முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 46.சிற்றினம் சேராமை
திருக்குறள் - 46.சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். |
451 |
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு) இனத்தியல்ப தாகும் அறிவு. |
452 |
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல். |
453 |
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்(கு) இனத்துள தாகும் அறிவு. |
454 |
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். |
455 |
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்(கு) இல்லைநன் றாகா வினை. |
456 |
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
மனநலம் மன்னுயிர்க்(கு) ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். |
457 |
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்(கு) இனநலம் ஏமாப்(பு) உடைத்து. |
458 |
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப்(பு) உடைத்து. |
459 |
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். |
460 |
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
46.சிற்றினம் சேராமை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இனத்தின், சேர்ந்த, தூய்மை, இனநலம், மனநலம், மனத்தின், எல்லாப், நன்மையால், மேலும், உடைத்து, மனதின், ஏற்படும், இயல்பு, இலக்கியங்கள், literature, மாந்தர்க், தாகும், சிற்றினம், நிலத்தின், காட்டி