முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.002.திருப்பரங்குன்றம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.002.திருப்பரங்குன்றம்

7.002.திருப்பரங்குன்றம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர்.
தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
11 |
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண்டீர் சேத்திட்டுக்குத் தித்தெரு வேதிரியுஞ் சோத்திட்டுவிண் ணோர்பல ருந்தொழநும் தார்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும்பாம |
7.002.1 |
இறைவரே, நீர், பெரிய மலையையும், சுரத்தையும் கோயிலாகக் கொண்டுள்ளீர். உம்மைச் சுமந்து கொண்டு திரிகின்ற முல்லை நிலத்து இளைய ஓர் எருது. மண்மேடுகளைத் தன் கொம்பால் குத்தித் தெருவில் துள்ளித் திரியும். சில பூதங்களும், அவற்றின் உரப்பல் முதலிய செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. தேவர் பலரும், 'சோத்தம்' எனச் சொல்லி வணங்குமாறு, நீர் அரையிற் கோவணத்தோடு, ஒரு தோலைச் சுற்றி அதன்மேற் கச்சாகக் கட்டியுள்ளதும் பாம்பு; கையிற் பிடித்திருப்பதும் பாம்பு; அதனால் அடியேங்கள் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
12 |
முண்டந்தரித் தீர்முது காடுறைவீர் கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர் பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம் அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர் |
7.002.2 |
இறைவரே, அடியோங்கள் 'பெரியாரொடு நட்டல் இன்பந் தருவது' என்று கருதியிருப்பேமே ஆயினும், நீர் தலைமாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து கொணர்ந்து ஊட்டிய பெருவிடத்தினை எளிதாக உண்டீர், இவ்வண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர், அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லேம் அல்லேம் ஆதலின், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
13 |
மூடாய முயலகன் மூக்கப்பாம்பு பாடாவரு பூதங்கள் பாய்புலித்தோல் தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்குந் றாடாதன வேசெய்தீர் எம்பெருமான் |
7.002.3 |
எம்பெருமானிரே, இறைவரே, உம்மிடத்து உள்ளவை அறியாமையுடைய முயலகன், கொடிய பாம்பு, முடை நாற்றம் வீசும் வெண்டலை, நெருங்கிய பல பேய்கள், பாட்டுப் பாடித்திரிகின்ற பூதங்கள், பாய்கின்ற புலியின் தோல், நன்மை, தீமை அறியாத பாரிடங்கள் என்னும் இவையே. உமக்கு மாலை, இதழ் நிறைந்த கொன்றைமலரும், எருக்கம்பூவுமாம். இவற்றோடு அரையில், பெரிய மணியையுடைய பாம்பைக் கட்டிக் கொண்டு, எங்கட்குப் பொருந்தாத செயல்களையே மேற்கொண்டீர்; அதனால், அடியேங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
14 |
மஞ்சுண்டமா லைமதி சூடுசென்னி பஞ்சுண்டவல் குற்பணை மென்முலையா நஞ்சுண்டுதே வர்க்கமு தங்கொடுத்த கஞ்சுண்டுப டம்மது போகவிடீர் |
7.002.4 |
இறைவரே, மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியினையுடைய, மலைமகளாகிய நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர், துகில் சூழ்ந்த புறத்தினையும், பெருத்த ஊற்றினிமை பொருந்திய தனங்களையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு ஞான்றாயினும் ஒழிகின்றிலீர். நீர் நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அமுதம் ஈந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம்: உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அப்பாம்பினை ஒருஞான்றும் அப்பாற்போக விடுகின்றிலீர்; அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
15 |
பொல்லாப்புறங் காட்டகத் தாட்டொழியீர் எல்லாம்அறி வீர்இது வேயறியீர் கல்லால்நிழற் கீழொரு நாட்கண்டதுங் அல்லால்விர கொன்றிலம் எம்பெருமான் |
7.002.5 |
எம்பெருமானிரே, இறைவரே, நீர், பொல்லாங்குடை மயானத்தில் ஆடுதலைத் தவிரீர்; அங்குப் புலால் வாயோடு திரிவனவாகிய பேய்களோடு ஆரவாரித்தலை ஒழியீர்; 'எல்லாவற்றையும் அறிகின்ற நீர் இது மட்டில் அறிகின்றிலிரே' என்று, உம் அடியவனாகிய யான், இரவும் பகலும் கவல்வேன். முன் ஒருநாள் கல்லால நிழலில் ஆசிரியக் கோலமாகக் கண்டதும், மற்றொருநாள் கடம்பூர்க் கரக்கோயிலில் இலிங்க மூர்த்தியாகக் கண்டதும் தவிர, பிறிதொரு காலத்தும் மயானத்தின் இழிவை நீர் அறிந்து நீங்கியதை யாம் சிறிதும் கண்டதிலம் அதனால், அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.
16 |
தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச் பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர் பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர் அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர் |
7.002.6 |
இறைவரே, 'தென்னாத்தெனாத் தெத்தெனா' என்று பாடுகின்ற சில பூதங்களும், அவற்றின் செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. ஆயினும், நீர், பலவாகிய நான்கு வகைப்பட்ட வேதங்களைப் பாடுவீர்; திருப்பாசூரில் இருக்கின்றீர் எனினும், 'படம் பக்கம்' என்னும் பறையைக் கொட்டும் தலமாகிய திருவொற்றியூரீராய்த் தோன்றுகின்றீர். பண் போலும் மொழியினை யுடைய உமையை ஒரு பாகத்தில் நீங்காது கொண்டு, குடி வாழ்க்கையீராய்க் காணப்படுகின்றீர் ஆயினும், புறங்காட்டிடத்தில் பற்று நீங்கமாட்டீர். 'அண்ணாமலை யிடத்தேன்' என்றீர் ஆயினும், ஆரூரில் இருக்கின்றீர் அதனால், உம்மை ஒருதலையாகத் துணிதல் கூடாமையால், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.
17 |
சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணந் பங்கம்பல பேசிடப் பாடுந்தொண்டர் கங்கைச்சடை யீர்உம் கருத்தறியோம் அங்கத்துறு நோய்களைந் தாளகில்லீர் |
7.002.7 |
கங்கையை உடைய சடையை உடையவரே, இறைவரே, நீர், வேட்டுவர் போலச் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொள்வீர் ஆயினும், தேவர் கூட்டம் வணங்க நிற்பீர். யானை முதலியன இன்றி எருதை விரும்பி ஊர்வீர் ஆயினும், 'இவர் சிலரை ஒட்டி அடிமைகொள்ளல் எற்றிற்கு' என உம்மைப் பலரும் பல குறை சொல்லுமாறு, பாடவல்ல, தொண்டர்களை வலிந்து ஈர்த்து அடிமை கொண்டு, அவர்களை விடவும் மாட்டீர் அதனால், உம் கருத்தினை நாங்கள் அறியகில்லோம். கண்களோ மூன்றுடையீர் ஆயினும், நாங்கள் உம் எதிர் நின்று அகலாதிருக்கின்றோம் என்றால், நீர் எங்கள் உடம்பில் பொருந்தியுள்ள நோயைத் தீர்த்துப் பணிகொள்ள மாட்டீர் ஆகலின், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவேம்.
18 |
பிணிவண்ணத்த வல்வினை தீர்த்தருளீர் துணிவண்ணத்தின் மேலும்ஓர் தோலுடுத்துச் மணிவண்ணத்தின் மேலும்ஓர் வண்ணத்தராய் அணிவண்ணத்த ராய்நிற்றீர் எம்பெருமான் |
7.002.8 |
எம்பெருமானிரே, இறைவரே, நீர், பிணிக்கும் இயல்பினையுடைய எங்கள் வலியவினையை நீக்கி அருள் பண்ணுகின்றிலீர்; அன்றியும், பெரிய காட்டிடத்திற் பெரிய பேயும் நீருமாய்த் துணிந்து நிற்கின்ற தன்மையின் மேலும், தோல் ஒன்றை உடுத்து, அதன் மேற் சுற்றிய பாம்பை உடையவராய், சாம்பலை நறுமணப் பொடியாகப் பூசிக் கொண்டு, நீல மணிபோலும் நிறத்தின் மேலும் மற்றொரு நிறத்தை யுடையவராய், அதன்மேலும் பற்பல நிறத்தை உடையவராய், எவ்வாற்றானும் அழகிய வடிவத்தை உடையவராகியே நிற்றலால் அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.
19 |
கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர் வேளாளிய காமனை வெந்தழிய தோளாள்உமை நங்கையொர் பங்குடையீர் ஆளாளிய வேகிற்றீர் எம்பெருமான் |
7.002.9 |
எம்பெருமானிரே, இறைவரே, நீர், கொலைத் தொழிலை மேற்கொண்ட யானையைக் கொல்லுதல் செய்தீர்; மலை உச்சியில் அல்லது கோயில் கொள்ளமாட்டீர்; வேட்கையை விளைக்கும் அம்பினை ஏவிய காமனை வெந்து அழியுமாறு அழித்தீர்; அதற்கு மாறாயும், மூங்கில் போலும் தோள்களை யுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையீர்; நும் அடியவர்க்கு, உடுக்கின்ற கூறையையும், உண்கின்ற சோற்றையும் கொடுத்து ஆளமாட்டீர்; அடியவரை அடிமை கொள்ளுதல் மட்டுமே வல்லீர்; அதனால், அடியேங்கள். உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.
20 |
பாரோடுவிண் ணும்பக லுமாகிப் நீரோடுதீ யுந்நெடுங் காற்றுமாகி தேரோட வரையெடுத் தவரக்கன் ஆரோடுங்கூ டாஅடி கேள்இதுஎன் |
7.002.10 |
இறைவரே, மண்ணுலகமும் விண்ணுலகமும் ஆகியும், மலை ஆகியும், கடல் ஆகியும், எவ்விடத்தும் இயங்குகின்ற காற்றும் ஆகியும், எல்லையற்ற வெளி ஆகியும், நிலம் ஆகியும் இவ்வாறு எல்லாப் பொருளும் ஆகி நின்றீர். இனி, தனது ஊர்தி தடையின்றி ஓடுதற் பொருட்டு நுமது மலையைப் பெயர்த்த அரக்கனது தலைகள் பத்தினையும் நெரித்தீர். உம்முடைய இச்செய்கைகள் எல்லாம், யார் செய்கையோடும் ஒவ்வா; இஃது என்! இவற்றால் அடியோங்கள் உமக்குப் பணிசெய்ய அஞ்சுவேம்.
21 |
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமென் முடியால்உல காண்டமூ வேந்தர்முன்னே படியாஇவை கற்றுவல் லவடியார் குடியாகிவா னோர்க்கும்ஓர் கோவுமாகிக் |
7.002.11 |
தேவர் பெருமானாகிய சிவபெருமானிடத்தில் அச்சங்கொண்டு, நம்பி ஆரூரன், முடியொடு நின்று உலகத்தை ஆள்கின்ற மூவேந்தர் முன்னிலையில், 'அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும்' என்று சொல்லிப் பாடிய இப்பதினொரு பாடல்களையும், இவையே தமக்கு நெறியாகும்படி ஓதி உணர வல்ல அடியார்கள், திருப்பரங்குன்றத்தை விரும்பி எழுந்தருளியுள்ள அப்பரமனது திருவடி நிழலிலே வாழ்கின்றவராய், அரசர் குடியில் தோன்றிய அரசரோடு ஒருங்கொத்து மண் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்கும் ஒப்பற்ற அரசராகி விண் முழுதும் ஆள்பவரே ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பரங்குன்றம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காட்செய, அஞ்சுதுமே, அஞ்சுவேம், இறைவரே, அடிகேள்உமக், அடியோங்கள், உமக்கு, ஆயினும், அதனால், உமக்குப், ஆகியும், கொண்டு, ஆட்பட்டுப், பணிசெய்ய, எம்பெருமான், எம்பெருமானிரே, சூழ்ந்த, உம்மைச், முழுதும், நாங்கள், நின்று, என்னும், அடியேங்கள், பாம்பு, பங்குடையீர், தெத்தெனா, சிறிதும், கண்டதும், தென்னாத்தெனாத், அண்ணாமலை, நிறத்தை, விரும்பி, மாட்டீர், எங்கள், மேலும்ஓர், தாளகில்லீர், மேலும், போலும், வண்ணத்தராய், உடையவராய், இருக்கின்றீர், கொள்வீர், அவற்றின், செயல்களும், திசைகளிலும், பலரும், பூதங்களும், திசைதிசையன, திருமுறை, திருச்சிற்றம்பலம், நீரும், பெரியாரொடு, மயானத்தில், முயலகன், வெண்டலை, பூதங்கள், அதற்கு, பாம்பைக், சாம்பலை, பூசிக், திருப்பரங்குன்றம், பாரிடங்கள்