முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவாய் மொழி மூன்றாம் பத்து
3013 |
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ, அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ, படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே. |
1.1. |
3014 |
கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா, கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது, ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. |
1.2. |
3015 |
பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர் பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற, பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம் பரஞ்சோதி கோவிந்தா. பண்புரைக்க மாட்டேனே. |
1.3. |
3016 |
மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,நின் மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய் மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே? |
1.4. |
3017 |
வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய், வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய், வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே? |
1.5. |
3018 |
ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும், சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை, போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல் மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே? |
1.6. |
3019 |
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை, மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய் கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து, சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே? |
1.7. |
3020 |
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது, மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய், மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால், மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே? |
1.8. |
3021 |
மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய், தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக, மலருலகில் தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே? |
1.9. |
3022 |
மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே, முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய், பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே? |
1.10. |
3023 |
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை, சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன், துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும், உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே. |
1.11 |
3024 |
முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே, அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன், வெந்நாள்நோய் வீய வினைகளைவேர் அறப்பாய்ந்து, எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே? |
2.1. |
3025 |
வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின் பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான், தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து, நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ? |
2.2. |
3026 |
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர், எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய், பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா, சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே. |
2.3. |
3027 |
சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும் ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய், தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ் வாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே. |
2.4. |
3028 |
வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ, சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில், கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த எந்தாய்,யா னுன்னை எங்குவந் தணுகிற்பனே? |
2.5. |
3029 |
கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால், அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன், பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின் நற்பொற்fசோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே? |
2.6. |
3030 |
எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே. மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி, எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற, மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே? |
2.7. |
3031 |
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுத லின்றி உன்கழல் வணங்கிற்றிலேன், பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே, கூவுகின்றேன் காண்பாலன்f எங்கொய்தக் கூவுவனே? |
2.8. |
3032 |
கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன், மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம், தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே? |
2.9. |
3033 |
தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால், அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல, கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு, நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே. |
2.10. |
3034 |
உயிர்க ளெல்லா உலகமு முடையவனை, குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன், செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும், உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே. |
2.11 |
3035 |
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம், தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து, எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே |
3.1 |
3036 |
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, வானவர் வானவர் கோனொடும், சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து, அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே. |
3.2 |
3037 |
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக் கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம், தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து, எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. |
3.3 |
3038 |
ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?, நீச னென்நிறை வொன்றுமி லேன்,என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. |
3.4 |
3039 |
சோதி யாகியெல் லாவுல கும்தொழும், ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ?, வேதி யர்முழு வேதத் தமுதத்தை, தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே. |
3.5 |
3040 |
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார், வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன லாங்க டமை,அ துசுமந் தார்க்கட்கே. |
3.6 |
3041 |
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு, அமர்ந்து வானவர் வானவர் கோனொடும், நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு, சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. |
3.7 |
3042 |
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன் சென்று சேர்திரு வேங்கட மாமலை, ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. |
3.8 |
3043 |
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி, வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத் தாயன், நாண்மல ராமடித் தாமரை, வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே. |
3.9 |
3044 |
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று, எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ, பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம், மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே. |
3.10 |
3045 |
தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை, நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல், கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர், வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே. |
3.11 |
3046 |
புகழுநல் ஒருவன் என்கோ. பொருவில்சீர்ப் பூமி யென்கோ, திகழும்தண் பரவை என்கோ. தீயென்கோ. வாயு என்கோ, நிகழும்ஆ காச மென்கோ. நீள்சுடர் இரண்டும் என்கோ, இகழ்விலிவ் வனைத்தும் என்கோ கண்ணனைக் கூவுமாறே. |
4.1 |
3047 |
கூவுமா றறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ, மேவுசீர் மாரி என்கோ. விளங்குதா ரகைகள் என்கோ, நாவியல் கலைகள் என்கோ. ஞானநல் லாவி என்கோ, பாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே. |
4.2 |
3048 |
பங்கையக் கண்ணன் என்கோ. பவளச்செவ் வாயன் என்கோ, அங்கதிர் அடியன் என்கோ. அஞ்சன வண்ணன் என்கோ, செங்கதிர் முடியன் என்கோ. திருமறு மார்வன் என்கோ, சங்குசக் கரத்தன் என்கோ. சாதிமா ணிக்கத் தையே. |
4.3 |
3049 |
சாதிமா ணிக்கம் என்கோ. சவிகோள்பொன் முத்தம் என்கோ, சாதிநல் வயிரம் என்கோ, தவிவில்சீர் விளக்கம் என்கோ, ஆதியஞ் சோதி என்கோ. ஆதியம் புருடன் என்கோ, ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே. |
4.4 |
3050 |
அச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும், நச்சுமா மருந்தம் என்கோ. நலங்கடல் அமுதம் என்கோ, அச்சுவைக் கட்டி என்கோ. அறுசுவை அடிசில் என்கோ, நெய்ச்சுவைத் தேறல் என்கோ. கனியென்கோ. பாலென் கேனோ. |
4.5 |
3051 |
பாலென்கோ. நான்கு வேதப் பயனென்கோ, சமய நீதி நூலென்கோ. நுடங்கு கேள்வி இசையென்கோ. இவற்றுள் நல்ல மேலென்கோ, வினையின் மிக்க பயனென்கோ, கண்ணன் என்கோ. மாலென்கோ. மாயன் என்கோ வானவர் ஆதி யையே. |
4.6 |
3052 |
வானவர் ஆதி என்கோ. வானவர் தெய்வம் என்கோ, வானவர் போகம் என்கோ. வானவர் முற்றும் என்கோ, ஊனமில் செல்வம் என்கோ. ஊனமில் சுவர்க்கம் என்கோ, ஊனமில் மோக்கம் என்கோ. ஒளிமணி வண்ண னையே. |
4.7 |
3053 |
ஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ, அளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற, களிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே. |
4.8 |
3054 |
கண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் தன்மேல், நண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை, எண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே. |
4.9 |
3055 |
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும், தோய்விலன் புலனைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி, ஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத, பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே. |
4.10 |
3056 |
கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன, பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார், வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே |
4.11 |
3057 |
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற, கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன், எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார், தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. |
5.1 |
3058 |
தண்கடல் வட்டத்துள் ளாரைத் தமக்கிரை யாத்தடிந் துண்ணும், திண்கழற் காலசு ரர்க்குத் தீங்கிழைக் கும்திரு மாலை, பண்கள் தலைக்கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழ லாதார், மண்கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே. |
5.2 |
3059 |
மலையை யெடுத்துக்கல் மாரி காத்துப் பசுநிரை தன்னை, தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச்சொல் லிநிறெப் போதும், தலையினோ டாதனம் தட்டத் தடுகுட்ட மாய்ப்பற வாதார், அலைகொள் நரகத் தழுந்திக் கிடந்துழைக் கின்ற வம்பரே. |
5.3 |
3060 |
வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த, செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி, கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார், தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே? |
5.4 |
3061 |
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்ப தற்கு, ஆதியஞ் சோதி யுருவை அங்குவைத் திங்குப் பிறந்த, வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும்துள் ளாதார், ஓதி யுணர்ந்தவர் முன்னா என்சவிப் பார்ம னிசரே? |
5.5 |
3062 |
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த, தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானை, கனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை, முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையி னாரே. |
5.6 |
3063 |
நீர்மை நூற்றுவர் வீய ஐவர்க் கருள்செய்து நின்று, பார்மல்கு சேனை அவித்த பரஞ்சுட ரைநினைந் தாடி. நீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குழைந்துநை யாதே, ஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்க்கட் கென்செய் வாரே? |
5.7 |
3064 |
வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை, பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற, ஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி, ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே. |
5.8 |
3065 |
அமரர் தொழப்படு வானை அனைத்துல குக்கும் பிரானை, அமரர் மனத்தினுள் யோகு புணர்ந்தவன் தன்னோடொன் றாக, அமரத் துணியவல் லார்கள் ஒழியஅல் லாதவ ரெல்லாம், அமர நினைந்தெழுந் தாடி அலற்றுவ தேகரு மமே. |
5.9 |
3066 |
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை, திருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை, ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளங் குழைந்தெழுந் தாடி, பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. |
5.10 |
3067 |
தீர்ந்த அடியவர் தம்மைத்திருத்திப் பணிகொள்ள வல்ல, ஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை, வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன், நேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே. |
5.11 |
3068 |
செய்ய தாமரைக் கண்ண னாயுல கேழு முண்ட அவன்கண்டீர், வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய், செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப் பட்டி வைபடைத் தான்பின்னும், மொய்கொள் சோதியொ டாயி னானொரு மூவ ராகிய மூர்த்தியே. |
6.1 |
3069 |
மூவ ராகிய மூர்த்தி யைமுதல் மூவர்க் குமுதல் வன்றன்னை, சாவ முள்ளன நீக்கு வானைத் தடங்க டல்கிடந் தான்தன்னைத், தேவ தேவனைத் தென்னி லங்கை எரியெ ழச்செற்ற வில்லியை, பாவ நாசனைப் பங்க யத்தடங் கண்ண னைப்பர வுமினோ. |
6.2 |
3070 |
பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியை, குரவை கோத்த குழக னைமணி வண்ண னைக்குடக் கூத்தனை, அரவ மேறி யலைக டலம ரும்து யில்கொண்ட அண்ணலை, இரவும் நன்பக லும்வி டாதென்றும் ஏத்து தல்மனம் வைம்மினோ. |
6.3 |
3071 |
வைம்மின் நும்மனத் தென்று யானுரைக் கின்ற மாயவன் சீர்மையை எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது நிற்க நாfடொறும், வானவர் தம்மை யாளும் அவனும் நான்முக னும்ச டைமுடி அண்ணலும், செம்மை யாலவன் பாத பங்கயம் சிந்தித் தேத்தி திரிவரே. |
6.4 |
3072 |
திரியும் கற்றொ டகல்வி சும்பு திணிந்த மண்கிடந் தகடல், எரியும் தீயொ டிருசு டர்தெய்வம், மற்றும் மற்றும் முற்றுமாய், கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன்விண் ணோரிறை, சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள் சுடர்மு டியண்ணல் தோற்றமே. |
6.5 |
3073 |
தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய், சீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால், நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர் ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே. |
6.6 |
3074 |
எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தி னைஎன தாருயிர், கெழுமி யகதிர்ச் சோதி யைமணி வண்ண னைக்குடக் கூத்தனை, விழுமி யவம ரர்மு நிவர்வி ழுங்கும் கன்னல் கனியினை, தொழுமின் தூயம னத்த ராயிறை யும்நில் லாதுய ரங்களே. |
6.7 |
3075 |
துயர மேதரு துன்ப இன்ப வினைக ளாய்அ வை அல்லனாய், உயர நின்றதோர் சோதி யாயுல கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை, அயர வாங்கு நமன்த மர்க்கரு நஞ்சி னையச்சு தன்தன்னை, தயர தற்கும கனறன் னையன்றி மற்றி லேன்தஞ்ச மாகவே. |
6.8 |
3076 |
தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானு மாயவை அல்லனாய், எஞ்ச லிலம ரர்க்கு லமுதல் மூவர் தம்முள்ளு மாதியை, அஞ்சி நீருல கத்துள் ளீர்கள். அவனி வனென்று கூழேன்மின், நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன் ஆகும் நீள்கடல் வண்ணனே. |
6.9 |
3077 |
கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு மாணிக் கமென தாருயிர் படவ ரவின ணைக்கி டந்த பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர், அடவ ரும்படை மங்க ஐவர்க்கட் காகி வெஞ்சமத்து, அன்றுதேர் கடவி யபெரு மான்க னைகழல் காண்ப தென்றுகொல் கண்களே? |
6.10 |
3078 |
கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத் துக்கு நன்றுமெ ளியனாய், மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள் செய்யும் வானவ ரீசனை, பண்கொள் சோலை வழுதி நாடன் குருகைக் கோன்சட கோபன்சொல், பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த ராகக் கூடும் பயலுமினே. |
6.11 |
3079 |
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை, பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை, பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர், பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே. |
7.1 |
3080 |
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை, தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர், நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே. |
7.2 |
3081 |
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனை, பொன்னெடுஞ் சக்கரத் தெந்தை பிரான்தன்னை பாதம் பணியவல் லாரைப் பணியும் அவர்க்கண்டீர், ஓதும் பிறப்பிடை தோறெம்மை யாளுடை யார்களே. |
7.3 |
3082 |
உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன் புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும் பல்கலன், நடையா வுடைத்திரு நாரணன் தொண்டர்தொண் டர்க்கண்டீர், இடையார் பிறப்பிடை தோறெமக் கெம்பெரு மக்களே. |
7.4 |
3083 |
பெருமக்க ளுள்ளவர் தம்பெரு மானை, அமரர்கட் கருமை யொழியஅ ன் றாரமு தூட்டிய அப்பனை, பெருமை பிதற்றவல் லாரைப் பிதற்றும் அவர்க்கண்டீர், வருமையு மிம்மையும் நம்மை யளிக்கும் பிராக்களே. |
7.5 |
3084 |
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான்தன்னை, துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணனெம் மான்தன்னை, ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர்க்கண்டீர், சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன் மாந்தரங் காப்பரே. |
7.6 |
3085 |
சன்மசன் மாந்தரங் காத்தடி யார்களைக் கொண்டுபோய், தன்மை பொறுத்தித்தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும் அப்பனை, தொன்மை பிதற்றவல் லாறைப் பிதற்றும் அவர்கண்டீர், நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பரே. |
7.7 |
3086 |
நம்பனை ஞாலம் படைத்தவ னைதிரு மார்பனை, உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வரி யான்தன்னைக், கும்பி நரகர்கள் ஏத்துவ ரேலும் அவர்கண்டீர், எம்பல் பிறப்பிடை தோறெம் தொழுகுலம் தாங்களே. |
7.8 |
3087 |
குவலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும், வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள் கலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே. |
7.9 |
3088 |
அடியார்ந்த வையமுண் டாலிலை யன்ன சஞ்செய்யும், படியாது மில்குழ விப்படி யெந்தைபி ரான்றனக்கு, அடியார் அடியார் தமடி யார்அ டி யார்தமக் கடியார் அடியார் தம்,அடி யாரடி யோங்களே. |
7.10 |
3089 |
அடியோங்கு நூற்றவர் வீயஅ ன் றைவருக் கருள்செய்த நெடியோனை, தென்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள், அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை பத்தவன் தொண்டர்மேல் முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய் யாமை முடியுமே. |
7.11 |
3090 |
முடியானே. மூவுலகும் தொழுதேத் தும்சீர் அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய். புள்ளூர் கொடியானே, கொண்டல்வண் ணா.அண்டத் துமபரில் நெடியானே., என்று கிடக்குமென் நெஞ்சமே. |
8.1 |
3091 |
நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென் தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய வஞ்சனே, என்னுமெப் போதுமென் வாசகமே. |
8.2 |
3092 |
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம் நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து, வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர் தாயவனே, என்று தடவுமென் கைகளே. |
8.3 |
3093 |
கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை, வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி, பைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே. |
8.4 |
3094 |
கண்களால் காண வருங்கொலைன் றாசையால், மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல், பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து, திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே. |
8.5 |
3095 |
செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று, புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே அவிவின்றி யாதரிக் கும்என தாவியே. |
8.6 |
3096 |
ஆவியே. ஆரமு தே.என்னை ஆளுடை, தூவியம் புள்ளுடை யாய்.சுடர் நேமியாய், பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும், கூவியும் காணப் பெறேனுன கோலமே. |
8.7 |
3097 |
கோலமே. தாமரைக் கண்ணதோர் அஞ்சன நீலமே, நின்றென தாவியை யீர்கின்ற சீலமே, சென்றுசொல் லாதன முன்நிலாம் காலமே, உன்னையெந் நாள்கண்டு கொள்வனே? |
8.8 |
3098 |
கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர,ஓ ராயிரம் தோள்துணித்த புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே? |
8.9 |
3099 |
பொருந்திய மாமரு தின்னிடை போயவெம் பெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று, வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே. |
8.10 |
3100 |
புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை, நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல் வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து, இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே. |
8.11 |
3101 |
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ, என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன், தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து, என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. |
9.1 |
3102 |
உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென், குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே, உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே? |
9.2 |
3103 |
ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம் வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய், கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள், இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே. |
9.3 |
3104 |
என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள், மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?, மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால், தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே. |
9.4 |
3105 |
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை, வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள், கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. |
9.5 |
3106 |
வம்மின் புலவீர்.நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ, இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம், நும்மின் கவிகொண்டு நும்நு_மிட்டாதெய்வம் ஏத்தினால், செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே. |
9.6 |
3107 |
சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓ ராயிரம் பேரும் உடைய பிரானையல்லால்மற்று யான்கிலேன், மாரி யனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று, பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே. |
9.7 |
3108 |
வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை, ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய், காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன், மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வாய்கொண்டே? |
9.8 |
3109 |
வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன், ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன், சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும், நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே. |
9.9 |
3110 |
நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய், சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி, ஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு, என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே? |
9.10 |
3111 |
ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு, ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல், ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே. |
9.11 |
3112 |
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில், ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு கொண்டுபுள் ளூர்ந்து,உலகில் வன்மை யுடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத, நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற நானோர் குறைவிலனே. |
10.1 |
3113 |
குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன் கோலச்செந் தாமரைக்கண், உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன், கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி அசுரரைக் காய்ந்தவம்மான், நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யானொரு முட்டிலனே. |
10.2 |
3114 |
முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய, கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை, மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப் பட்டபின் னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே. |
10.3 |
3115 |
பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும் அங்கியும் போர்தொலைய, பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத் தரியினை, அச்சுத னைப்பற்றி யானிறை யேனும் இடரிலனே. |
10.4 |
3116 |
இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல் லாவுல கும்கழிய, படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன் ஏறத்திண் தேர்க்கடவி, சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை, உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி ஒன்றும் துயரிலனே. |
10.5 |
3117 |
துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே, துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக்கண் காணவந்து, துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில் புக வுய்க்குமம்மான், துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோர்து ன்பமிலனே. |
10.6 |
3118 |
துன்பமும் இன்பமு மாகிய செய்வினை யாயுல கங்களுமாய், இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய், மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளால், இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற் றேதுமல் லலிலனே. |
10.7 |
3119 |
அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும் அழகமர் சூழொளியன், அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்குமம்மான், எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல் லாக்கரு மங்களும்செய், எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானோர்துக் கமிலனே. |
10.8 |
3120 |
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாயலங் கல்பெருமான், மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து வேண்டும் உருவுகொண்டு, நக்கபி ரானோ டயன்முத லாகஎல் லாரும் எவையும்,தன்னுள் ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற் றொன்றும் தளர்விலனே. |
10.9 |
3121 |
தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானமொன்றாய், அளவுடை யைம்புலன் களறி யாவகை யாலரு வாகிநிற்கும், வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை யிருசுடரை, கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானென்றும் கேடிலனே. |
10.10 |
3122 |
கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன, பாடலோ ராயிரத் துளிவை பத்தும் பயிற்றவல் லார்கட்கு,அவன் நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி, வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும் தருமொரு நாயகமே. |
10.11 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - வானவர், கண்ணன், கண்ணனை, மற்றும், பெரும்புகழ், சுடரொளி, அவர்க்கண்டீர், பிறப்பிடை, கூர்ச்சட, ஆயிரத், வேங்கடத், தாமரைக், பரஞ்சோதி, ஏற்கும், அடியார், வண்ணன், ஒளிமணி, ஊனமில், சக்கரத், மூர்த்தி, தெந்தை, வேங்கடத்து, பிரானை, புலவீர்காள், முற்றுமாய், மாசூணா, பயிலும், யாளும், யாளுடை, பொன்னெடுஞ், னைக்குடக், மனிசர், சோதியை, பணியும், கூத்தனை, தாருயிர், பண்கொள், ரேலும், மூர்த்தியைப், கண்களே, அல்லனாய், வண்ணனெம், பிரான்தன்னை, மான்தன்னை, மாந்தரங், செய்து, னைப்பற்றி, வள்ளல், மானிடம், கொண்டு, தன்னுடைச், துயரில், கண்ணனைத், தாள்பற்றி, மாயனைக், எல்லையில், கங்களுமாய், செல்வத்தை, ராயிரம், கொள்ளும், சன்மசன், பிதற்றும், பிதற்றவல், அப்பனை, திப்பத், அவர்கண்டீர், வாசகமே, நெஞ்சமே, துள்ளிவை, அடியார்ந்த, லாரைப், சேர்ந்த, கண்ணனைக், கோனொடும், பாவியேன், நின்று, உன்கழல், தொல்புகழ், வேங்கடம், சாதிமா, ஆதியஞ், பங்கயக், மாட்டேன், கோபன்சொல், எங்கும், சேரும், ஞானமாய், முழுதியன்றாய், சுடருடம்பாய், வருந்தாத, நின்னுள்ளே, மழுங்காத, மெய்ஞ்ஞான, ஆக்கையின், ளிப்பத்தும், ஆயிரத்து, சடகோபன், அச்சுதன், அடியவர், கனியைக், கட்டியைத், தடங்கடல், பிறந்த, போதும், குனிப்பார், நூற்றுவர், மனத்தினுள், குக்கும், தொழப்படு, நெஞ்சம், உலகில், மண்கொள், யாவையும், யவரும், அண்ணலை, தெய்வம், பயனென்கோ, பத்தும், ளாதார், லாதார், பாடிப், வட்டத்துள், தண்கடல், ராயிரத்