முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.008.திருச்சிக்கல்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.008.திருச்சிக்கல்
2.008.திருச்சிக்கல்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நவநீதநாதர்.
தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.
1547 | வானு
லாவுமதி வந்துல தேனு லாவுமலர்ச் சோலைமல் வேனல் வேளைவிழித் திட்டவெண் ஞான மாகநினை வார்வினை |
2.008.1 |
வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும் நிறைந்து விளங்கும் திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற் காலத்துக் குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பதி ஞானத்தாலே நினைபவர் வினைகள் நைந்துஅறும்.
1548 | மடங்கொள்
வாளைகுதி கொள்ளு திடங்கொண் மாமறை யோரவர் விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு அடைந்து வாழும்மடி |
2.008. 2 |
இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக் களிக்கும் மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும் மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான சிக்கலில் எழுந்தருளிய, விடம் தங்கிய கண்டத்தினை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய் அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.
1549 | நீல
நெய்தனில விம்மல சேலுமா லுங்கழ னிவ்வளம் வேலொண் கண்ணியி னாளையொர் பாலவண் ணன்கழ லேத்தநம் |
2.008. 3 |
நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.
1550 | மங்குல்தங்
கும்மறை தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் வெங்கண்வெள் ளேறுடை தங்கு மேற்சர தந்திரு |
2.008. 5 |
மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும் கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.
1551 | மங்குல்தங்
கும்மறை தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் வெங்கண்வெள் ளேறுடை தங்கு மேற்சர தந்திரு |
2.008. 5 |
மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும் கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.
1552 | வண்டி
ரைத்துமது விம்மிய தெண்டி ரைக்கொள்புனல் வந்தொழு விண்டி ரைத்தலம ராற்றிகழ் கண்டி ரைத்துமன மேமதி |
2.008.6 |
வண்டுகள் ஒலிசெய்து சூழத் தேனை மிகுதியாகச் சொரியும் பெரிய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகள் சூழ்ந்ததும் தண்ணீர் பெருகி ஓடும் வயல்களை உடையதுமான சிக்கற் பதியில், திருமால் பூசித்த மலர்களால் திகழும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைத் தரிசித்துத் துதிசெய்து நற்கதி பெற மனமே மதித்துப் போற்றுவாயாக.
1553 | முன்னுமா
டம்மதின் மூன்றுட துன்னுவார் வெங்கணை யொன்று செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் உன்னிநீ டம்மன மேநினை |
2.008. 7 |
மனமே! வானவெளியில் முற்பட்டுச் செல்லும் பெரிய அரக்கர்களின் கோட்டைகள், எரியில் அழிந்து விழுமாறு விரைந்து செல்வதும் நீண்டதும் கொடியதுமான கணை ஒன்றைச் செலுத்தி அழித்த ஒளிவடிவினனாகிய செந்நெல்பொருந்திய வயல்கள் சூழ்ந்த சிக்கல் என்னும் பதியில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் பலகாலும் எண்ணி அழுந்தி நம் வினைகள் தேய்ந்தொழிய நினைவாயாக.
1554 | தெற்ற
லாகிய தென்னிலங் பற்றி னான்முடி பத்தொடு செற்ற தேவனஞ் சிக்கல்வெண் உற்று நீநினை யாய்வினை |
2.008.8 |
தௌந்த அறிவினை உடைய தென்இலங்கைக்கு இறைவனாகிய இராவணன் ஈசன் எழுந்தருளிய கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டுப் பற்றிய அளவில் அவன் முடிகள் பத்தோடு இருபது தோள்களும் நெரியுமாறு செற்ற தேவனாகிய நம் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, மனமே! வினைகள் யாவும் தேய்ந்தொழிய நீ உற்று நினைவாயாக.
1555 | மாலி
னோடரு மாமறை கோலி னார்குறு கச்சிவன் சீலந் தாமறி யார்திகழ் பாலும் பன்மலர் தூவப் |
2.008.9 |
திருமாலும் அரியமறை வல்ல நான்முகனும் சிவபிரானின் அடிமுடிகளைக் காண ஏனமும் அன்னமுமாய வடிவெடுத்து முயன்றனர். முயன்றும் அப்பெருமானின் உண்மைத்தன்மையை உணராராயினர். அவ்விறைவன் சிக்கலில் வெண்ணெய்ப் பிரான் என்ற திருப்பெயரோடு வீற்றிருந்தருளுகின்றான். அவனைப் பாலபிடேகம்புரிந்து பல மலர்களைத்தூவி வழிபடின் நம் பாவங்கள் நீங்கும்.
1556 | பட்டை
நற்றுவ ராடையி கட்ட மண்கழுக் கள்சொல் சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு பட்டன் சேவடி யேபணி |
2.008.10 |
நல்ல மருதந்துவர்ப்பட்டையின் சாறு ஊட்டப் பட்ட ஆடையை அணிந்த சாக்கியரும், முறையற்ற பண்புகளைக் கொண்ட உடற்கட்டுடைய கழுவேறுதற்குரிய சமணர்களும் சொல்லும் பொய்யுரைகளைக் கருதாது நீர் மேலானவனும், சிக்கலில் வெண்ணெய்ப் பெருமானாக விளங்குபவனும் ஆகிய செழுமையான சிறந்த வேதங்களில் வல்ல புலவனாகிய சிவபிரான் சேவடிகளையே பிணிகள் தீரப்பணிவீர்களாக.
1557 | கந்த
மார்பொழிற் காழியுண் செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் சந்த மாச்சொன்ன செந்தமிழ் வெந்த நீறணியும்பெரு |
2.008.11 |
மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர் சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சிக்கல் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வெண்ணெய்ப், பெருமான், திருவடிகளை, ணெய்ப்பெரு, சிக்கலுள், சிக்கல்வெண், சிக்கல், என்னும், செல்வம், சூழ்ந்த, சிக்கலில், பொருந்திய, கண்களை, தலத்தில், குந்திகழ், விளங்கும், திருச்சிக்கல், வினைகள், தென்னைகளை, கொண்டு, சோலைகளையும், மறையவரின், தங்கும், மேகங்கள், நிறைந்துவிளங்கும், மாடவீடுகளையும், உயர்ந்து, அவற்றின், வளர்ந்துள்ள, நாள்தோறும், யாய்வினை, பதியில், திருவடிகளைப், தேய்ந்தொழிய, நினைவாயாக, பெருகும், தகையுமே, வெள்ளேற்று, ஊர்தியை, அடையின், கிடைத்தல், சினம்மிக்க, தெங்குதுங், சூழ்ந்ததும், பொய்கைகள், சிறந்த, எழுந்தருளிய, ணெய்ப்பிரான், மலர்கள், அடைந்து, திருமுறை, திருச்சிற்றம்பலம், பொய்கைசூழ், மல்கிய, பாவங்கள், நீங்கும், ளேறுடை, வெங்கண்வெள், வெண்ணெய்ப்பி, மேற்சர, தந்திரு, செல்வமல், கப்பொழிற், மங்குல்தங், கும்மறை, யோர்கண்மா, லேமிகு, நாளுந்