முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி பதினோராம்
பத்து
கலி விருத்தம்
1952 |
குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை அன்று காத்தவம் மான்,அ ரக்கரை வென்ற வில்லியார் வீர மேகொலோ, தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன். |
1.1 |
1953 |
காரும் வார்பனிக் கடலும் அன்னவன், தாரு மார்வமும் கண்ட தண்டமோ, சோரு மாமுகில் துளியி னூடுவந்து ஈர வாடைதான் ஈரு மென்னையே. |
1.2 |
1954 |
சங்கு மாமையும் தளரு மேனிமேல், திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன், பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார், கொங்க லார்ந்ததார் கூவு மென்னையே. |
1.3 |
1955 |
அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று, அங்கொர் தாயுரு வாகி வந்தவள், கொங்கை நன்சுண்ட கோயின் மைகொலோ, திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே |
1.4 |
1956 |
அங்கொ ராளரி யாய்,அ வுணனைப் பங்க மாவிரு கூறு செய்தவன், மங்குல் மாமதி வாங்க வேகொலோ பொங்கு மாகடல் புலம்பு கின்றதே. |
1.5 |
1957 |
சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை, வென்ற வில்லியார் வீர மேகொலோ, முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து, அன்றி லின்குரல் அடரு மென்னையே. |
1.6 |
1958 |
பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர, மேவி நின்றுநான் கண்ட தண்டமோ, வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து, ஆவி யேயிலக் காக எய்வதே. |
1.7 |
1959 |
மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம், மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக, கோல வாடையும் கொண்டு வந்தது,ஓர் ஆலி வந்ததால் அரிது காவலே. |
1.8 |
1960 |
கொண்டை யொண்கணும் துயிலும், என்நிறம் பண்டு பண்டுபோ லொக்கும், மிக்கசீர்த் தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே, வண்டு கொண்டுவந் தூது மாகிலே |
1.9 |
1961 |
அன்று பாரதத் தைவர் தூதனாய், சென்ற மாயனைச் செங்கண் மாலினை, மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி கன்றி, சொல்வல்லார்க் கல்ல லில்லையே |
1.10 |
கலி நிலைத்துறை
1962 |
குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை மன்றில் குரவை யிணைந்த மாலென்னை முன்றில் தனிநின்ற பெண்ணை அன்றிலின் கூட்டைப் பிரிக்க |
2.1 |
1963 |
பூங்கு ருந்தொசித்து ஆனை ஆங்கு வேழத்தின் கொம்பு வாங்கி யுண்ட,அவ் வாயன் ஏங்கு வேய்ங்குழல் என்னோ |
2.2 |
1964 |
மல்லோடு கஞ்சனும் துஞ்ச அல்லி மலர்த்தண் டுழாய்நி எல்லி யின்மா ருதம்வந் கொல்லைவல் லேற்றின் மணியும் |
2.3 |
1965 |
பொருந்து மாமர மேழு திருந்து சேவடி யென்ம கருந்தண் மாகடல் மங்கு வருந்த வாடை வருமி |
2.4 |
1966 |
அன்னை முனிவதும் அன்றி மன்னு மறிகட லார்ப்ப பொன்னங் கலையல்கு லன்ன பின்னை மணாளர் திறத்த |
2.5 |
1967 |
ஆழியும் சங்கு முடைய பாழிமை யான கனவில் தோழியும் நானு மொழிய கோழியும் கூகின்ற தில்லைக் |
2.6 |
1968 |
காமன் றனக்கு முரையல் மாமண வாள ரெனக்குத் யாமங்கள் தோறெரி வீசு மாமணி வண்ணர் திறத்த |
2.7 |
1969 |
மன்சுறு மாலிருஞ் சோலை நெஞ்சம் நிறைகொண்டு போயி வெஞ்சுடர் போய்விடி யாமல் நஞ்சு உடலம் துயின்றால் |
2.8 |
1970 |
காமன் கணைக்கோ ரிலக்க பூமரு கோலநம் பெண்மை தூமலர் நீர்கொடு தோழி. கார்முகில் வண்ணரைக் கண்க |
2.9 |
1971 |
வென்றி விடையுட னேழ மன்றில் மலிபுகழ் மங்கை ஒன்று நின்றவொன் பதுமு என்றும் நில்லாவினை யொன்றும் |
2.10 |
தரவு கொச்சகக் கலிப்பா
1972 |
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப் பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ் தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர் என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே. |
3.1 |
1973 |
இருந்தானெ னுள்ளத் திறைவன், கறைசேர் பருந்தாள் களிற்றுக் கருள்செய்த, செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட வருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே. |
3.2 |
1974 |
அன்னே. இவரை யறிவன், மறைநான்கும் முன்னே யுரைத்த முனிவ ரிவர்வந்து பொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து என்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே. |
3.3 |
1975 |
அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு, வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி, சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே? |
3.4 |
1976 |
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு, தம்மையே யொக்க அருள்செய்வ ராதலால், தம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி, தம்மையே பற்றா மனத்தென்றும் வைத்தோமே. |
3.5 |
1977 |
வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம் உற்றா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும் எய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி, கைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே |
3.6 |
1978 |
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள் என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்? பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய, அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே. |
3.7 |
1979 |
பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று ஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம் கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே. |
3.8 |
1980 |
நன்னெஞ்சே. நம்பெருமான் நாளும் இனிதமரும், அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது, முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன், பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே. |
3.9 |
1981 |
பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப் பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை, கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே |
3.10 |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1982 |
நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட மலைகளை மீது கொண்டு வருமீனை |
4.1 |
1983 |
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் பருவரை யொன்று நின்று முதுகிற் அருவரை யன்ன தன்மை அடலாமை |
4.2. |
1984 |
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர் முடனே, மாதிர மண்சு மந்து வடகுன்று பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட ஆதிமுன் ஏன மாகி அரணாய |
4.3. |
1985 |
தளையவிழ் கோதை மாலை யிருபால் அளவெழ வெம்மை மிக்க அரியாகி வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன பிளவெழ விட்ட குட்ட மதுவைய |
4.4. |
1986 |
வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி செந்தொழில் வேத நாவின் முனியாகி மந்திர மீது போகி மதிநின்றி அந்தர மேழி னூடு செலவுய்த்த |
4.5. |
1987 |
இருநில மன்னர் தம்மை யிருநாலும் செரு_த லூடு போகி யவராவி பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய |
4.6. |
1988 |
இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம் அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப கொலைமலி யெய்து வித்த கொடியோன் சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த |
4.7. |
1989 |
முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி என்னிது வந்த தென்ன இமையோர் பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும் அன்னம தாயி ருந்தங் கற_ல் |
4.8. |
1990 |
துணைநிலை மற்றெ மக்கொ ருளதென் உணமுலை முங்கொடுத்த வுரவோள பணமுலை யாயர் மாத ருரலோடு இணைமரு திற்று வீழ நடைகற்ற |
4.9. |
1991 |
கொலைகெழு செம்மு கத்த களிறொன்று சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த கலிகெழு மாட வீதி வயல்மங்கை ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற |
4.10 |
தரவு கொச்சக் கலிப்பா
1992 |
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா, கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள், வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே |
5.1 |
1993 |
தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ, நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத் தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே |
5.2 |
1994 |
ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித் தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ, தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ் வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே |
5.3 |
1995 |
அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு, எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே |
5.4 |
1996 |
வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு, கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ, கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும், எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே |
5.5 |
1997 |
கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப, மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ, மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும், என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே |
5.6 |
1998 |
கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான், தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ, தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும், ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே |
5.7 |
1999 |
பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து, தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ, தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும், தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே |
5.8 |
2000 |
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய், வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ, வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும் விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே |
5.9 |
2001 |
கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான், வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ, வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே |
5.10 |
கலி நிலைத்துறை
2002 |
மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் எந்நன்றி செய்தாரா ஏதிலோர் செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள். |
6.1 |
2003 |
நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட எல்லாரும் அறியாரோ எம்பெருமான் அல்லாதார் தாமுளரே? அவனருளே |
6.2 |
2004 |
நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய் ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும் வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் கொற்றப்போ ராழியான் குணம்பரவாச் |
6.3 |
2005 |
பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் இனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம் முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில் கனிகளவத் திருவுருவத் தொருவனையே |
6.4 |
2006 |
பாராரும் காணாமே பரவைமா ஆரானும் அவனுடைய திருவயிற்றில் தோராத வுணர்விலீர். உணருதிரேல் பேராளன் பேரான பேர்களா |
6.5 |
2007 |
பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன் போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம் தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ |
6.6 |
2008 |
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் தெண்ணாத மானிடத்தை யெண்ணாத |
6.7 |
2009 |
மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து புறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் அறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில் நிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை |
6.8 |
2010 |
அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த் தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை |
6.9 |
2011 |
தேவரையும் அசுரரையும் திசைகளையும் யாவரையு மொழியாமே யெம்பெருமான் காவளரும் பொழில்மங்கைக் கலிகன்றி பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப் |
6.10 |
தரவு கொச்சக் கலிப்பா
2012 |
நீணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப் பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை, பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை, காணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே |
7.1 |
2013 |
நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண், தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை, தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை, கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே |
7.2 |
2014 |
தூயானைத் தூய மறையானை, தென்னாலி மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட வாயானை, மாலை வணங்கி யவன்பெருமை, பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே |
7.3 |
2015 |
கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த, ஓடா அடலரியை உம்பரார் கோமனை, தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால் பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே |
7.4 |
2016 |
மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும், கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை, கைதொழா கையல்ல கண்டாமே |
7.5 |
2017 |
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால், புள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று, உள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே |
7.6 |
2018 |
கனையார் கடலும் கருவிளையும் காயாவும் அனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும் சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று, நினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே |
7.7 |
2019 |
வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித் தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே |
7.8 |
2020 |
தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை, தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய், ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார், மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே |
7.9 |
2021 |
மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக் கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி, கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை, ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே |
7.10 |
கலிவிருத்தம்
2022 |
மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள் தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம், ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன், நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ. |
8.1 |
2023 |
சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள் தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி, காற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல, ஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா. |
8.2 |
2024 |
தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து, வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி, பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல், தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா. |
8.3 |
2025 |
உருவார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து, திரிவாயென்று சிந்தித்தி யென்றதற் கஞ்சி, இருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல், உருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா. |
8.4 |
2026 |
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில், தள்ளி புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி, வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே, உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா. |
8.5 |
2027 |
படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம் மடைநின் றலரும் வயலாலி மணாளா, இடையன் எறிந்த மரமேயொத் திராமே, அடைய அருளா யெனக்குன்ற னருளே |
8.6 |
2028 |
வேம்பின்புழு வேம்பின்றி யுண்ணாது, அடியேன் நான்பின்னு முன்சே வடியன்றி நயவேன், தேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப் பாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ. |
8.7 |
2029 |
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா, துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு, மணியே. மணிமா ணிக்கமே. மதுசூதா, பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ. |
8.8 |
2030 |
நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும் எந்தாய். தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய், சந்தோகா. தலைவனே. தாமரைக் கண்ணா, அந்தோ. அடியேற் கருளாயுன் னருளே |
8.9 |
2031 |
குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை, மன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல், ஒன்று நின்றவொன் பதும்வல் லவர்த்தம்மேல், என்றும் வினையாயின சாரகில் லாவே |
8.10 |
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - காணேடீ, என்றும், மன்றில், னாகிலும், தம்மையே, நாளும், கண்டாமே, உறியார், யுய்யக்கொண்ட, கடலும், திங்கள், கலிகன்றி, கேட்டாமே, நங்கள், செலவுய்த்த, திருவயிற்றில், நறுவெண்ணெ, நின்று, கலிப்பா, வைத்தும்மை, வண்ணனார், பொங்கு, தூதனாய், மென்னையே, குறளுருவாய், ளின்னம், வண்தாரான், வேள்வியில், வானவரும், பிறவிக்க, காயன்று, வெள்ளத்தான், தேர்மன்னர்க், குறுங்கயிற்றால், பரஞ்சோதீ, கண்ணிக், தாழ்குழலார், முதல்வா, புகப்பெய்து, மன்னவனால், மரக்கால்கூத், இமையோர்க்கும், நெடுங்காலம், தான்விழுங்கி, திருவயிற்றின், கழல்சூடி, மக்கள், தோற்றக், அகம்படியில், நினையாதார், ஆர்வத்தால், கைந்நின்ற, வாகிலும், யாய்வளர்ந்தான், ஊழில்வாங்கி, நெடுங்கடலே, காயாவும், உண்டுமிழ்ந்த, யானகாலம், திடைப்பட்ட, ஏழினையும், குழிதோற்று, விப்பாய்கொ, பெருவெள்ளம், இலங்கை, சிந்தித்தி, திறத்த, மணிவண்ணன், நிலைத்துறை, வென்றி, மன்கலி, வெறியார், அறியோமே, நின்றவொன், கன்றிசொல், செங்கண், துயிலும், தண்டமோ, மென்செய்கேன், மேகொலோ, வில்லியார், வெங்கதிர், கொங்கை, கொண்டு, முன்றில், மாகடல், கின்றதே, பொழில்சூழ், வணங்கித், விருத்தம், கொடியோன், பெருநில, மன்னர், ரங்கள், முனிவர்க்கும், நந்தன், ஆய்ப்பாடி, கானமரும், கொச்சக், அதுநம்மை, பெரிதே, மின்றி, நன்னெஞ்சே, பாடோமே, தொழுதிறைஞ்சி, நெடுவெள்ளம், இமையோர், வளர்சேர், நமக்கொ, திருமால், குலமதலை