முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.045.திருவொற்றியூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.045.திருவொற்றியூர்

6.045.திருவொற்றியூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.
2533 | வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும் திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன் |
6.045.1 |
சிவலோகநாதராய ஒற்றியூரில் விரும்பி உறையும் சோதிவடிவினர், வண்டுகள் மொய்க்கும் செந்தாமரை, கழுநீர், ஊமத்தை இவற்றை அணிந்த சடை மீது பிறை சூடி, ஆயிரம் தோள்களையும் எட்டுத் திசைகளின் எல்லைகளையும் அவை அடையுமாறு வீசிக்கொண்டு, கூத்தாடி, உலகுக்கு நலன் பயப்பதற்காக விடத்தை உண்டவர். அவரை அடியேன் கனவில் கண்டேனாக, அவ்வளவில் என் கடிய நோயும் அவை செய்த செயல்களும் நீங்கி விட்டன.
2534 | ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர் காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக் ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா |
6.045.2 |
மார்பில் பாம்பு சூடி, வெண்ணிறக் காளையை இவர்ந்து, கங்கையைச் சடையில் ஆரவாரிக்குமாறு சூடிப் பார்வதி பாகராய், ஆண்மைத் தொழிலராய், அக்காளையை இவர்ந்தே உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய், காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணைத் தீப் புறப்பட விழித்த பெருமான், வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கின்றார்.
2535 | வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர் கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர் உள்ளத்தை நீர்கொண்டீர் ஓதல் ஓவா |
6.045.3 |
வேதம் ஓதுதல் நீங்காத ஞான ஒளி திகழும் ஒற்றியூரை உடைய தலைவரே, நீர்விரும்பிக் கங்கையைச் சடையில் சூடி, அதன்கண் பிறையையும் பாம்பையும் உடன்வைத்து, காதல் உணர்வாகிய வஞ்சனையை மனத்தில் மறைத்து வைத்திருப்பது காண்பவர்களுக்குப் பெரியதொரு தீங்காய்த் தோன்றுவதாகும். பகற்பொழுதில் பிச்சை வாங்கவருபவரைப் போல இசையைப் பாடிக் கொண்டுவந்து, பிச்சையையும் ஏலாது, உம்முடைய பாம்பு, பிறை, காளை எழுதிய கொடி இவற்றைக் காணச் செய்து, எம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டீர். இதனைச் சற்று நினைத்துப் பார்ப்பீராக.
2536 | நரையார்ந்த விடையேறி நீறு பூசி உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய் திரைமோதக் கரையேறிச் சங்க மூருந் |
6.045.4 |
வெள்ளை நிறக் காளையை இவர்ந்து, நீறுபூசி, இடுப்பில் பாம்பைக் கச்சாக உடுத்தி, மண்டைஓட்டைக் கையில் ஏந்தி, ஏதும் பேசாது, எம் இல்லத்தினுள் வந்து பிச்சை வேண்ட, 'எம் வணக்கத்திற்கு உரியவரே! உம் ஊர் யாது?' என்றுயான் வினவ' வேல் போன்ற கண்களை உடைய பெண்ணே! அவசரப் படாமல் கேள். கடலில் மரக்கலங்கள் காணப்படுவதும், திரைகள் தள்ளுவதனால் சங்குகள் கரையை அடைந்து தவழ்வதுமாகிய திருஒற்றியூர்' என்றார். ஒற்றியூரே ஒழியச்சொந்த ஊர் ஒன்று இல்லாமையால் அவரை எங்குச் சென்று மீண்டும் காணஇயலும்! என்ற எண்ணத்தால் அவருக்கு என ஒரு சொந்த ஊர் இல்லாதது என் தீவினையே என்றாள்.
2537 | மத்தமா களியானை யுரிவை போர்த்து பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப் பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப் ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக |
6.045.5 |
மதயானைத் தோலைப் போர்த்தித் தேவருலகில் இருக்க வேண்டிய அவர், எம் வீட்டிற்குள் வந்து பைத்தியம் பிடித்தவரைப் போலத் தாமே தம் பெருமையைப் பேசிக்கொண்டு, பெண்களைப் பயமுறுத்திவிட்டு வெளியே வரக் கண்டு, பத்தர்கள் பலரும் அவரை அணுகி 'நீங்கள் பாடிக்கொண்டே தங்கியிருக்கும் ஊர் யாது?' என்று வினவப் பங்குனி உத்திரத்தில் தீர்த்தவிழாக் கொண்டாடும் ஒளி திகழும் ஒற்றியூர் என்றார்.
2538 | கடிய விடையேறிக் காள கண்டர் இடிய பலிகொள்ளார் போவா ரல்லர் வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம் செடிபடுவெண் டலையொன் றேந்தி வந்து |
6.045.6 |
நீலகண்டர் கைகளில் மானையும் மழுவையும் ஏந்தி, விரைந்து செல்லும் காளையைஇவர்ந்து, இடவந்த உணவையும் பிச்சையாகக் கொள்ளாராய், இடத்தை விட்டுநீங்காதவராயும் உள்ள இப்பெரியவர் யார் என்று எல்லோரும் மருண்டனர்.முன்பு இவர் வடிவுடையமங்கையும் தாமுமாய் மயிலாப்பூரில் வந்த காட்சியைக்கண்டுள்ளோம். பின் ஒரு நாள் புலால் நாற்றம் வீசும் மண்டை ஓட்டை ஏந்திஇங்கு உலவியவராய்த்திருவொற்றியூரில் புகுந்து விட்டார். இவர் எவ்வூரார் என்பதனைக் கூடஅறிய முடியாமல் இருப்பது நம் தீவினையாகும்.
2539 | வல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும் |
6.045.7 |
தேவர்கள் எல்லோரும் கூடி வணங்கி வாழ்த்தி நிற்கும் பெருமான் எல்லாச் செயல்கள் செய்வதிலும் வல்லாராகவே, பகற் காலத்தில் எந்த வழியினாலும் எந்த வடிவினாலும் தேவர்கள் தம்மைக் காணமாட்டாதவராய், இவ்வுலகில் எழுந்தருளப் பெண்களும் நான்மறைவல்லோர்களும் ஒன்று கூடி அவரைத் தேடிக் கண்டு 'சான்றீரே! தாங்கள் இருக்கும் ஊர் யாது' என்று வினவ, விரைவில் கடல் அலைகள் கரையில் மோதிமீளும் ஒற்றியூர் என்கின்றார்.
2540 | நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய் கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக் சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில் முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன் |
6.045.8 |
தோழி! நான் என் பண்டை நிலையை அடைவதற்கு முடிவு செய்த வழியைக் கூறுகின்றேன் கேளாய். நேற்று நடுப்பகலில் இங்குப் பெரியவர் ஒருவர் வந்து என் உடையினது பெருமையும் கண்களும் அவர் உள்ளத்திலும் கண்களிலும் பொருந்துமாறு என்னைக் கூர்ந்து நோக்கி என்னை உள்ளத்தால் கலந்தாராக, அவருக்கு உணவு கொண்டு வரச்சென்ற நான் திரும்பி வர எங்கும் காணேனாய், வஞ்சனையாக மறைந்து விட்டார். இனி ஒருநாள் அவரைக் காண்பேனானால் அவர் மார்பிலே என் மார்பு அழுந்தும் வண்ணம் என் முலைச்சுவடு அவர் மார்பில் படும்படியாகத் தழுவிக்கொண்டு, ஒற்றியூரில் தங்கி இங்கு உலவும் அவரை, என்னை விடுத்து ஒற்றியூருக்குப் போக விடமாட்டேன்.
2541 | மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை |
6.045.9 |
எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே. நீ - மண், விண், ஞாயிறு முதலிய மண்டலங்கள், மலை, கடல், காற்று, எரி, எண், எழுத்து, இரவு, பகல், பெண், ஆண், பேடு, முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தையாயும் உள்ளாய்.
2542 | மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத் உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார் |
6.045.10 |
எம்பெருமான், தன்னைப் பொருந்திய மலர் சூடிய கூந்தலை உடைய பார்வதி அஞ்சுமாறு, இராவணன் செய்த செயலால் கயிலை மலை அசைய, எண்திசைகளும் நடுங்க, அவனை வெகுண்டு நோக்கி, அவன் பலம் முழுதும் அழியுமாறு திருவடிவிரல் ஒன்றினால் அவன் அலறுமாறு அழுத்தி, தன் உருவத்தைத் தேடிப் பிரமனும் திருமாலும் முயன்று காணுமாறு தீப்பிழம்பாய் உயர்ந்த பெருமானார் இங்கே (என்னிடத்தில்) வந்து தம்முடைய ஊர் திருவொற்றியூர் என்று கூறிச் சென்றார். அவர் நினைவால் என்னுடைய செறிந்த வளையல்கள் ஒன்று ஒன்றாய் கழன்று விட்டன.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவொற்றியூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஒற்றியூ, திருவொற்றியூர், ஒற்றியூரில், பாம்பு, அவருக்கு, ரென்கின், என்றார், கொண்டு, பிச்சை, முதலிய, ஒற்றியூர், வந்துதிருவொற்றி, தேவர்கள், நோக்கி, எங்கும், விட்டார், எல்லோரும், திகழும், உள்ளத்தால், பெருமான், விட்டன, மார்பில், விரும்பி, கழுநீர், திருமுறை, திருச்சிற்றம்பலம், காளையை, இவர்ந்து, வெகுண்டு, நீங்காத, உலவும், பார்வதி, கங்கையைச், சடையில், கரந்து