முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.016.திருக்கலையநல்லூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.016.திருக்கலையநல்லூர்

7.016.திருக்கலையநல்லூர்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகலைநாதர்.
தேவியார் - அமிர்தவல்லியம்மை.
156 |
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் |
7.016.1 |
'தென்னங் குரும்பை போலும் தனங்களையும், பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து, அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது?' என்று வினவின், பேரரும்புகளின் அருகே சென்று, 'சுரும்பு' என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட, ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட, அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில், கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே; அறிக.
157 |
செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும் கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங் |
7.016.2 |
'போரை விரும்பிய சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை, தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி, வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து, இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து, இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது?' என்று வினவின், மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும், முரசு, மத்தளம் ஆகிய வாச்சியங்களது ஓசையும், சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால், கரிய எருமை நீரிற் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள், தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக.
158 |
இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத் மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும் கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக் |
7.016.3 |
'இண்டை மாலையும் விடுபூவும் திரட்டிக்கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து, கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய, அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி, அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனது ஊர் யாது?' என்று வினவின், மண்டபங்களிலும், கோபுரங்களிலும், மாளிகைகளிலும், சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும், மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற, தாமரைப் பொய்கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக.
159 |
மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான் உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி அலைஅடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையால் |
7.016.4 |
'மலைமகள், விளையாட்டை மேற்கொண்டு மகிழ்ச்சி மேலிட்டவளாய், அவளது வளைபொருந்திய கைகளால் தனது கண்களை மூடினமையால், எல்லா உலகங்களையும் ஒருங்கே வலிய இருள் பரந்து மூடிக்கொள்ள, அவ்விருள் நீங்கும்படி நெற்றியிடத்து ஒரு கண்ணைத் தோற்றுவித்து அருள் புரிந்த மேலானவனது ஊர் யாது?' என்று வினவின், அலை பொருந்திய நீர் பெருக்கெடுத்து, யானைத் தந்தத்தைப் புரட்டி அகில் மரத்தையும், சந்தன மரத்தையும் தள்ளிக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரைமேல் உள்ள, நூல்களை யுணர்ந்து அந்நெறியானே வறுமையை ஓட்டுகின்ற அந்தணர்களது வேள்விப்புகையால், கூட்டமாகிய மேகத்தின் தோற்றம் போன்ற அழகு மிகுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக.
160 |
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார் சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும் கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார் |
7.016.5 |
'தன்னை வழிபடுவோர்க்கு நின்ற கோலமாய்த் தோன்றுபவனாகிய திருமாலும், தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க, அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக, மலையாகிய வில்லும், பாம்பாகிய நாணியும், தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த, உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது?' என்று வினவின், சொல்வகைகள் பலவற்றையும், பொருள் வகைகள் பலவற்றையும் உடைய வேதங்கள் நான்கையும், தோத்திரங்கள் பலவற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று, எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண்.
161 |
பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப் செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித் தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும் கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை |
7.016.6 |
'தக்கது சிறிதும் அறியாத தக்கனது வேள்வியில் பெரிய தேவர்கள், தங்கள் தலை, தோள், பல், கை, கண் என்னும் உறுப்புக்கள் வலிமையழிந் தொழியுமாறு ஒறுத்து, சந்திரனது கலைகள் சிதையும்படி கால் திருவிரலால் தேய்த்து, பின்பு அவர் எல்லாரிடத்தும் கருணையை மிக வழங்கிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது?' என்று வினவினால், பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, 'மல்லிகைக் கொடி, சண்பகமரம்' என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம், மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல்களையுடைய திருக்கலயநல்லூரே ; அறிக.
162 |
இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும் நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாசம் ஆகி பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப் கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல் |
7.016.7 |
'இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தனது பத்துத் தலைகளும், இருபது தோள்களும் சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலைக் கயிலை மலையின்மேல் ஊன்றி, 'நிலம், மிக்க நீர், நெருப்பு, காற்று, வானம், என்னும் பெரும் பொருள்களாகியும், நிற்பனவும் நடப்பனவுமாகிய உயிர்களாகியும் நிற்கின்ற தூயவனுடைய ஊர் யாது?' என்று வினவினால், அலைகளால் பல பழங்களைத் தள்ளி, பெரிய மாணிக்கங்களையும் பொன்னையும் கொழித்து, 'பாதிரி, சந்தனம், அகில்' என்ற மரங்களையும், தாழம் புதர்களையும் உள்வாங்கி. இவற்றால் எல்லாம் கலங்கல் பொருந்திய நீர், ஆரவாரித்து வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கயல் மீன்கள் பிறழும் வயல்கள் புடை சூழ்ந்த திருக்கலயநல்லூரே; அறிக.
163 |
மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன் வேலைவிடம் உண்டமணி கண்டன் விடை ஊரும் சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச் காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து |
7.016.8 |
'திருமாலும் பிரம்மனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய் நீண்டு நின்றவனும்,வன்னியும்,பிறையும் சடையிற் சூடியவனும்கடலிற் தோன்றியவிடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை உடையவனும்,இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது? 'என்று வினவினாள்,சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும்,அழகிய மயில்கள் ஆடவும்,சுரும்பும் வண்டும் இசை கூட்டவும்,பசிய கிளிகள்தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி,காலை,மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி,உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருகெகலயநல்லூரே;அறிக.
164 |
பொரும்பலம் துடையசுரன் தாரகனைப் பொருது கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக் இரும்புனலுவெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம் கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் |
7.016.9 |
போர் செய்கின்ற வலிமையையுடைய அசுரனாகிய,'தாரகன்'என்பவனை போர் செய்து அழியச்செய்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து, அவனைத் தன் மகனாக ரும்பிக்கொண்ட தூயவனும்,கரும்பினால் இயன்ற வில்லையும்,மலர்களால் இயன்ற அம்புகளையுடையவனாகிய மன்மதன் உடம்பு வெந்தொழியுமாறு நெருப்பாக நோக்க கண்ணையுடைய நெற்றியையுடையவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளும் ஊர் யாது?' என்று வினவினால், மிக்க நீரினது அலைகள் மேல் எழுந்துசென்று,'ஏலம்,இலவங்கம்'என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென்கரையில்,பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி,பொன்னை மலர்ந்து,பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமனணச்சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூரே;அறிக.
165 |
தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில் வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த |
7.016.10 |
குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நாற்புரத்தும் சூழப்பெற்ற ஊரில், திரிக்குளத்தைக் கொண்ட பெருங்கோயிலின்கண் முறைப்படி,வளவிய தாமரை மலரில் இருக்கும் பிரமதேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய, அதற்கு மகிழ்ச்சியுற்று இருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது?'என்ளு வினவினாள்,வெண்மையான கவரி மயிரும்,நீலமான மயில் இறகும்,வேங்கமரம்,கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்கலும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில்,கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனினது வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும தென்ற ற் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரே;அறிக.
166 |
தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன் உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர் நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன் பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட |
7.016.11 |
குளிர்ந்த நீரையும், வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும், பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி, முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு, உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய, நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலயநல்லூரை, யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன், இசைஞானி என்பவர்க்கு மகனும், திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய, இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள், துன்பமும், பாவமும் இலராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கலையநல்லூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கலயநல்லூர், திருக்கலயநல்லூரே, வினவில், அரிசிலாற்றின், என்னும், அரிசிலின்தென், தென்கரையில், பொருந்திய, சிவபெருமான், வினவின், உடையவனும், கரைமேல், வருகின்ற, சென்று, ஓசையும், பலவற்றையும், வினவினால், கூட்டம், சூழ்ந்த, போலும், இறைவனது, வண்டுகள், இவற்றால், வெள்ளிய, வழிபாடு, இசைஞானி, செய்து, சடையன், திருவிரலால், அலைகளால், மலரில், வினவினாள், நிறைந்த, நிற்பனவும், தக்கனது, மீன்கள், தலைவனும், கண்ணையுடைய, மயில்கள், விரும்பிய, கண்ணுதலோன், திருமுறை, திருச்சிற்றம்பலம், கரும்பின், பாய்ச்சி, துதிக்கும்படி, மரத்தையும், ஓடுகின்ற, திருக்கலையநல்லூர், இந்திரனைத், துள்ளி, திருமாலும்