற்றான் அடிவணங்கே. |
6.1 |
3839 |
வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மடநெஞ்சே. கேசவனெம் பெருமானை பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. |
6.2 |
3840 |
நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்தின்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே. |
6.3 |
3841 |
என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான் நன்னெஞ்சே. நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. |
6.4 |
3842 |
வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றென் நரகத்தை நகுநெஞ்சே தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. |
6.5 |
3843 |
தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான் நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான் மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க கொலையானை மருப்பொசித்தான் குரைகழல்தள் குறுகினமே. |
6.6 |
3844 |
குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல் விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. |
6.7 |
3845 |
மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன் கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல் மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? |
6.8 |
3846 |
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான் இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. |
6.9 |
3847 |
பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான் அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. |
6.10. |
3848 |
காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. |
6.11 |
3849 |
செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என் நெஞ்சு முயிரு முள்கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே. |
7.1 |
3850 |
தானே யாகி நிறைந்தெல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யானென் பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே. |
7.2 |
3851 |
என்னை முற்றும் உயிருண்டென் மாய ஆக்கை யிதனுள்புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் தென்னன் திருமா லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் தேர்ந்தயான் இன்னம் போவே னேகொலோ. எங்கொல் அம்மான் திருவருளே? |
7.3 |
3852 |
என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய் நன்கென் னுடலம் கைவிடான் ஞாலத் தூடே நடந்துழக்கி தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே. |
7.4 |
3853 |
நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த எண்ணா தனகள் எண்ணும்நன் முனிவ ரின்பம் தலைசிறப்ப பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே. |
7.5 |
3854 |
திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூ வுலகும் தன் ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து ஊழி யூழி தலையளிக்கும் திருமாலென்னை யாளுமால் சிவனும் பிரமனும்காணாது அருமா லெய்தி யடிபரவ அருளை யீந்த அம்மானே. |
7.6 |
3855 |
அருளை ஈயென் அம்மானே. என்னும் முக்கண் அம்மானும் தெருள்கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே. |
7.7 |
3856 |
திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே. |
7.8 |
3857 |
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும் ஆழி வண்ணன் என்னம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே. |
7.9 |
3858 |
மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம் இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே. |
7.10. |
3859 |
மானாங்கார மனம்கெட ஐவர் வன்கை யர்மங்க தானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானை தேனாங் காரப் பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள் மானாங்காரத்திவைபத்தும் திருமாலிருங்சோலைமலைக்கே. |
7.11 |
3860 |
திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால் திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே. |
8.1 |
3861 |
பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும் ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே. |
8.2 |
3862 |
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன் மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான் அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே. |
8.3 |
3863 |
எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன் கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான் தெளிதா கியசேண் விசும்புதரு வானே. |
8.4 |
3864 |
வானே தருவா னெனக்காயென் னோடொட்டி ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே. |
8.5 |
3865 |
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் பொருப்பே யுறைகின் றபிரானின்றுவந்து இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே. |
8.6 |
3866 |
உண்டு களித்தேற் கும்பரென் குறை மேலைத் தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன் வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான் கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே. |
8.7 |
3867 |
கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன் எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான் திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ. |
8.8 |
3868 |
இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான் அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்? குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான் ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே. |
8.9 |
3869 |
உற்றே னுகந்து பணிசெய் துனபாதம் பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய் கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே. |
8.10. |
3870 |
நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல் நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும் வல்லார் தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே. |
8.11 |
3871 |
சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன் வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே. |
9.1 |
3872 |
நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில் பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில் நீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத் தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே. |
9.2 |
3873 |
தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை பொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள் வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே. |
9.3 |
3874 |
எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர் அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே. |
9.4 |
3875 |
மாதவன் தமரென்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே. |
9.5 |
3876 |
வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர் ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே. |
9.6 |
3877 |
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல் கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே. |
9.7 |
3878 |
குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர் வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே. |
9.8 |
3879 |
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர் வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. |
9.9 |
3880 |
விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே. |
9.10. |
3881 |
வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல் சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே. |
9.11 |
3882 |
முனியே. நான்முக னே.முக்கண் ணப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே. என்கள்வா தனியேன் ஆருயிரே. என் தலை மிசையாய் வந்திட்டு இனிநான் போகலொட் டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே. |
10.1 |
3883 |
மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ. |
10.2 |
3884 |
கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என் பொல்லாக்கரு மாணிக்கமே ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றி லேன்யான் மேவித் தொழும்பிரமன் சிவன் இந்திர னாதிக்கெல்லாம் நாவிக் கமல முதற்கிழங்கே. உம்பர் அந்ததுவே. |
10.3 |
3885 |
உம்ப ரந்தண் பாழேயோ. அதனுள்மிசை நீயேயோ அம்பர நற்சோதி. அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன்நீ எம்பரம் சாதிக்க லுற்றென்னைப் போரவிட் டிட்டாயே. |
10.4 |
3886 |
போரவிட் டிட்டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான் ஆரைக்கொண் டெத்தையந்தோ. எனதென்பதென் யானென்பதென் தீர இரும்புண்ட நீரது போலவென் ஆருயிரை ஆரப் பருக,எனக்கு ஆராவமுதானாயே. |
10.5 |
3887 |
எனக்கா ராவமு தாயென தாவியை இன்னுயிரை மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா யினியுண் டொழியாய் புனக்கா யாநிறத்த புண்டரீ கக்கட்f செங்கனிவாய் உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக் கன்பா..என் அன்பேயோ. |
10.6 |
3888 |
கோல மலர்ப்பாவைக் கன்பா கியவென் அன்பேயோ நீல வரையிரண்டு பிறைகவ்வி நிமிர்ந்த தொப்ப கோல வராகமொன் றாய்நிலங் கோட்டிடைக் கொண்டேந்தாய் நீலக் கடல்கடைந் தாயுன்னைப் பெற்றினிப் போக்குவனோ? |
10.7 |
3889 |
பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய் முற்றவிம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில்புக்கு முற்றக் கரந்தொளித் தாய்.என் முதல்தனி னித்தேயோ. |
10.8 |
3890 |
முதல்தனி வித்தேயோ. முழுமூ வுலகாதிக் கெல்லாம் முதல்தனி யுன்னையுன்னை எனைநாள் வந்து கூடுவன்நான் முதல்தனி அங்குமிங்கும் முழுமுற் றுறுவாழ் பாழாய் முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவி லீயோ. |
10.9 |
3891 |
சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ சூழ்ந்தத னில்பெரிய பரநன் மலர்ச்சோ தீயோ சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான வின்ப மேயோ சூழ்ந்தத னில்பெரிய என்னவா அறச்சூழ்ந் தாயே. |
10.10. |
3892 |
அவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன அவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த அவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே. |
10.11 |
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - மோகூர், வாட்டாற்றான், நாளும், மேய்க்கப், அம்மான், முதல்தனி, பசுநிரை, மாதவன், அசுரர்கள், திருமாலிருஞ்சோலை, பேரான், சூழ்திருப், புகுந்தான், தாமரைக், சடகோபன், என்னம்மான், முற்றும், செங்கனி, அந்தமில், நெஞ்சு, உயிரும், தனிமையும், கண்ணிணை, தகவிலை, தானேயாய், முதல்வன், சூழ்ந்தத, னில்பெரிய, வானவர், நிறையப், முனிவரும், வான்திரு, நில்லா, வேமால், அசுரர், திருமாலிருஞ்சோலையானே, முக்கண், கடியும், பிரமன், அம்மானும், என்னும், அம்மானே, பாம்பணைப், மெய்ந்நின்று, கோவிந்தன், தெப்பொழுதும், என்னெஞ்சத், திகழ்கின்ற, திருமா, கைவிடான், திருமாலிருஞ்சோலைமலையே, தன்னைத், உலகும், நங்கள், பெற்றேன், போரவிட், மலர்ப்பாவைக், மாணிக்கமே, வைகுந்தம், எதிர்கொள்ள, அன்பேயோ, பெற்றினிப், அவாவிலந், சூழ்ந்தகன், என்றென், போக்குவனோ, குடியடி, மடந்தையர், நாரணனை, திருப்பேர், தேவரும், மானாங்கார, கண்ணுள்நின், குருகூர்ச், வேள்வியுள், எமதிடம், வாசலில், தொழுதனர், ஒருவனே, ஆழியான், தொழுத்தையோம், பணிமொழி, நீரும், போக்கு, கூர்ச்சட, அடிச்சி, யோம்தலை, மெழுகில், வாய்த்த, யாற்றோம், யணியாய், மிசைநீ, தொறும், ஆயிரத், அனந்தபுரத்து, துடைத்தகோ, புண்ணியம், மலர்கள்தூவி, அறியச்சொன்னோம், விந்தனாரே, கடுவினை, கொந்தலர், வேய்மரு, வினைகள்தாமே, மாய்ந்தறும், நாமுமக், தலைப்பெய்யில், போகேல், கண்ணன், நாரணன், பணிவகையே, பாதங்கள், ஏத்தும், மலரிட்டு, கோவலன், தொண்டீர், பெருமானை, மடநெஞ்சே, விதிவகையே, யரவில்பள்ளி, நாள்தோறும், நிச்சித், அவத்தங்கள், விளையுமென், தோறும், லவரொடும், உகக்குநல், சொற்கொள், வாயெங்கள், தலைமேல், யுறைகின்ற, பெருமையனே, வண்ணன், பாட்டாய