முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.043.திருப்பூந்துருத்தி
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.043.திருப்பூந்துருத்தி

6.043.திருப்பூந்துருத்தி
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்.
தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.
2513 | நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக் சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத் பொல்லாவென் நேர்ய்தீர்த்த புநிதன் தன்னைப் |
6.043.1 |
கங்கையைச் சடையில் இருத்தி, அவனை நினையாத என் மனத்தை அவனை நினைக்கச் செய்து, அரும் பேருண்மைகளை எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, என்னை அடிமையாகக் கொண்டு, கொடிய சூலை நோயைத் தீர்த்து எனக்குக் காணாதன எல்லாம் காட்டிய தூயோனாகிய புண்ணியனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.
2514 | குற்றாலங் கோகரணம் மேவி னானைக் உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை பற்றாலின் கீழங் கிருந்தான் தன்னைப் புற்றா டரவார்த்த புநிதன் தன்னைப் |
6.043.2 |
குற்றாலம் கோகரணம் இவற்றை விரும்பி உறைந்து கொடிய செயலை உடைய கடியவனாகிய கூற்றுவனை ஒறுத்து, ஆலகால விடத்தை உண்டு கழுத்தில் இருத்தி, உணராத என் நெஞ்சத்தில் அரும் பேருண்மைகளை உணர்வித்து, கல்லால மரத்தின் கீழ் அதனைச் சார்பாகக் கொண்டிருந்து, பண் நிறைந்த வீணையை வாசித்து, புற்றிலிருக்கும் படம் எடுத்தாடும் பாம்பினை இறுக அணிந்த தூயோனாகிய புண்ணியனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.
2515 | எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட புனக்கொன்றைத் தாரணிந்த புநிதன் தன்னைப் |
6.043.3 |
ஏகம்பம் நின்றியூர் இவற்றில் தங்குபவனாய், எனக்கு என்றும் இனிய எம் தலைவனாய், மனத்தில் என்றும் இருப்பவனாய், வஞ்சகர் நெஞ்சில் நில்லாதவனாய், என்னைத் தனக்கு என்றும் ஆளாகக் கொண்டு நன்மை செய்கின்றவனாய், சங்கினால் ஆகிய நீண்ட காதணியை உடையவனாய் மேட்டு நிலத்தில் வளரும் கொன்றைப் பூமாலை அணிந்த தூயோனாகிய, பாசம் இல்லாதவனை, யான் பூந்துருத்தியில் கண்டேன்.
2516 | வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை அறியா தடியே னகப்பட் டேனை நெறிதா னிதுவென்று காட்டி னானை பொறியா டரவார்த்த புநிதன் தன்னைப் |
6.043.4 |
மணம் கமழும் கொன்றைப் பூச் சூடி, ஐராவதம் வழிபட்ட வெண்காட்டில் உறைவானாய், அறியாத புறச்சமயத்தில் அகப்பட்ட என்னை அத்துயரக்கடலில் மூழ்காதபடி தூக்கி எடுத்து, இது தான் நேரிய வழி என்று காட்டி, நாடோறும் என்னை வருத்தும் பிணிகளைத் தீர்த்து, புள்ளிகளை உடைய ஆடும்பாம்பினை இறுகக் கட்டிய தூயோனாகிய பாசம் அற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.
2517 | மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை நக்கானை நான்மறைகள் பாடி னானை தக்கானைத் தண்டா மரைமே லண்ணல் புக்கானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப் |
6.043.5 |
எல்லாரினும் மேம்பட்டவனாய், வெண்ணீறு பூசி, பகைவரின் மும்மதில்களையும் அழித்து, அவற்றின் அழிவுகண்டு சிரித்து, நான்கு வேதங்களையும் ஓதித் தக்கோர்களால் விரும்பி முன்னின்று துதிக்கப்படுபவனாய், பிரமன் மண்டைஓட்டைச் சுமந்து ஒரு கணநேரத்தில் உலகமெல்லாம் சுற்றித் திரியும் புண்ணியனாய்த் தூயனாய்ப் பாசம் அற்றவனாயுள்ள எம்பெருமானைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.
2518 | ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா பூத்தானத் தான் முடியைப் பொருந்தா வண்ணம் பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை போர்த்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப் |
6.043.6 |
வாசுகி என்ற பாம்பினையே வில்லுக்கு நாணாகக் கட்டியும், இடையிலே கச்சாக அணிந்தும் இருப்பவனாய், பொன் போன்ற உடம்பும் தாமரையாகிய இருப்பிடமும் உடைய பிரமனுடைய தலை ஒன்றனை அவன் உடலில் பொருந்தாதபடி நீக்கியவனாய், மன்மதன் உடல் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய்ப் பின் அவனிடம் அருள் கூர்ந்தவனாய், கங்கையைச் சடை மீது தரித்தவனாய், யானை நடுங்க அதன் தோலை உரித்துப் போர்த்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன்.
2519 | எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத் புரித்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப் |
6.043.7 |
பகைவர் முப்புரங்களையும் இமைகொட்டும் நேரத்திற்குள் பொடியாகுமாறு எரித்து, மத யானையைப் பற்றித் தன் அழகிய கைகளால் தோலை உரித்து, உமாதேவி அது கண்டு அஞ்ச, அவள் அச்சத்தைப் பார்த்து, சிரித்துச் சடையில் பிறையும் பாம்பும் கங்கையும் சூடிப் பூதகணங்கள் சூழ இருக்கும் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் இல்லாதவனான பெருமானை யான் பூந்துருத்தியில் கண்டேன்.
2520 | வைத்தானை வானோ ருலக மெல்லாம் வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை உய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி பொய்த்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப் |
6.043.8 |
வானோர் உலகமெல்லாம் படைத்தவனாய், அத்தேவர்கள் வந்து வணங்கிமலர்கொண்டு நின்று துதிக்கும் உலக காரணனாய், அடியவர்கள் விரும்பியதை அளிப்பவனாய், இந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கியவனாய், கங்கையைச் சடையில் மறைத்துப் பாதி உருவாய் உள்ள பார்வதிக்குப் புலப்படாதவாறு செய்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாயுள்ள பாசமற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.
2521 | ஆண்டானை வானோ ருலக மெல்லாம் மீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி நீண்டானை நெருப்புருவ மானான் தன்னை பூண்டானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப் |
6.043.9 |
தேவருலகமெல்லாம் ஆண்டவனாய், ஒரு காலத்தில் தக்கன் வேள்வியில் தொடர்பு கொண்டு தன்னால் தண்டிக்கப்பட்ட தேவர்களோடும் திரும்பியவனாய், தாமரையில் உள்ள பிரமனும் திருமாலும் தேடுமாறு தீப்பிழம்பாக நின்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீப்பற்றி அழியுமாறு வில்லைப் பூண்டவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய் உள்ள பாசம் அற்றவனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.
2522 | மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை அறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை பொறுத்தானைப் புண்ணியனைப் புநிதன் தன்னைப் |
6.043.10 |
நந்தி பெருமான் அறிவுரையை அலட்சியம் செய்து தன் கைகளைக் கோத்துக் கயிலை மலையை எடுத்த இராவணனைப் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு காலால் அழுத்தியவனாய்ப்பின் அவன் பாடிய ஏழுநரம்பின் ஓசையைக் கேட்டு அவனுக்கு அருள் செய்தவனாய், எட்டுக் கண்களை உடைய பிரமனின் மேல்தலையாகிய ஐந்தாம் தலையை அறுத்த வனாய்த் தேவர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், எவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருத்தியவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூந்துருத்தி - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்டேன், பூந்துருத்திக், புநிதன், பூந்துருத்தியில், தன்னைப்பொய்யிலியைப், புண்ணியனைப், புண்ணியனாய்த், தூயோனாகிய, சடையில், நின்று, கங்கையைச், தூயோனாய்ப், கொண்டு, என்றும், காட்டி, இருப்பவனாய், மேயான், நின்றியூர், ஏகம்பம், உலகமெல்லாம், பெருமானை, தக்கன், மும்மதிலும், பாம்பும், பெருமானைப், வெண்ணீறு, அணிந்த, கொன்றைப், டரவார்த்த, திருமுறை, இருத்தி, செய்து, திருச்சிற்றம்பலம், தன்னைப்புண்ணியனைப், சொல்லி, யாளாக், நெஞ்சை, பேருண்மைகளை, எல்லாம், தனவெல்லாங், விரும்பி, விடத்தை, கோகரணம், திருப்பூந்துருத்தி, என்னைத், தீர்த்து, கழுத்தில்