முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.094.தொழற்பாலனம் என்னும்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.094.தொழற்பாலனம் என்னும்

5.094.தொழற்பாலனம் என்னும்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1994 | அண்டத் தானை யமரர் தொழப்படும் பண்டத் தானைப் பவித்திர மார்திரு முண்டத் தானைமுறை றாத இளம்பிறைத் துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.1 |
அண்டத்தில் உள்ளவனும், தேவர்களால் தொழப்படும் பொருளும், பவித்துரம் உடைய நெற்றியை உடையவனும், இளம் பிறைப் பிளவினைச் சூடியவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக.
1995 | முத்தொப் பானை முளைத்தெழு கற்பக வித்தொப் பானை விளக்கிட் நேரொளி ஓத்தொப் பானை யொளிபவ ளத்திரள் தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.2 |
முத்து ஓப்பவனும், முளைத்தெழுகின்ற கற்பகவித்துப் போல்வானும், திருவிளக்கிடை நேர்கின்ற ஓளியை ஓத்திருப்பவனும், ஓளியையுடைய பவளத்திரளின் கொத்தினை ஓப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக.
1996 | பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர் வண்ணத் தானை வகையுணர் வான்றனை எண்ணத் தானை யிளம்பிறை போல்வெள்ளைச் சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.3 |
பண் ஓத்தவனும், பவளம் திரண்டது போன்ற செவ்வண்ணம் உடையவனும், வகைகளையெல்லாம் உணர்பவனும், அடியார்கள் எண்ணத்தில் இருப்பவனும், இளம்பிறை போன்ற வெண்சுண்ணம் உடையவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக.
1997 | விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப் படலையானைப் பலிதிரி வான்செலும் நடலை யானை நரிபிரி யாததோர் சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.4 |
விடலைப்பருவம் உடையவனும், மணங்கமழும் கொன்றைமாலை உடையவனும், பலிபெறுதற்காகத் திரிதமுசெல்லும் துன்பம் உடையவனும், நரிகள் பிரிந்துசெல்லாத சுடுகாட்டில் இருப்பவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக.
1998 | பரிதி யானைப்பல் வேறு சமயங்கள் கருதி யானைக்கண் டார்மனம் மேவிய பிரிதி யானைப் பிறரறி யாததோர் சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.5 |
ஞானசூரியனாக உள்ளவனும், பல்வேறு சமயங்களாற் கருதப்பட்டவன்னம், கண்டார் மனத்தை விரும்பியமர்ந்தவனும், பிறர் அறியாததோர் சுருதியானும் ஆஇய பெருமானே, தொழத்தக்கவன்; காண்பீராக.
1999 | ஆதி யானை அமரர் தொழப்படும் நீதி யானை நியம நெறிகளை ஓதி யானை உணர்தற் கரியதோர் சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.6 |
முதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமயெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஓப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக.
2000 | ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழும் கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை மூலத் தானை முதல்வனை மூவிலைச் சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.7 |
உலகமாகி உள்ளவனும், நல்லவனும், வல்லவர் தொழும் கோலத்தை உடையவனும், கணமாகிய பெருங்குன்றானவனும், மூலமாக உள்ளவனும், முதல்வனும், மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
2001 | ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும் வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச் சாதிப் பானைத் தவத்தினை மாற்றங்கள் சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.8 |
முதற்கண்ணே தோன்றிய அட்ட மூர்த்தியும், பஞ்சகவ்வியம் அபிடேகம் கொள்பவனும், நமது மேல்வினைகள் வெந்து நீங்கும்படிக் கடைக்கண் சாதிப்பவனும், தவத்திடை மாற்றங்கள் தந்து சோதிப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
2002 | நீற்றி னானை நிகரில்வெண் கோவணக் கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை ஆற்றி னானை யமரர்த மாருயிர் தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.9 |
திருநீறணிந்தவனும், ஒப்பற்ற வெள்ளிய கோவணக்கீறு உடையவனும், ஒளிகிளரும் சிவந்த சடைக்கண் கங்கையை உடையவனும் தேவர்க்கு உயிர்வழங்கினானுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
2003 | விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள் கட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு பட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ் சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.10 |
மெய்ஞ்ஞானத்து அடியேனை விட்டவனும், மெய்ப்பொருளைக் காட்டியவனும், உமாதேவியினிடத்து அன்பு பொருந்தியவனும், பகைத்தவராகிய திரிபுராதிகள் முப்புரங்களைச் சுட்டவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
2004 | முற்றி னானை இராவணன் நீண்முடி ஒற்றி னானை யொருவிர லாலுறப் பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச் சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே. |
5.094.11 |
எல்லாவற்றையும் சூழ்ந்திருபவனும், இராவணன் நீண்முடிகளை ஒற்றியபோது ஒரு விரலால் உறப்பற்றியவனும், ஒரு வெண்டலை உடையவனும், பாம்பினை அரைக்கண் சுற்றியவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொழற்பாலனம் என்னும் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருமானே, தொழத்தக்கவன், காண்பீராக, டீர்தொழற், உடையவனும், யானைக்கண், உள்ளவனும், தொழப்படும், தானைக்கண், யாததோர், முதல்வனும், இராவணன், இருப்பவனும், னானைக்கண், மாற்றங்கள், என்னும், தொழற்பாலனம், தேவர்களால், திருச்சிற்றம்பலம், திருமுறை, தானைப், பானைக்கண்