முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.098.உள்ளம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.098.உள்ளம்
5.098.உள்ளம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
2056 | நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை ஆற லைக்கநின் றாடும் அமுதினைத் தேற லைத்தௌ யைத்தௌ வாய்த்ததோர் ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. |
5.098.1 |
திருநீறு நன்கு பூசப்பெற்ற ஒப்பற மேனியையும், ஒங்கிய சடையில் கங்கையாறு அலைவீச நின்று ஆடும் அமுதமும், தேனும் அதன் தௌவும் அத்தௌவுவாய்த்த ஊறல் போல்வானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
2057 | பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடும் தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச் சிந்தி யைத்தௌ வைத்தௌ வாய்த்ததோர் எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. |
5.098.2 |
பொந்து போல்வதாகிய உடலிற்புகுந்து அதன் கட்டினை நீக்கப் புகுந்திடும் தந்தையும், தீப்போன்ற மேனியை அத்தௌவு வாய்த்த எந்தையும் ஆகி நின்ற பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
2058 | வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார் கள்ளத தைக்கழி யம்மன மொன்றிநின் றுள்ளத் தில்லொளி யைக் கண்ட துள்ளமே. |
5.098.3 |
இன்ப வெள்ளத்தாராகிய விஞ்சையர்கள் விரும்பும்படி கங்கைவெள்ளத்தைச் சடையில்வைத்த மேலோரை மனம் கள்ளத்தை நீங்க உள்ளம் ஒன்றியிருந்து உள்ளத்தில் ஒளியாகக் கண்டது.
2059 | அம்மா னையமு தின்னமு தேயென்று தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழும் செம்மா னநிறம் போல்தோர் சிந்தையுள் எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. |
5.098.4 |
அம்மானை , அமுதே இன்னமுதே என்று தத்துவத்தை அறிந்த அடியார் தொழும் நம் தலைவனும் செம்மையாகிய பெருமை மிக்க நிறம்போல்தாகிச் சிந்தையுள் இருக்கும் எம்மானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
2060 | கூறே றும்உமை பாகமோர் பாலராய் ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர் பாறே றுந்தலை யேந்திப் பலவி(ல்)லம் ஏறே றுமெந்தை யைக்கண்ட னுள்ளமே. |
5.098.5 |
கூறாகப் பொருந்தி உடையொரு பாகராகிக், கங்கை ஏறிய சடைமேற் பிறை சூடியவராய் , பருந்துகள் ஏறிப்பறக்கும் வெண்டலை ஏந்திப் பல இல்லங்கள் தோறும் இடபம் ஏறிவரும் எந்தையை என் உள்ளம் கண்டு கொண்டது.
2061 | முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார் தந்நெஞ் சந்தமக் குத்தாமி லாதவர் வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரே என்னெஞ் சிலீச னைக்கண்டதெ னுள்ளமே. |
5.098.6 |
தம் நெஞ்சம் தமக்குத்தாம் இல்லத சிலர் முன்னுதற்குரிய நெஞ்சம் இல்லாமல் மூர்க்கராய் வாழ்ந்து சாகின்றார், வன்மையுடைய நெஞ்சத்தை நீங்க வல்லமை உடையவர்களே என் நெஞ்சில் ஈசனை என்னுள்ளம் கண்டுகொண்டது.
2062 | வென்றா னைப்புல னைந்துமென் தீவினை கொன்றா னைக்குணத் தாரே வணங்கிட நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம் ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. |
5.098.7 |
புலன்கள் ஐந்தும் வென்றவனும் என் தீய வினைகளைக் கொன்றவனும், குணத்தால் வணங்கிட நன்றாக நல்லமனத்தில் வைக்கும் ஞானம் என்னும் ஒப்பற்ற பொருளை உடையானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
2063 | மருவி னைமட நெஞ்சம் மனம்புகும் குருவி னைக்குணத் தாலே வணங்கிடும் திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற உருவி னைக்கண்டு கொண்டதே னுள்ளமே. |
5.098.8 |
அறிவற்ற மடநெஞ்சமே மனம்புகும் குரு நாதனும், குணத்தால் வணங்கத்தக்க திருவும் ஆகிய பெருமானைப் பொருந்தினாய் சிந்தையுள் சிவனாய் நின்ற உருவினை என்னுள்ளம் கண்டுகொண்டது.
2064 | தேச னைத்திரு மால்பிர மன்செயும் பூச னைப்புண ரிற்புணர் வாயதோர் நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. |
5.098.9 |
ஒளி உடையவனும், திருமாலும், பிரமனும் செய்யும் பூசனைகள் பொருந்தினால் அங்குப் பொருந்துகின்ற விருப்பம் உடையவனும், நெஞ்சுக்குள் நிறைவாகி நின்ற ஈசனுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
2065 | வெறுத்தா னைம்புல னும்பிர மன்தலை அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக் கறுத்தா னைக்கா லினில்விர லொன்றினால் ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. |
5.098.10 |
ஐம்புலன்களை வெறுத்தவனும், பிரமன் தலையினை அறுத்தவனும், இராவணன் திருக்கயிலாயத்தின் மேற்சினந்தபோது காலினில் திருவிரல் ஒன்றினால் ஒறுத்தவனும் ஆகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - உள்ளம், னுள்ளமே, கொண்டதெ, பெருமானை, னைக்கண்டு, கண்டுகொண்டது, கொண்டது, சிந்தையுள், நெஞ்சம், என்னுள்ளம், உடையவனும், னைக்குணத், குணத்தால், மனம்புகும், வணங்கிட, வெள்ளத், திருச்சிற்றம்பலம், திருமுறை, யைத்தௌ, வாய்த்ததோர், புகுந்திடும், நீக்கப், சாகின்றார்