முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குருந்தாண்டகம்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குருந்தாண்டகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
2032 |
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார், கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும், மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த, விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே |
(2) 1 |
2033 |
காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே. |
2 |
2034 |
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க் காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை, வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற, மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே. |
3 |
2035 |
கேட்கயா னுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட, பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு, வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய வாறே. |
4 |
2036 |
இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன் அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன், வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து, கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே |
5 |
2037 |
மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட, கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப் பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே? |
6 |
2038 |
இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற, மெய்ம்மையை விரிந்த சோலை வியந்திரு வரங்கம் மேய, செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை, தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே. |
7 |
2039 |
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற, தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார், மானிடப் பிறவி யந்தோ. மதிக்கிலர் கொள்க, தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் குறுதியே வேண்டி னாரே. |
8 |
2040 |
உள்ளமோ ஒன்றில் நில்லாது μசையி னெரிநின் றுண்ணும் கொள்ளிமே லெறும்பு போலக் குழையுமா லென்ற னுள்ளம், தெள்ளியீர்.தேவர்க் கெல்லாம் தேவரா யுலகம் கொண்ட ஒள்ளியீர், உம்மை யல்லால் எழுமையும் துணையி லோமே. |
9 |
2041 |
சித்தமும் செவ்வை நில்லா தெஞ்செய்கேன் தீவி னையேன், பத்திமைக் கன்பு டையேன் ஆவதே பணியா யந்தாய், முத்தொளி மரத கம்மே. முழங்கொளி முகில்வண் ணா,என் அத்த.நின் னடிமை யல்லால் யாதுமொன் றறிகி லேனே. |
10 |
2042 |
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி பணியு மாறு கண்டு, தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியா யெந்தாய், அண்டமா யெண்டி சைக்கும் ஆதியாய் நீதி யான, பண்டமாம் பரம சோதி. நின்னையே பரவு வேனே. |
11 |
2043 |
ஆவியயை யரங்க மாலை அழுக்குரம் பெச்சில் வாயால், தூய்மையில் தொண்ட னேன்நான் சொல்லினேன் தொல்லை நாமம், பாவியேன் பிழத்த வாறென் றஞ்சினேற் கஞ்ச லென்று காவிபோல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே |
12 |
2044 |
இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க, என்றன் அரும்பிணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு, சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே |
13 |
2045 |
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி, நாளும் பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன், தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை, பாவியென் பாவி யாது பாவியே னாயி னேனே. |
14 |
2046 |
முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து, அன்பினா லனுமன் வந்தாங் கடியிணை பணிய நின்றார்க்கு, என்பெலா முருகி யுக்கிட் டென்னுடை நெஞ்ச மென்னும், அன்பினால் ஞான நீர்கொண் டாட்டுவ னடிய னேனே. |
15 |
2047 |
மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து, வையம் தாயமா பரவை பொங்கத் தடவரை திரித்து, வானோர்க் கீயுமால் எம்பி ரானார்க் கென்னுடைச் சொற்க ளென்னும், தூயமா மாலை கொண்டு சூட்டுவன் தொண்ட னேனே |
16 |
2048 |
பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி, ஏச்னார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம், பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு, ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே |
17 |
2049 |
இளைப்பினை யியக்கம் நீக்கி யிருந்துமுன் னிமையைக் கூட்டி, அளப்பிலைம் புலன டக்கி அன்பவர் கண்ணே வைத்து, துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர்விட்டு, ஆங்கே விளக்கினை விதியில் காண்பார் மெய்ம்மையே காண்கிற் பாரே |
18 |
2050 |
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும், உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே? |
(2) 19 |
2051 |
வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும், நாளும் தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை, மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும், ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வர் தாமே |
(2) 20 |
திருமங்கைஆழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குருந்தாண்டகம் - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - குடந்தை, வைத்து, யல்லால், வண்ணர், பாவியே, நாளும், என்றன், இரும்பனன், ளிலங்கை, மனத்து, திரித்து, வானோர்க், தன்னால், வல்லார்