முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.099.திருநாகேச்சரம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.099.திருநாகேச்சரம்

7.099.திருநாகேச்சரம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்.
தேவியார் - குன்றமுலையம்மை.
1006 |
பிறையணி வாணுதலாள் உமை நிறையணி நெஞ்சனுங்க நீல குறையணி குல்லைமுல்லை அளைந் சிறையணி வண்டுகள்சேர் திரு |
7.099.1 |
சிறகுகளையுடைய அழகிய வண்டுகள், இன்றியமையாத, அழகிய துளசியிலும், முல்லை மலர்களிலும் மகரந்தத்தை அளைந்து, பின்பு குருக்கத்திக் கொடியின்மேல் சேர்கின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ பிறைபோலும், அழகிய, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளாகிய உமையவள் மருளவும், திட்பம் பொருந்திய மனம் கலங்கவும், நீல நிறத்தை உடைய, பெரிய நஞ்சினை உண்டதற்குக் காரணம் யாது?
1007 |
அருந்தவ மாமுனிவர்க் கரு இருந்தற மேபுரிதற் கியல் குருந்தய லேகுரவம் மர செருந்திசெம் பொன்மலருந் திரு |
7.099.2 |
குருந்த மரத்தின் பக்கத்தில் குராமரம், பாம்பினது பல்லைத் தாங்கினாற்போல அரும்புகளைத் தோற்றுவிக்க, செருந்தி மரம், செம்பொன்போலும் மலரைக் கொண்டு விளங்கும் திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, அரிய தவத்தையுடைய சிறந்த முனிவர்கள்மேல் கருணை கூர்ந்து, ஓர் ஆலமரத்தின் கீழ் இருந்து அறத்தைச் சொல்ல இசைந்ததற்குக் காரணம் யாது?
1008 |
பாலன தாருயிர்மேற் பரி காலனை வீடுவித்துக் கருத் கோல மலர்க்குவளைக் கழு சேலொடு வாளைகள்பாய் திரு |
7.099.3 |
அழகிய குவளை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும் உடைய வயல்களைச் சூழ்ந்துள்ள வாய்க்கால்களில், சேர் மீன்களும், வாளை மீன்களும் துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, சிறுவன் ஒருவன்மேல் இரக்கங்கொள்ளாது பகைத்து, அவனது அரிய உயிரைக் கவர வந்த இயமனை அழிவித்து, அச்சிறுவனுக்கு அருளை வழங்கியதற்குக் காரணம் யாது?
1009 |
1009 குன்ற மலைக்குமரி கொடி வென்றி மதகரியின் னுரி முன்றில் இளங்கமுகின் முது தென்றல் புகுந்துலவுந் திரு |
7.099.4 |
இல்லங்களின் முன்னுள்ள இளைய கமுகமரத்தின் பெரிய பாளைகளில் கட்டப்பட்ட தேன் கூடுகளில் உள்ள தேனை, தென்றற் காற்றுத் துழாவி, தெருக்களில் வந்து உலவுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, பல குன்றுகளையுடைய இமயமலையின் மகளாகிய, கொடிபோலும் இடையையுடைய உமை அஞ்சும்படி, வெற்றியையும், மதத்தையும் உடைய யானையின் தோலை உரித்ததே யன்றி, அதனைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டதற்குக் காரணம் யாது?
1010 |
அரைவிரி கோவணத்தோ டர உரைபெரு கவ்வுரைத் தன் வரைதரு மாமணியும் வரைச் திரைபொரு தண்பழனத் திரு |
7.099.5 |
மலைகள் தந்த சிறந்த மாணிக்கங்களையும், அவற்றில் உள்ள சந்தனக்கட்டை, அகிற்கட்டை என்பவைகளுடன் தள்ளிக்கொண்டு வந்து, அலைகள் மோதுகின்ற, குளிர்ந்த வயல்களையுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, அரையின்கண், அகன்ற கோவணத்தோடு பாம்பைக் கட்டிக்கொண்டு, ஒப்பற்ற நான்கு வேதங்களின் பொருளை, அன்று விரிவாகச் சொல்லி, அதனைக் கேட்டோரை விரும்பி, அவருக்கு அருள் செய்தற்குக் காரணம் யாது?
1011 |
தங்கிய மாதவத்தின் தழல் சிங்கமும் நீள்புலியுஞ் செழு பொங்கிய போர்புரிந்து பிளந் செங்கயல் பாய்கழனித் திரு |
7.099.6 |
செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நிலைபெற்ற பெரிய தவத்தினால், வேள்வித்தீயினின்றும் தோன்றிய சிங்கமும், நீண்ட புலியும், பருத்த பெரிய யானையோடே கதறி அழியும்படி மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின்றும் உரித்த தோலைப் போர்த்ததற்குக் காரணம் யாது?
1012 |
நின்றஇம் மாதவத்தை யொழிப் பொங்கிய பூங்கணைவேள் பொடி பங்கய மாமலர்மேல் மது செங்கயல் பாய்வயல்சூழ் திரு |
7.099.7 |
(இப்பாடல், ஏடெழுதினோராற் பிழைபட்டதும் மிகையாகப் பிரதிகளில் சேர்ந்தது போலும்! இதனை, ஒன்பதாந் திருப்பாடல் கொண்டு உணர்க.)
1013 |
வரியர நாணதாக மா அரியன முப்புரங்கள் ளவை விரிதரு மல்லிகையும் மலர்ச் திரிதரு வண்டுபண்செய் திரு |
7.099.8 |
சோலைகளில் திரிகின்ற வண்டுகள், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மலரிலும், சண்பக மலரிலும் மகரந்தத்தை அளைந்து, இசையைப் பாடுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கீற்றுப் பொருந்திய பாம்பே நாணியாகவும், மாமேரு மலையே வில்லாகவும் கொண்டு, அரியவான மூன்று ஊர்களை, அரிய தீ உண்ணும்படி செய்ததற்குக் காரணம் யாது?
1014 |
அங்கியல் யோகுதனை யழிப் பொங்கிய பூங்கணைவேள் பொடி பங்கய மாமலர்மேல் மது செங்கயல் நின்றுகளுந் திரு |
7.099.9 |
குளங்களில், தாமரை மலர்களின் மேல் வண்டுகள் தேனை உண்டு இசையைப் பாட, செவ்விய கயல்மீன்கள், நிலைபெற்று நின்று துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கயிலையின்கண் செய்த யோகத்தைக் கெடுத்தற்குச் சென்று சேர்ந்து, பெரிதும் சினங்கொண்ட, மலர்க்கணையை உடைய மன்மதன் சாம்பராகும்படி ஒரு கண்ணைத் திறந்ததற்குக் காரணம் யாது?
1015 |
குண்டரைக் கூறையின்றித் திரி மிண்டரைக் கண்டதன்மை விர தொண்டிரைத் துவணங்கித் தொழில் தெண்டிரைத் தண்வயல்சூழ் திரு |
7.099.10 |
அடியார்கள், அடிமைத்தொழில் பூண்டு, ஆரவாரித்து வணங்கித் துதிக்கின்ற, தௌந்த அலைகளையுடைய, குளிர்ந்த வயல்கள்சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, மூர்க்கரும், மனவலிமையுடையவரும் ஆகிய, உடையின்றித் திரியும் சமணரும், புத்தரும் என்னும் பேய்போல்வாரை, அவர் கண்டதே கண்ட தன்மையைப் பொருந்தச் செய்ததற்குக் காரணம் யாது?
1016 |
கொங்கணை வண்டரற்றக் குயி தெங்கமழ் பூம்பொழில்சூழ் திரு வங்க மலிகடல்சூழ் வயல் பங்கமில் பாடல்வல்லா ரவர் |
7.099.11 |
மகரந்தத்தை அடைந்த வண்டுகள் ஒலிக்க, குயிலும், மயிலும் பாடுதலையும், ஆடுதலையும் செய்கின்ற, தேனினது மணங் கமழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, மரக்கலங்கள் நிறைந்த கடல்போலச் சூழ்ந்துள்ள வயல்களையுடைய திருநாவலூரானாகிய நம்பியாரூரன் பாடிய, குறையில்லாத இப்பாடல்களைப் பாட வல்லவர்களது வினை பற்றறக் கழியும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாகேச்சரம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நாகேச், திருநாகேச்சரத்தில், சரத்தானே, காரணம், எழுந்தருளியிருப்பவனே, வண்டுகள், கொண்டு, துள்ளுகின்ற, செங்கயல், பொங்கிய, வயல்களையுடைய, மகரந்தத்தை, கயல்மீன்கள், செவ்விய, பான்சென், மாமலர்மேல், இசையைப், செய்ததற்குக், மலரிலும், சிங்கமும், பூங்கணைவேள், றணைந்துமிகப், சூழ்ந்துள்ள, பொருந்திய, அளைந்து, திருச்சிற்றம்பலம், திருமுறை, தென்னைகொலாம், சிறந்த, குளிர்ந்த, மீன்களும், திருநாகேச்சரம், மலர்களையும், எழுந்தருளியிருக்கின்ற