முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.014.திருப்பாச்சிலாச்சிராமம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.014.திருப்பாச்சிலாச்சிராமம்

7.014.திருப்பாச்சிலாச்சிராமம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர்.
தேவியார் - பாலசுந்தரியம்மை.
134 |
வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும் உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பித்தரே யொத்தோர் நச்சில ராகில் |
7.014.1 |
எனது தலையையும், நாவையும், நெஞ்சத்தையும், இத்திருப்பாச்சிலாச்சிராமத்தில் உள்ள எம்பெருமானார்க்கே உரியன ஆக்கினேன்; திருவடித் தொண்டினையும் அவருக்கே வஞ்சனை சிறிதும் இன்றிச் செலுத்தினேன்; இவற்றை யானே சொல்லின், பொய்போல்வதாகும். இந்நிலையில், அவர் படம் விரித்த பாம்பினைக் கட்டிக்கொண்டு ஒரு கோவணத்தோடு இருந்து, பித்தரோடே ஒத்து, சிறிதும் திருவுளம் இரங்கிலராயினும், எம்மைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
135 |
அன்னையே என்னேன் அத்தனே என்னேன் என்னையும் ஒருவன் உளனென்று கருதி அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில் |
7.014.2 |
அடியேன் என்னைப் பெற்ற தாயைத் துணை யென்று நினைந்திலேன்; தந்தையைத் துணையென்று நினைந்திலேன்; என்னை ஆண்ட தலைவனே சாலும் என்று நினைத்தேன். இவ்வாறு ஒருவன் உளன்' என்று, தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் அன்னங்கள் மிக்கு வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திருவுள்ளத்தடைத்து, சிறிது திருவருளைப் புலப்படுத்திலர். இவர்தம் அடியவர்க்கு, மறுமை நலம் ஒன்றையே அளித்தலல்லது, இம்மை நலத்தை அருளுவதில்லையாயினும். இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
136 |
உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பெற்றபோதுகந்து பெறாவிடி லிகழில் |
7.014.3 |
யான், ஒரு பொருளினால் நன்மையாதல் தீமையாதல் வந்த காலத்தில் அதனைக் கண்டபின் அல்லது, அதற்கு முன்பே அதன் உண்மை இயல்பை ஓர்ந்துணரும் சிறப்புணர்வு இல்லேன்; அதனால், என் பொதுமை யுணர்வே சாலும் என்று அமைந்திருந்தேன், இத்தன்மையேனிடத்து, தேவர் பொருட்டு அவரைப் பகைத்த அசுரரது முப்புரத்தில் தீயெழச்செய்தும், நஞ்சினை யுண்டு கண்டத்தில் வைத்தும், சிவந்த சடை முதலிய தவக் கோலத்தைப் பூண்டும், 'களை கண் இல்லாது அலமந்தவர்க்கு அருள் பண்ணுபவர்' எனப் பெயர் பெற்ற திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர், அடியேன் யாது சொல்லி இரந்தாலும், தாம் மனம் மகிழ்ச்சி அடையப் பெற்றபோது இரக்கம் வைத்து, பெறாதபோது இரக்கம் வையாது விடினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
137 |
நாச்சில பேசி நமர்பிற ரென்று பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் |
7.014.4 |
மனமே, பொன் விளையும் எனப் புகழத்தக்க கழனிகளில் பறவைக் கூட்டம் ஒலிப்பதும், நீ நிறைந்த பொய்கைகளையுடையதும் ஆகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அடிகள் எனப்பட்ட இவர்தாம், சிலரை, 'நம்மவர்' என்றும், சிலரை, 'பிறர்' என்றும் நாவாற் சிலவற்றைச் சொல்லுதலும். அவர் சொல்வனவற்றைத் தாம், 'நன்று' என்று புகழ்தலாதல், 'தீது' என்று இகழ்தலாதல் செய்தலும் இலர். மற்றும் ஓர் முகமன் செய்தலும் இவரிடத்து இல்லை. ஆயினும், பலரையும் தமக்கு அடிமை என்று மட்டும் ஆளாக்கிக் கொள்வர். அதன்பின்பு அவரிடம் அன்பு கொண்டு ஓர் இனிய பேச்சுப் பேசுதல் இலர்; ஒன்றைத் தருதலும் இலர்; ஆயினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரையன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
138 |
வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில் |
7.014.5 |
கட்டப்பட்ட வெவ்விய வில்லால், வானத்தில் இயங்கும் அரண்களை அழித்த வண்கண்மையை உடையவராயினும், தொண்டுபுரிந்த அந்த நாட்களே புகழத்தக்க நாட்களும், தொண்டு புரியாது போகும் நாட்கள் பயனின்றிக் கழிந்த நாட்களுமாம் என்று கொண்டு, அன்புசெய்பவருக்கு அருள் செய்பவராகிய, திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவர், என்னளவில், யாது சொல்லி இரந்தாலும் திருச்செவியில் ஏலாது, நொடிப் பொழுதில் நீங்குதலையே உடையவராயினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
139 |
செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன் அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் படைத்தலைச் சூலம் பற்றிய கையர் பிடித்தவெண் ணீறே பூசுவ தானால் |
7.014.6 |
அடியேன், 'பணிபிழைத்தற் குற்றம் வந்து அழிவைச் செய்யும்' என்று அஞ்சி, நன்றல்லாத் தவத்தைச் செய்வார் சென்ற வழியையும் மிதியேன்; தமது திருவடித் தொண்டினையன்றி மற்று யாவரது பணியையும் யான் அறிந்திலேன்; அடியேன் இத் தன்மையேனாதலை எம்பெருமானாராகிய இவரும் அறிவர். அங்ஙனமாக, என்னைப் புரத்தற்கு, படைகளுள் முதன்மையுடைத்தாகிய சூலத்தைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளாகிய இவரது நிலைமை, பிசைந்த வெள்ளிய சாம்பலைப் பூசுவதே யாயினும், அடியேனைப் புரக்கும் தலைவா இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
140 |
கையது கபாலங் காடுறை வாழ்க்கை மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல் பையர வல்குற் பாவைய ராடும் மெய்யரே யொத்தோர் பொய்செய்வ தாகில் |
7.014.7 |
கையின் கண்ணதாகிய தலை ஓட்டினையும், காட்டில் வாழும் வாழ்க்கையினையும், 'கட்டங்கம்' என்னும் படையினை ஏந்திய கையினையும், மார்பின் கண்ணதாகிய முப்புரி நூலினையும் உடைய ஒளிவிடுகின்ற புல்லிய சடையின்மேல் வெள்ளிய பிறையைச் சூடிய விகிர்தரும், அரவப் படம் போலும் அல்குலினை உடைய மகளிர் ஆடலைப் புரியும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் கடவுளும் ஆகிய இவரது தன்மை, சொல் பிறழாதவர் போல வந்து ஆட்கொண்டு, பின்பு பிறழ்தலைச் செய்வதேயாய் விடினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
141 |
நிணம்படு முடலை நிலைமையென் றோரேன் கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும் பணம்படும் அரவம் பற்றிய கையர் பிணம்படு காட்டில் ஆடுவ தாகில் |
7.014.8 |
அடியேன், நிணம் பொருந்தியதாகிய இவ்வுடம்பை நிலைத்த தன்மையுடையதென்று நினையாது, நெஞ்சம் இறைவருக்கு உரியது என்றே துணிந்தேன்; இரவும் பகலும் அடியவர் குழாத்தின் ஊடே சென்று தம்மை அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன்; இவ்வாறாக, படம் பொருந்திய பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம் கடவுளாராகிய இவரது தன்மை, பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதேயாய்விடினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
142 |
குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும் அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில் |
7.014.9 |
நெஞ்சே, நீ அன்பால் இளகி மகிழ்ச்சியோடும் விரைந்து சென்று நாள் தோறும் குற்றேவல் செய்ய அடைகின்றாய்; ஆயினும், தமக்கு வரையறுத்த நாளெல்லையைத் தவத்தாற் கடக்க மாட்டாத சிலர், இயல்பில் அன்பில்லாதவராயினும், தாம் கேட்டவாற்றால் வாயினால் எப்போதும், 'சிவனே சிவனே' என்று கூப்பிடுந் தன்மையுடையவராயின், அவர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானார், யாது சொல்லி வேண்டினும், நீ பிழை செய்ததைப் பொறுத்து உனக்கு ஒன்றையும் ஈகின்றிலர்; ஆயினும் உன்னைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை;நீ என் செய்தியோ!
143 |
துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந் மணிப்படு கண்டனை வாயினாற் கூறி பணிப்படும் அரவம் பற்றிய கையர் பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில் |
7.014.10 |
வட்டாதல் தன்மையிற் பட்ட உடையும், நறும் பொடியாகப் பூசிய வெள்ளிய நீறும், மற்றும் இன்ன தோற்றமும் ஆகிய இவற்றது பெருமையை யுணர்ந்து, அவற்றைக் கண்டால், அடியேன் நீல கண்டத்தையுடைய எம்பெருமானாரைக் கண்டதாகவே மனத்தால் நினைத்து, வாயால் துதிப்பேன்; அவ்வாறாக, படத்தை யுடையதன் வகையிற்பட்டபாம்பைப் பிடித்த கையை யுடையவராகிய, திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர், என்னைத் தம்பால் கட்டுண்டு கிடக்குமாறு ஆட்கொண்டு, ஒன்றையும் ஈயாராயினும். அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
144 |
144ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன் உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் |
7.014.11 |
எய்தற்கரிய புகழையுடையராய பெரியோர்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம் கடவுளாராகிய இவர்க்கு யான் ஒரு பிறப்பில் அடியேன் அல்லேன்; ஏழ் பிறப்பிலும் அடியேன்; அதுவேயுமன்றி, இவர் தம் அடியார்க்கும் அடியனாயினேன்; என்னை விற்கவும், ஒற்றி வைக்கவுமான எல்லா உரிமைகளுமாக இவர்க்கு நான் உரியவனாயினேன்; இவர்தம் ஒளி பொருந்திய மலர் போலும் செம்மையான திருவடிகளே எனக்கு உறுதுணையாக, என் உள்ளம் அவற்றிடத்து உருகா நிற்கும்; இவ்வாறாக, இவர், முன்பு பெருமைகள் பேசி, பின்பு சிறுமைகள் செய்வாராயினும், அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
145 |
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் பேசின பேச்சைப் பொறுத்தில ராகில |
7.014.12 |
'எம்பெருமான்' என்று, எப்போதும் உமையோடு பரவிய புகழை யுடையவனும், திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவரை யடைந்து அவரது திருவடிகளைத் தொழவேண்டுமென்று பல நாட்கள் வாயினாற் சொல்லி, மனத்தினால் நினைந்தவனும் ஆகிய, வளப்பமான வயல்கள் சூழ்ந்த, திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல; இகழ்ந்தனவும் அல்ல; ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்; அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை; என் செய்கோ!
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாச்சிலாச்சிராமம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வேறொருவர், பிரானார், தலைவர், தில்லையோ, இவரன்றி, செய்கோ, புரக்கும், பாச்சிலாச், திருப்பாச்சிலாச்சிராமத்தில், அடியேனைப், அடியேன், எழுந்தருளியிருக்கின்ற, சிராமத், சிராமத்தெம், ராகில், ஆயினும், சொல்லி, தடிகள்தாம், நெஞ்சே, வெள்ளிய, னாலும், கருள்செய், காட்டில், இறைவர், பற்றிய, றிருந்தேன், எழுந்தருளியிருக்கும், வாயினாற், மனத்தினால், செய்பவராகிய, தாகில், யாதுசொன், பொருந்திய, கடவுளாராகிய, பிடித்த, நாட்கள், உடையவராகிய, செய்வார், மடிகள், சிராமத்தில், திருப்பாச்சிலாச், பகலும், பொறுத்து, எப்போதும், போதும், ஒன்றையும், பெருமைகள், இவர்க்கு, சிறுமைகள், எம்பெரு, குற்றேவல், ஆட்கொண்டு, போலும், பின்பு, உடையவராயினும், இவ்வாறாக, சென்று, கண்ணதாகிய, இரக்கம், பாச்சி, பொய்கை, ஒருவன், லாச்சிரா, அடிகள், நினைந்திலேன், என்னைப், என்னையும், என்னேன், திருச்சிற்றம்பலம், திருமுறை, தனக்கே, யொத்தோர், சிறிதும், திருவடித், சாலும், வாழும், புகழத்தக்க, ஒன்றைத், என்றும், செய்தலும், கொண்டு, மற்றும், பலரையும், விடினும், எழுந்தருளியுள்ள, சூழ்ந்த, சிறிது, இவர்தம், திருப்பாச்சிலாச்சிராமம், இரந்தாலும், ரேனும்