முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.012.திருக்கழிப்பாலை
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.012.திருக்கழிப்பாலை

6.012.திருக்கழிப்பாலை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்.
தேவியார் - வேதநாயகியம்மை.
2202 | ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து தாமெடுத்த கூரை தவிரப் போவார் கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக் வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும் |
6.012.1 |
சதைப்பகுதியை வளைத்துச் சுவராகச் செய்து ஒன்பது வாயில்களை அமைத்து வெள்ளிய ஒளியை உடைய எலும்புகளைத் தூணாக அமைத்து மயிரினை மேற்பரப்பித் தாமே படைப்பித்த குடில் நீங்கும்படி தக்காரிடத்து வலியச் சென்று, தாவும் மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய் அருள் செய்கின்றார். தோகைகளைப் பரப்பி மயில்கள் ஆடும் சோலைகளை உடைய திருக்கழிப்பாலைத் தலத்தை உகந்தருளியுள்ள மண்டை யோட்டினை ஏந்திய தலைவராகிய அப்பெருமான் வான் உலகங்களை எல்லாம் கடந்து விரைவாகச் செல்லும் வீடுபேற்றுலகிற்குச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வுடம்பு பெற்றதனாலாய பயன்கொண்டு அவர் வகுத்த வழியிலே செல்வது ஒன்றே நாம் செயற்பாலது. அவர்க்குக் கைம்மாறாக நாம் செயற்பாலது ஒன்றும் இல்லை.
2203 | முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை |
6.012.2 |
மதில்களுக்குரிய இலக்கணங்கள் நிரம்பிய மூன்று மதில்களையும் சாம்பலாகுமாறு அழித்த பெருமான் ஏனைய பொருள்கள் தோன்றுவதன் முன்னும் அவை அழிந்தபின்னும் உள்ள முக்கண் தலைவர்.கங்கை தங்கிய சடைமுடியிலே பிறைச்சந்திரனும் பாம்பும் பகைமை நீங்கச் சேர்த்து வைத்தவர். கொடிய விடக் கறையைக் கழுத்தளவில் தங்கச் செய்தவர், எம்பெருமானார். கழிப்பாலை மேவிய அக்கபாலப்பனார் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தம் சொற்களால், இவ்வுடல் அழிய உயிர் செல்லுதற்குரிய வழியை வகுத்தருளியுள்ளார். அவ்வழியிலே நாம் செல்லுவோம்.
2204 | நௌவுண்டாக் கருதாதே நிமலன் தன்னை ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை களிவண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக் வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க |
6.012.3 |
தூயனாகிய அப்பெருமானாரை நெகிழ்ச்சியால் இடையறவு படாமல் நாடோறும் தொடர்ந்து விருப்போடு நினையுங்கள். சிறந்த அணிகலன்களை உடைய, வண்டுகள் ஒளிந்து தங்கும் கருங்கூந்தலை உடைய உமாதேவியைத் தம் உடம்பில் ஒருபாகமாக விரும்பிக்கொண்டு, அடியார்கள் நினைந்து துதிக்குமாறு, களிப்பை உடைய வண்டுகள் நிறைந்த இருண்ட சோலைகளுக்குத் தாழைவேலியாகச் சூழ்ந்த கழிப்பாலை மேவிய கபாலப்பனார் காற்றை நுகர்தலாலே நிலைத்து நிற்கும், மாயையின் காரியமாகிய இவ்வுடம்பை இனிக்கொள்ளாது நிலையாக விடுத்தற்குரிய நெறியைக் குறிப்பிட்டுள்ளார். அந்நெறியிலே நாம் செல்வோம்.
2205 | பொடிநாறு மேனியர் பூதிப் பையர் அடிநூறு கமலத்தர் ஆரூ ராதி கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங் மடிநாறு மேனியிம் மாயம் நீங்க |
6.012.4 |
திருநீறு விளங்கும் திருமேனியை உடைய பெருமானார் திருநீற்றுப்பையையும் வைத்துள்ளார். அவர் பூணூல் அணிந்து புலித்தோலை உடுத்துப் பாம்புகளை அணிகலனாகப் பூண்டவர். ஆதிரை நட்சத்திரத்தை உகந்து கொண்டு திருவாரூரில் உள்ள அவ்வாதி மூர்த்தி பஞ்சகவ்விய அபிடேகத்தை ஏற்றுத் தம் திருவடிகளில் அடியவர்கள் இட்ட பல தாமரைப் பூக்களை உடையவர். சோலைகள் நறுமணம் வீசும் கழிப்பாலை மேவிய அக்கபாலப்பனார், இறந்து போகும் இப்பொய்யாய உடல் நீங்க உயிர் நிலையாகத் தங்குதற்குரிய இடத்தை அடைவதற்கு உரிய வழியை வகுத்துக் கொடுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.
2206 | விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய் கண்ணானாய் காரானாய் பாரு மானாய் மண்ணாய மாயக் குரம்பை நீங்க |
6.012.5 |
தேவர்கள் விரும்பி வந்து 'தேவருலகம் ஆகியவனே! எல்லா இடங்களிலும் பரவி வேதம் ஓதி, கீதம்பாடி, எண் ஆனவனே! எழுத்தானவனே! ஏழ்கடலும் ஆனவனே! எல்லாப் பொருள்களுக்கும் தலைவனே! எங்கள் தலைவனே! எங்கள் பற்றுக் கோடே! மேகங்களும் உலகப் பொருள்களும் ஆயவனே!' என்று போற்றி நிற்கும் கழிப்பாலை மேவிய கபாலப்பனார் இவ்வுலகில் தோன்றிய நிலையாமையை உடைய உடல் நீங்க வழி வைத்தார். அவ்வழி நாம் செல்வோம்.
2207 | விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும் கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார் வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க |
6.012.6 |
கழிப்பாலை மேவிய கபாலப்பனார், வேண்டுகோளை உடைய வித்தியாதரர்கள் துதிக்க, சூரியன், அக்கினி, விண்ணுலகத்தார் ஆகிய எல்லாப் பொருள்களையும் ஆக்கும் தந்தையார். அடியார்கள் மனத்துள் பொருந்தும் உயிர்களின் தலைவர். பாசுபதவேடத்தையுடைய ஒளி வடிவினர். கண்ணப்ப நாயனார் தம் வலக்கண்ணை இடந்து அப்பிய செயலைக் கண்டு உகந்தவர். அவர் பலவகையான பிணிகளுக்கு இருப்பிடமாகிய இந்நிலையற்ற உடம்பு நீங்க வழி வகுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.
2208 | பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப் நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர் கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார் மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க |
6.012.7 |
பிணமாதலைப் பொருந்தும் ஓட்டைக் குடிசையை நிலைபேறுடையதாகத் தவறாக எண்ணும் அறிவிலிகளே! கழிப்பாலை மேவிய கபாலப்பனார், கொழுப்புத் தங்கும் சூலத்தவராய், நீல கண்டராய், எண்தோளினராய் எண்ணற்ற குணத்தினாலே கணம்புல்ல நாயனாரின் கருத்தை விரும்பி ஏற்றவராய்க் காஞ்சிமாநகரில் உகந்தருளியிருப்பவர். நறுமணப் பொருளால் நாற்றம் மறைக்கப்பட்ட நிலையில்லாத இவ்வுடல் தொடர்பு நீங்குதற்கு வழிவகுத்துள்ளார். அவ்வழியே நாம் செல்வோம்.
2209 | இயல்பாய ஈசனை எந்தை தந்தை முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக் மயலாய மாயக் குரம்பை நீங்க |
6.012.8 |
கயல்மீன்கள் தம் மீது பாயப்பெற்ற தாழை மரங்களை எல்லையாகக் கொண்டு அவற்றால் சூழப்பட்ட கழிப்பாலை மேவிய கபால அப்பன் செயற்கையான் அன்றி இயற்கையாகவே எல்லோருக்கும் தலைவன். எம் குலத்தலைவன். என் சிந்தையில் விரும்பித் தங்கியிருக்கின்றவன். இடையறாது தொழில் செய்பவன். அவ்வத்தொழில்களுக்கு ஏற்ற திருமேனிகளை உடையவன். தூயவன், முக்கண்ணன், முத்தலைச் சூலத்தினன். தீயை வெளிப்படுத்தும் சிரிப்பினன். அப்பெருமான் மயக்கத்தைத் தரும் நிலையில்லாத இவ்வுடல் நீங்க வழிவைக்க, அவ்வழியே நாம் செல்வோம்.
2210 | செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங் கற்றதோர் நூலினன் களிறு செற்றான் மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க |
6.012.9 |
கழிப்பாலை மேவிய கபால அப்பன், மனத்தில் பகை எண்ணத்தை நீக்கிச் சிவபெருமான் என்று தன்னை அன்போடு தியானிப்பவர்களின் உள்ளத்தில் உள்ள நோய்களைப் போக்கி அவர்களை இவவுலகத்தார் போற்றச் செய்யும் உத்தமனாய் எல்லாவற்றையும் ஓதாதே உணர்ந்தவனாய் இயல்பாகவே எல்லாப் பாசங்களையும் நீங்கியவன். அப்பெருமான் இந்த நிலையற்ற உடல் நீங்க வைத்த வழியிலே நாம் போவோம்.
2211 | பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன் இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும் கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு வருதலங்க மாயக் குரம்பை நீங்க |
6.012.10 |
போரில் வல்ல அரக்கனாகிய இராவணனுடைய புட்பக விமானம் வெற்றிமாலை சூடிய சிவபெருமானுடைய மலையின் மீது செல்லாதாகக் கீழ் நிலம் அசையுமாறு அவன் மலையைப் பெயர்த்த அளவில் உமாதேவி அஞ்ச அப்பெருமான் மனத்தால் நோக்கி அவன் இருபது கரங்களையும் பத்துத் தலைகளையும் தன் கால் விரலை ஊன்றி நசுக்கியவன். அப்பெருமான் திருக்கழிப்பாலையை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு பிறத்தலை உடைய நிலையாமையை உடைய இவ்வுடம்பின் தொடர்பு உயிருக்கு என்றும் நீங்குமாறு செய்யும் வழியை அறிவித்துள்ளான். அவ்வழியிலேயே நாம் செல்வோம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கழிப்பாலை - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கழிப்பாலை, போதும், கவ்வழியே, கபாலப், குரம்பை, செல்வோம், நீங்கவழிவைத்தார்க், அப்பெருமான், கபாலப்பனார், அவ்வழியே, வழிவைத்தார்க், விரும்பி, எல்லாப், இவ்வுடல், கொண்டு, செல்லும், அப்பன், சிந்தை, செய்யும், தொடர்பு, பொருந்தும், எங்கள், நிலையாமையை, நிற்கும், தலைவனே, அக்கபாலப்பனார், பெருமான், கொடுத்துள்ளார், ஏந்திய, அமைத்து, திருமுறை, திருச்சிற்றம்பலம், வழியிலே, செயற்பாலது, வண்டுகள், தங்கும், திருக்கழிப்பாலை, தலைவர், யாக்கை, அடியார்கள்