முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.013.திருப்புறம்பயம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.013.திருப்புறம்பயம்
6.013.திருப்புறம்பயம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர்.
தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.
2212 | கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர் நடமாடு நன்மருகல் வைகி நாளும் படுமாலை வண்டறையும் பழனம் பாசூர் பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப் |
6.013.1 |
கொடிகள் கட்டப்பட்ட மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை உடைய கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், வளவி, கண்டியூர், கூத்து நிகழ்த்தும் சிறந்த மருகல் இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர் ஒற்றிவைக்கப்பட்டது என்னும் பொருளைத் தருதலில் அதனை நீங்கி சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம், பாசூர், பழையாறு, பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று திருநீறு அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர் புறம்பயம் என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார்.
2213 | முற்றொருவர் போல முழுநீ றாடி ஒற்றொருவர் போல உறங்கு வேன்கை மற்றொருவ ரில்லைத் துணையெ னக்கு புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப் |
6.013.2 |
தவம் முற்றிய ஒருவரைப்போல உடல் முழுதும் திருநீறு பூசி, பிறைசூடி, முந்நூல் அணிந்து ஒற்றுவதற்கு வந்த ஒருவர் போலப் பொய் உறக்கம் கொண்ட என்கையிலிருக்கும் ஒளி பொருந்திய வளையல்களை ஒன்றொன்றாக எண்ணுகின்றார். எனக்கு இவரன்றித் துணைவர் வேறு யாரும் இல்லை. இவருடைய செயலைக் கண்டு பித்துப்பிடித்தவரைப் போல மயங்குகின்ற என்னிடத்தில் 'எங்களுடைய ஊர் திருப்புறம்பயம்' என்று கூறிப் பாம்பினைக் கச்சாக அணிந்த எம்பெருமான் பூதங்கள் தம்மைச்சூழ என்னைவிடுத்துப் போய் விட்டார்.
2214 | ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர் ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந் பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார் போகாத வேடத்தர் பூதஞ் சூழப் |
6.013.3 |
தீங்கு தருகின்ற விடத்தை நுகர்ந்த, மாலையின் செந்நிறத்தை உடைய பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய தோளின் மீது மேலாடையாக அணிந்து, ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்து வந்து 'திருவே! உணவு இடு' என்று கூற, உணவு கொண்டுவர உள்ளே சென்றேன். உணவுகளோடு யான் மீண்டு வரக்குழம்போ சோறோ ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூதங்கள் சூழப் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2215 | பன்மலிந்த வெண்தலை கையி லேந்திப் நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங் பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம் |
6.013.4 |
பல்மிக்க வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பனிபொழியும் மேகம் போன்று திருநீற்றால் வெள்ளிய மேனியை உடைய வஞ்சகராகிய எம் தலைவர், நெல் மிக விளையும் நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தி, நீடூர், பாச்சிலாச் சிராமம், கற்கள் மிக்க உயர்ந்த கழுக்குன்றம், கடற்கரையிலமைந்த நாகைக்காரோணம் என்ற தாம் உகந்தருளியிருந்த திருத்தலங்களை விடுத்து, இன்று பொலிவுமிக்க தம் தேவிமாரோடு கூடியதாம் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2216 | செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச் மத்தகத்த யானை யுரிவை மூடி அத்தவத்த தேவர் அறுப தின்மர் புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப் |
6.013.5 |
இறந்தார் தலைமாலையைக் கையிலெடுத்துத் தலையில் சூடிச் சிவந்த மேனியில் பெரிய தலையை உடைய யானைத் தோலைப் போர்த்துப் பார்வதி பாகராய், மானைக் கையில் ஏந்தி, ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம் கூத்தினைக் காணுமாறு அருள் செய்து, புலித்தோலை இடையில் கட்டிக் கையில் புத்தகம் ஒன்றனை ஏற்றுப் புறம்பயம் நம் ஊர் என்று எம்பெருமான் போயினார்.
2217 | நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப் துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத் புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப் |
6.013.6 |
விடம் அடைந்த கழுத்தினராய், நீறு பூசி, பெரிய புலித்தோல் மேல் பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டு, செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய்ப் பவளம் போன்ற சிவந்த மேனியை உடைய எம்பெருமான் யான் உறங்கும் இடத்து வந்து துடியை ஒலித்து என்னை விழிக்கச் செய்து 'யான் பராய்த்துறை ஊரினேன்' என்றார்'. யான் திடுக்கிட்டு எழுந்திருந்தேன். பின் அவர் என் குறிப்பறிந்து மெய் தீண்டிச் செய்தனவற்றைச் சொற்களால் எடுத்துக்கூறும் ஆற்றல் இல்லேன். தம் சிவந்த சடையில் கங்கையைச் சூடி அப்பெருமான் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2218 | மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப் |
6.013.7 |
ஒருகையில் மான் குட்டியை ஏந்தி, மற்றொரு கையில் மழுப்படையை ஏந்தி, 'யான் மறைக்காட்டில் உள்ளேன்' என்று இனிய சொற்களைப்பேசி, விளங்கிய திண்ணிய தோள்கள் மீது திருநீற்றைப் பூசி, நெற்றியில் திரிபுண்டரமாகத் திருநீறணிந்து, சுருண்ட கூந்தலை உடைய மகளிர்பின் சென்று, தம் கண்கள் கரிந்து நீர் சொரியுமாறு அவர்களை நெடுநேரம் அசையாமல் நோக்கி, புள்ளிகள் பொருந்திய பாம்புகளை இறுகக் கட்டிக் கொண்டு பூதங்கள் சூழ எம்பெருமானார் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2219 | நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட்டியுங் நல்லாளை நல்லூரே தவிரே னென்று பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப் |
6.013.8 |
ஓரிடத்தில் தங்காமல் பல ஊர்களும் பிச்சை ஏற்றலைக் கருதிச் சென்று, வளையலை வரிசையாக அணிந்த மகளிர் பிச்சை வழங்க, அதனோடு அவர்களுடைய அடக்கம் என்ற பண்பினையும் கைக்கொண்டு, தம் வாகனமாகக் கொலைத் தொழில் செய்யும் காளையையும், வாச்சியங்களான கொக்கரையையும் கொடுகொட்டியையும் குடமூக்கு என்னும் தலத்தில் விடுத்து, நல்லாளை, நல்லூர், நறையூர் இவற்றில் தங்குபவரைப் போலக் கூறிக் கொண்டு, மகளிரை நிறையழிக்கும் கோலமுடைய நம் பெருமானார் பூதம் சூழப் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2220 | விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத் அரையேறு மேகலையாள் பாக மாக புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப் |
6.013.9 |
நறுமணம் கமழும்திருநீற்றைப் பூசி ஓர் ஆமையோட்டினை அணிகலனாகப்பூண்டு, காதில் சங்கத் தோட்டினை அணிந்து, இடக்கையிலேவீணையை ஏந்திக் கங்கை தங்கும்சடை மீது பிறையைநாற்றிசையும் அதன் ஒளிபரவுமாறு வைத்து, மகிழ்ந்த,செந்தீ நிறத்துப் பெருமானார், மேகலையை இடையில்அணிந்த உமைபாகராய், பிறர் அணுகுதற்கரியசுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய தலைவராய், மேம்பட்டகாளையை இவர்ந்து, பூதம் சூழப் 'புறம்பயம் நம் ஊர்'என்று போயினார்.
2221 | கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக் பூவாய பீடத்து மேல யன்னும் பாவாய இன்னிசைகள் பாடி யாடிப் பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப் |
6.013.10 |
தேவர் தலைவனானஇந்திரன் உள்ளிட்டவரும், முருகனும், இடர்களையும்விநாயகனும், தாமரையின் மேல் உள்ள பிரமனும்,உலகங்களை அளந்த திருமாலும் வணங்கி வாழ்த்துச்சொல்லுமாறு இனிய பாடல்களைப் பாடி, அவற்றிற்கு ஏற்பஆடி, வண்டு ஒலிக்கும் கொன்றைப் பூவினை அணிந்ததாமும் தம் பூதங்களுமாய்ப் 'புறம்பயம் நம் ஊர்' என்றுபெருமான் போயினார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புறம்பயம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மூரென்று, புறம்பயம், போயினார், கையில், சூழப்புறம்பயம்நம், பூதங்கள், சிவந்த, சென்று, அணிந்து, செய்து, கொண்டு, கட்டிக், அணிந்த, திருப்புறம்பயம், எம்பெருமான், என்னும், கோட்டூர், புலித்தோல், கைக்கொண்டு, சூடிச், வெள்ளிய, மேனியை, விடுத்து, பார்வதி, னென்றோர், பிச்சை, பெருமானார், செந்தீ, தாமும், திருமுறை, நீடூர், இறுகக், திருச்சிற்றம்பலம், நாளும், விட்டார், இவற்றில், புறம்பயம்நம், எம்பெருமானார், எங்களுடைய, ஒலிக்கும், நீங்கி, பொருந்திய, மேனியராய்ப், நோக்கி, பாசூர், திருநீறு, கைவிட், ஒன்றனை, கண்ணுள்ளே, வேடத்தர், கொடுங்கோளூர்