பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
மிகைப்பாடல்கள்
அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை, இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால்,- வெள்ளத்தில் தீர்த்தம் மிகை. (புறத்திரட்டு -146) |
1 |
'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பது இமையத்து அனையார்கண் இல்லை;-சிமைய நகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட! நகையேதான் ஆற்றுவிடும். (புறத்திரட்டு - 1107) |
2 |
அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே, செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய பிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய், பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து? (புறத்திரட்டு - 1139) |
3 |
பழமொழி நானூறு முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, பழமொழி, நானூறு, இலக்கியங்கள், புறத்திரட்டு, கீழ்க்கணக்கு, பதினெண், தீர்த்தம், சங்க