முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி

பெரிய திருமொழி
முதல் பத்து
948 |
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் |
1.1 |
949 |
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி பாவியேனுணரா தெத்தனைபகலும் தூவிசேரன்னம் துணையொடும்புணரும் நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் |
1.2 |
950 |
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித் ஊமனார் கண்டகனவிலும்பழுதாய் காமனார் தாதைநம்முடையடிகள் நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன் |
1.3 |
951 |
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன் பன்றியா யன்றுபாரகங்கீண்ட நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன் |
1.4 |
952 |
கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன் தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன் உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன் நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் |
1.5 |
953 |
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம் அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன் |
1.6 |
954 |
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர் கற்பகம்புலவர்களைகணென்றூலகில் சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் |
1.7 |
955 |
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் |
1.8 |
956 |
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் |
1.9 |
957 |
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு |
1.10 |
958 |
வாலிமாவலத்தொருவனதுடல்கெட ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற ஆலிமாமுகிலதிர்தர அருவரை பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப் |
2.1 |
959 |
கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம் விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரி தரு |
2.2 |
960 |
துடிகொள்_ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன் கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின் பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும் |
2.3 |
961 |
மறங்கொளாளரியுருவெனவெருவர திறந்து,வானவர்மணிமுடிபணிதர இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திடக் பிறங்குமாமணியருவியொடிழிதரு |
2.4 |
962 |
கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல் அரைசெய்மேகலையலர்மகளவளொடும் வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும் |
2.5 |
963 |
பணங்களாயிரமுடையநல்லவரவணைப் இணங்கிவானவர்மணிமுடிபணிதர மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும் |
2.6 |
964 |
கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர் பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும் |
2.7 |
965 |
இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப் |
2.8 |
966 |
ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற பேதைவண்டுகளெரியெனவெருவரு |
2.9 |
967 |
கரியமாமுகிற்படலங்கள்கிடந்து பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர் அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு |
2.10 |
968 |
முற்றமூத்துக்கோல்துணையா இற்றகால்போல்தள்ளி பெற்றதாய்போல்வந்த வற்றவாங்கியுண்ட |
3.1 |
969 |
முதுகுபற்றிக்கைத்த விதிர்விதிர்த்துக்கண் இதுவென்னப்பர் மூத்தவா மதுவுண்வண்டுபண்கள் |
3.2 |
970 |
உறிகள்போல்மெய்ந்நரம் நெறியைநோக்கிக்கண் அறிதியாகில்நெஞ்சம் வெறிகொள்வண்டுபண்கள் |
3.3 |
971 |
பீளைசோரக்கண்ணி தாள்கள் நோவத்தம்மில் காளையாகிக்கன்று வாளைபாயும்தண்ட |
3.4 |
972 |
பண்டுகாமரான உண்டவாறும், வாழ்ந்த தண்டுகாலாவூன்றி தள்ளிநடவாமுன், வண்டுபாடும்தண்டு |
3.5 |
973 |
எய்த்தசொல்லோடீளை பித்தர்ப்போலச்சித்தம் அத்தனெந்தையாதி மைத்தசோதியெம்பெ |
3.6 |
974 |
பப்பவப்பர்மூத்த யொப்ப, ஐக்கள்போத செப்புநேர்மென்கொங்கை வைப்பும்நங்கள்வாழ்வு |
3.7 |
975 |
ஈசிபோமினீங்கி கூசியிட்டீரென்று நாசமானபாசம் வாசம்மல்குதண்டு |
3.8 |
976 |
புலன்கள்நையமெய்யில் கலங்கவைக்கள்போத அலங்கலாயதண்டு வலங்கொள்தொண்டர்ப்பாடி |
3.9 |
977 |
வண்டுதண்டேனுண்டுவாழும் கண்டல்வேலிமங்கை கொண்டுதொண்டர்ப்பாடி அண்டமல்லால்மற்ற |
3.10 |
978 |
ஏனமுனாகியிருநிலமிடந்து தானவனாகம்தரணியில்புரளத் தேனமர்சோலைக்கற்பகம்பயந்த வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல் |
4.1 |
979 |
கானிடையுருவைச்சுடுசரம்துரந்து ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப தேனுடைக்கமலத்தயனொடுதேவர் வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் |
4.2 |
980 |
இலங்கையும்கடலுமடலருந்துப்பின் குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில் வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல் |
4.3 |
981 |
துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே. பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும் அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் |
4.4 |
982 |
பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் |
4.5 |
983 |
தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த காரணந்தன்னால்கடும்புனல்கயத்த வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் |
4.6 |
984 |
வெந்திறல்களிறும்வேலைவாயமுதும் இந்திரற்கருளியெமக்குமீந்தருளும் அந்தரத்தமரரடியிணைவணங்க மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல் |
4.7 |
985 |
மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த ஊன்முனிந்தவனதுடலிருபிளவா தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல் |
4.8 |
986 |
கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர்க் உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல் |
4.9 |
987 |
வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல் கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணிக் வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள் இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ் |
4.10 |
988 |
கலையும்கரியும்பரிமாவும் சிலையும்கணையும்துணையாகச் மலைகொண்டலைநீரணைகட்டி தலைவன், தலைபத்தறுத்துகந்தான் |
5.1 |
989 |
கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும், உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான், இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும், தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.2 |
990 |
உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும், நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி வலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும் சலவன், சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.3 |
991 |
ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய, தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.4 |
992 |
அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால் விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன், கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத் தடுத்தான், தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.5 |
993 |
தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட வாயான், தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை ஏயானிரப்ப, மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும் தாயான், காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.6 |
994 |
ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை, ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய், வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும் தானாய், தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.7 |
995 |
வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து, ஓர் சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று, என் எந்தாய். சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில் தந்தான், சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.8 |
996 |
தொண்டாமினமுமிமையோரும் துணைநுaல்மார்பினந்தணரும், அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம், வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய, தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே. |
5.9 |
997 |
தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை, காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை, ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள, பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே. |
5.10 |
998 |
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான், ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.1 |
999 |
சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து, புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா, அலம்புரிதடக்கையாயனேமாயா. வானவர்க்கரசனே., வானோர் நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.2 |
1000 |
சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து, காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும், வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த, நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.3 |
1001 |
வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை, நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்றி எற்றிவைத்து, எரியெழுகின்ற செம்பினாலியன்றபாவையைப் பாவீ. தழுவெனமொழிவதர்க்கஞ்சி, நம்பனே. வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.4 |
1002 |
இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று, நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை, கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி, நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.5 |
1003 |
கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு, ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார் பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே. பாற்கடல்கிடந்தாய்., நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.6 |
1004 |
நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும், துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்., வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா. தானவர்க்கென்றும் நஞ்சனே., வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.7 |
1005 |
ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர் கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா., பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என் நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.8 |
1006 |
ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல், தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன், தேனுடைக்கமலத்திருவினுக்கரசே. திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்., நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். |
6.9 |
1007 |
ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று, இமையோர் நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து, காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள், ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே. |
6.10 |
1008 |
அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன் பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம், பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச் செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. |
7.1 |
1009 |
அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன் கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம், மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப, சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே. |
7.2 |
1010 |
ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன் வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம், ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால், தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. |
7.3 |
1011 |
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம், கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று, தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. |
7.4 |
1012 |
மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன் பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம், நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய, சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. |
7.5 |
1013 |
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று, இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம், நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை, திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. |
7.6 |
1014 |
முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும், அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம், கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய், தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. |
7.7 |
1015 |
நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால் ஏத்த, அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம், காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய், தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. |
7.8 |
1016 |
நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான், அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம், நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச் சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே. |
7.9 |
1017 |
செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய, எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்_ற்புலவன், மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன், செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே. |
7.10 |
1018 |
கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான், சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன், பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச் செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே. |
8.1 |
1019 |
பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை, பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம், வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.2 |
1020 |
நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான், என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான், கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான், சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.3 |
1021 |
பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர், கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன், ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான் தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.4 |
1022 |
வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய், மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான், எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான், திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.5 |
1023 |
எண்டிசைகளுமேழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து, பண்டோராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன், ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.6 |
1024 |
பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான், பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம், காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர, சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.7 |
1025 |
அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன், வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன், கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும், செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.8 |
1026 |
பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும், பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம், வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம், தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. |
8.9 |
1027 |
செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை, மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள், சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே, வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே. |
8.10 |
1028 |
தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும், நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால், வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா., நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே. |
9.1 |
1029 |
மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து, நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன், தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.2 |
1030 |
கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால், என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன், குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா., அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.3 |
1031 |
குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன், நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன், நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா., அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.4 |
1032 |
எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன், துப்பா. நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன், செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என் அப்பா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.5 |
1033 |
மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம், புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன், விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா., அண்ணா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.6 |
1034 |
தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன், பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன், கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா., அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.7 |
1035 |
நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால், ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்., கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா., ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.8 |
1036 |
பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன், மற்றேலொன்றறியேன் மாயனே. எங்கள்மாதவனே., கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா., அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. |
9.9 |
1037 |
கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை, விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை, திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன், பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே. |
9.10 |
1038 |
கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன், திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்., விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய, அண்ணா. அடியேன் இடரைக்களையாயே. |
10.1 |
1039 |
இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர் குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்., விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய, அலங்கல்துளபமுடியாய். அருளாயே. |
10.2 |
1040 |
நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு, ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்., சீரார் திருவேங்கடமாமலைமேய, ஆராவமுதே. அடியேற்கருளாயே. |
10.3 |
1041 |
உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக, கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே, விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய, அண்டா. அடியேனுக்கு அருள்புரியாயே. |
10.4 |
1042 |
தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி, பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்., சேணார் திருவேங்கடமாமலைமேய, கோணாகணையாய். குறிக்கொள்ளெனைநீயே. |
10.5 |
1043 |
மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி, தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன், மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய, என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே. |
10.6 |
1044 |
மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த, ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா., தேனே. திருவேங்கடமாமலைமேய, கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே. |
10.7 |
1045 |
சேயனணியன் எனசிந்தையுள்நின்ற மாயன், மணிவாளொளி வெண்டரளங்கள், வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய, ஆயனடியல்லது மற்றறையேனே. |
10.8 |
1046 |
வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய், நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ., சிந்தாமணியே திருவேங்கடம்மேய எந்தாய்., இனியானுன்னை யென்றும் விடேனே. |
10.9 |
1047 |
வில்லார்மலி வேங்கடமாமலைமேய, மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை, கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை, வல்லாரவர் வானவராகுவர்த்தாமே. |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - வதரியாச்சிராமத்துள்ளானே, சிங்கவேள்குன்றமே, சாளக்கிராமமடைநெஞ்சே, நைமிசாரணியத்துளெந்தாய், வதரிவணங்குதுமே, அடியேனையாட்கொண்டருளே, பிரிதிசென்றடைநெஞ்சே, நாராயணாவென்னும்நாமம், திருவேங்கடமடைநெஞ்சமே, திருவேங்கடம்மேய, அவுணன், இருந்தநல்லிமயத்து, வந்தடைந்தேன், கண்டுகொண்டேன், கரைமேல், திருவேங்கடமாமலைமேய, வாளெயிற்றோர்க்கோளரியாய், இருந்தவம்மானதிடம், கொண்டேன், வேங்கடமாமலைமேய, போழ்ந்தபுனிதனிடம், திருவேங்கடமாமலை, அங்கோராளரியாய், உன்னைக்காண்பதோராசையினால், அரக்கர், வண்டறை, வாயான், அடியேன், நான்கண்டு, நாராயணாவென்னும், சுழன்று, பாடும், பெருகு, எந்தாய், ழாயான், வாறும், தள்ளிநடவாமுன், வந்துந்திருவடியடைந்தேன்