முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் »
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி
நான்காம் பத்து
முதல் திருமொழி - கதிராயிரம்
(ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும்,
கண்டார் சிலருமாகக் கூறுதல்)
அறுசீர்க்கழிநெடிலடியசிரிய விருத்தம்
328: |
கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன் எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய் உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். |
1 |
329 |
நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம் ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். |
2 |
330 |
கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். |
3 |
331 |
தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன் ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும் வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். |
4 |
332 |
நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால் சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். |
5 |
333 |
பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். |
6 |
334 |
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். |
7 |
335 |
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன் ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். |
8 |
336 |
மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம் திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். |
9 |
337 |
கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. |
10 |
இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
(திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு)
கலிநிலைத்துறை
338 |
அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. |
1 |
339 |
வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. |
2 |
340 |
தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. |
3 |
341 |
ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம் கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. |
4 |
342 |
ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன் ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன் திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. |
5 |
343 |
ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. |
6 |
344 |
மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல் முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன் தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. |
7 |
345 |
குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச் சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. |
8 |
346 |
சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள் அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான் சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. |
9 |
347 |
எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார் விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த் தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. |
10 |
348 |
மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. |
11 |
மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
(திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு)
கலிநிலைத்துறை
349 |
உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. |
1 |
350 |
கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும் வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. |
2 |
351 |
மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. |
3 |
352 |
மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப் பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. |
4 |
353 |
பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. |
5 |
354 |
பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம் ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. |
6 |
355 |
கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள் இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம் இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. |
7 |
356 |
எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. |
8 |
357 |
கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. |
9 |
358 |
ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும் ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. |
10 |
359 |
மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில் மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. |
11 |
நான்காம் திருமொழி - நாவகாரியம்
(முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும்,
அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)
அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
360 |
நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார் தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர் மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப் பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. |
1 |
361 |
குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய் செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர் பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே. |
2 |
362 |
வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும் திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள் எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய் உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. |
3 |
363 |
உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள் நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர் நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர் பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. |
4 |
364 |
ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய் தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர் நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. |
5 |
365 |
பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால் ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. |
6 |
366 |
குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர் கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள் இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. |
7 |
367 |
நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும் தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர் குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள் விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. |
8 |
368 |
கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர் செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால் எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. |
9 |
369 |
காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் கேசவா. புருடோ த்தமா. கிளர்சோதியாய். குறளா. என்று பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. |
10 |
370 |
சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும் கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல் ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. |
11 |
ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
(பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு
கிதோபதேசம் செய்தல்)
கிதோபதேசம் செய்தல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
371 |
ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி வாசவார்குழலாளென்றுமயங்கி கேசவா. புருடோ த்தமா. என்றும் பேசுவாரவர்எய்தும்பெருமை |
1 |
372 |
சீயினால்செறிந்தேறியபுண்மேல் ஈயினால்அரிப்புண்டுமயங்கி வாயினால்நமோநாரணாவென்று போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும் |
2 |
373 |
சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில் ஆர்வினவிலும்வாய்திறவாதே மார்வமென்பதோர்கோயிலமைத்து ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு |
3 |
374 |
மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக் மூலமாகியஒற்றையெழுத்தை வேலைவண்ணனைமேவுதிராகில் |
4 |
375 |
மடிவழிவந்துநீர்புலன்சோர கடைவழிவாரக்கண்டமடைப்பக் தொடைவழிஉம்மைநாய்கள்கவரா இடைவழியில்நீர்கூறையும்இழவீர் |
5 |
376 |
அங்கம்விட்டவையைந்துமகற்றி சங்கம்விட்டவர்கையைமறித்துப் வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம் |
6 |
377 |
தென்னவன்தமர்செப்பமிலாதார் பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப் இன்னவன்இனையானென்றுசொல்லி மன்னவன்மதுசூதனென்பார் |
7 |
378 |
கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு கோடிமூடியெடுப்பதன்முன்னம் கூடியாடியஉள்ளத்தரானால் |
8 |
379 |
வாயொருபக்கம்வாங்கிவலிப்ப தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம் தீஓருபக்கம்சேர்வதன்முன்னம் மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு |
9 |
380 |
செத்துப்போவதோர்போதுநினைந்து பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப் சித்தம்நன்கொருங்கித்திருமாலைச் சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல் |
10 |
ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
(பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை
இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
கலித்துறை
381 |
காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும் ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள். கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
1 |
382 |
அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால் மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள். செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால் நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
2 |
383 |
உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்? பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
3 |
384 |
மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால் நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
4 |
385 |
மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால் நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
5 |
386 |
நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். |
6 |
387 |
மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள். கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். |
7 |
388 |
நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
8 |
389 |
ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள் மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். |
9 |
390 |
சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர் பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. |
10 |
ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
(தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
391 |
தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய் எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும் கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. |
1 |
392 |
சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும் கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. |
2 |
393 |
அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே. |
3 |
394 |
இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான் இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. |
4 |
395 |
உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும் மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம் கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. |
5 |
396 |
தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. |
6 |
397 |
விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும் கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. |
7 |
398 |
திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய் அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே. |
8 |
399 |
வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. |
9 |
400 |
மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான் கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. |
10 |
401 |
பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல் வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. |
11 |
எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1)
தரவு கொச்சகக்கலிப்பா
402 |
மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. |
1 |
403 |
பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும் இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர் மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார் சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. |
2 |
404 |
மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார் உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர் திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. |
3 |
405 |
கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர் தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. |
4 |
406 |
பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ் திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. |
5 |
407 |
கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர் தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. |
6 |
408 |
கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர் தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. |
7 |
409 |
வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய் எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர் எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. |
8 |
410 |
குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல் நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர் குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. |
9 |
411 |
பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. |
10 |
ஒன்பதாம் திருமொழி - மரவடியை
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
412 |
மரவடியைத்தம்பிக்குவான்பணையம் செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து திருவடிதன்திருவுருவும் உருவுடையமலர்நீலம் |
1 |
413 |
தன்னடியார்திறத்தகத்துத் என்னடியார்அதுசெய்யார் மன்னுடையவிபீடணற்கா என்னுடையதிருவரங்கற்கன்றியும் |
2 |
414 |
கருளுடையபொழில்மருதும் உருளுடையசகடரையும்மல்லரையும் இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு அருள்கொடுத்திட்டுஅடியவரை |
3 |
415 |
பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய அதில்நாயகராகிவீற்றிருந்த புதுநாண்மலர்க்கமலம் பொதுநாயகம்பாவித்து |
4 |
416 |
ஆமையாய்க்கங்கையாய் நான்முகனாய்நான்மறையாய் சேமமுடைநாரதனார் பூமருவிப்புள்ளினங்கள் |
5 |
417 |
மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட பத்தர்களும்பகவர்களும் சித்தர்களும்தொழுதிறைஞ்சத் |
6 |
418 |
குறட்பிரமசாரியாய் இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை எறிப்புடையமணிவரைமேல் சிறப்புடையபணங்கள்மிசைச் |
7 |
419 |
உரம்பற்றிஇரணியனை சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க உரம்பெற்றமலர்க்கமலம் வரம்புற்றகதிர்ச்செந்நெல் |
8 |
420 |
தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய் மூவுருவினிராமனாய்க் சேவலொடுபெடையன்னம் பூவணைமேல்துதைந்தெழு |
9 |
421 |
செருவாளும்புள்ளாளன்மண்ணாளன் ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன் இரவாளன்பகலாளன்என்னையாளன் திருவாளன்இனிதாகத் |
10 |
422 |
கைந்நாகத்திடர்கடிந்த தென்னாடும்வடநாடும்தொழநின்ற மெய்ந்நாவன்மெய்யடியான் எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ் |
11 |
பத்தாம் திருமொழி - துப்புடையாரை
(அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே
பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல். )
பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல். )
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
423 |
துப்புடையாரைஅடைவதெல்லாம் ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன் எய்ப்புஎன்னைவந்துநலியும்போது அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன் |
1 |
424 |
சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய் நாமடித்துஎன்னைஅனேகதண்டம் போமிடத்துஉன்திறத்துஎத்தனையும் ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன் |
2 |
425 |
எல்லையில்வாசல்குறுகச்சென்றால் நில்லுமினென்னும்உபாயமில்லை சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம் அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும் |
3 |
426 |
ஒற்றைவிடையனும்நான்முகனும் முற்றஉலகெல்லாம்நீயேயாகி அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும் |
4 |
427 |
பையரவினணைப் பாற்கடலுள் உய்யஉலகுபடைக்கவேண்டி வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக் ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும் |
5 |
428 |
தண்ணெனவில்லைநமன்தமர்கள் மண்ணொடுநீரும்எரியும்காலும் எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம் அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும் |
6 |
429 |
செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற எஞ்சலிலென்னுடையின்னமுதே. வஞ்சவுருவின்நமன்தமர்கள் அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும் |
7 |
430 |
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் ஊனேபுகேயென்றுமோதும்போது வானேய்வானவர்தங்களீசா. ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும் |
8 |
431 |
குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா. அன்றுமுதல் இன்றறுதியா நன்றும்கொடியநமன்தமர்கள் அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும் |
9 |
432 |
மாயவனைமதுசூதனனை ஆயர்களேற்றினைஅச்சுதனை வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன் தூயமனத்தனராகிவல்லார் |
10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - திருமொழி, கண்டமென்னும்கடிநகரே, அரங்கத்தரவணைப்பள்ளியானே, தென்திருமாலிருஞ்சோலையே, தம்அன்னைநரகம்புகாள், விருத்தம், த்தமனிருக்கை, எம்புருடோ, மால்புருடோ, த்தமன்வாழ்வு, நாரணன், வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர், பெருமை, மாலிருஞ்சோலையதே, நீஎன்னைக்காக்கவேண்டும், திருமாலிருஞ்சோலையதே, திருவரங்கமென்பதுவே, திருவரங்கம், அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய, எம்மானே, என்னைக்குறிக்கொண்டுஎன்றும், மதிளரங்கமென்பதுவே, புனலரங்கமென்பதுவே, பெரியகோயிலின், நாரணன்தம்அன்னைநரகம்புகாள், என்றுஅழைத்தக்கால், செல்வன்பொன்மலை, தண்திருமாலிருஞ்சோலையே, ஒருவாரணம், கலிநிலைத்துறை, சிக்கெனநாடுதிரேல், கூறுதல், இருக்குமிடம்நாடுதிரேல், செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர், புருடோ, நான்காம், மறுமைக்கில்லை, கோவிந்தா, கண்ணுறக்கமதாவதன்முன்னம், அரவதண்டத்தில்உய்யலுமாமே, எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய, என்றும், மானிடப்பேரிட்டு