முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.011.திருப்புன்கூர் - திருநீடூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.011.திருப்புன்கூர் - திருநீடூர்

6.011.திருப்புன்கூர் - திருநீடூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன.
திருப்புன்கூரில்,
சுவாமிபெயர் - சிவலோகநாதர்.
தேவியார் - சொக்கநாயகியம்மை.
திருநீடூரில்,
சுவாமிபெயர் - சோமநாதேசுவரர்.
தேவியார் - சொக்கநாயகியம்மை.
2192 | பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப் துறவாதே கட்டறுத்த சோதி யானைத் திறமாய எத்திசையுந் தானே யாகித் நிறமா மொளியானை நீடூ ரானை |
6.011.1 |
பிற பொருள்களின் கூட்டத்தால் பிறவாது எம் பெருமான் தானே தன் விருப்பத்தால் வடிவங்கொள்பவன். தன்னை விரும்பாதவர்களைத் தானும்விரும்பி உதவாதவன். இயல்பாகவே பந்தங்களின் தொடர்பு இல்லாத ஞான வடிவினன். தூய நன்னெறியில் ஒழுகுவதற்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகுக்கப்பட்ட எத்திசைக்கண்ணும் தானே பரவி யிருப்பவன். திருப்புன்கூரை உகந்தருளியிருக்கும் அச்சிவலோக நாதனே நீடூரிலும் உகந்திருப்பவன். அத்தகைய செந்நிறச் சோதி உருவினைக் கீழ் மகனாகிய அடியேன் விருப்புற்று நினையாமல் இந்நாள் காறும் வாளா இருந்த செயல் இரங்கத்தக்கது.
2193 | பின்றானும் முன்றானு மானான் தன்னைப் நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத் நின்றாய நீடூர் நிலாவி னானை |
6.011.2 |
எதிர்காலமும் இறந்தகாலமும் ஆகியவன். தன்னிடம் பெருவிருப்புடைய அடியார்பக்கல், தானும் பெருவிருப் புடையவன். நல்வினையும் தீவினையும் செய்தவர்களுக்கு அவரவர் வினைகளுக்கு ஏற்பப்பயன்களை வழங்குபவன். வானளாவிய தீப்பிழம்பு வடிவானவன். திருப்புன்கூரை உகந்தருளிய அப்பெருமான் நீடூரிலும் நிலையாக உறைந்திருக்கின்றான். அப்பெருமானை நீசனேன் நினையாவாறு என்னே!
2194 | இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத் நெல்லால் விளைகழனி நீடூ ரானை |
6.011.3 |
எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன். நல்லனவே நினையாதவர்களுக்குத் தான் இனியன் அல்லன். தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். ஓரிடம் விட்டு மற்றோரிடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்தருளியிருப்பவன். அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!.
2195 | கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக் பலவாய வேடங்கள் தானே யாகிப் சிலையாற் புரமெரித்த தீயாடியைத் நிலையார் மணிமாட நீடு ரானை |
6.011.4 |
கலைஞானத்தை முயன்று கற்றல் வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவன். கொடிய நரகத்தை அடையாதபடி காப்பவன். பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி ஆங்காங்கே உறைபவன். வில்லால் திரிபுரங்களை எரித்தவன். தீயின்கண் கூத்து நிகழ்த்துபவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந் தருளியவன். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!.
2196 | நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை ஆக்காதே யாதொன்று மாக்கி னானை தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத் நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை |
6.011.5 |
கருவிகளால் அன்றித் தன் நினைவினாலேயே எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்து அழிப்பவன். நுண்ணிய பொருள்களிலும் நுண்ணியனாக இயல்பாகவே கலந்திருப்பவன். கருவிகள் கொண்டு படைக்காமல் எல்லாப் பொருள்களையும் தன் நினைவினாலேயே தோற்றுவிப்பவன். தன்னை நெருங்காதவர்களுக்கு அருள் செய்தற்கண் ஈடுபடாதவன். தடுக்காமல் கடல் விடத்தை உண்டவன். அத்தகைய திருப்புன்கூர் மேவிய சிவலோகன் நீக்குதற்கரிய மிக்க பொலிவை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!.
2197 | பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த ஊணலா வூணானை யொருவர் காணா சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத் நீணுலா மலர்க்கழனி நீடு ரானை |
6.011.6 |
மற்றவர் அணியக் கருதாத பாம்புகளை அணிகளாகப் பூணுபவன். மற்றவர்கள் பூசிக்கொள்ள விரும்பாத சாம்பலைச் சந்தனம் போலப் பூசிக்கொள்பவன். புலால் நாறும் மண்டையோடாகிய இழிந்த உண்கலத்தில் உண்ணலாகாத பிச்சை எடுத்த ஊணினை உண்பவன். இவையாவும் தன்பொருட்டன்றிப் பிறர் பொருட்டேயாக, இவற்றின் காரணத்தை மற்றவர் காணமாட்டாத வகையில் செயற்படும் மேம்பட்டவன். இச்செயல்களால் ஒளிமிக்குத் தோன்றும் திருமேனியை உடையவன். மிக உயர்ந்த மேம்பட்ட பவளமலையை ஒப்பவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் மிகுதியாகக் காணப்படுகின்ற மலர்களை உடைய வயல்கள் பொருந்திய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!
2198 | உரையார் பொருளுக் குலப்பி லானை புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப் திரையார் புனல்சேர் மகுடத் தானைத் நிரையார் மணிமாட நீடூ ரானை |
6.011.7 |
சொற்பொருளுக்கு அப்பாற்பட்டவன். எல்லா உருவங்களிலும் நீங்காது உடன் உறைபவன். நீரில் ஆழாத உட்டுளை உடைய நொய்ய பொருள்களாகவும் நீரில் ஆழும் கனமான பொருள்களாகவும் உள்ளவன். மிகவும் பழைமையாகிய தான் புதியவனாகவும் இருப்பவன். அலைகள் நிறைந்த கங்கையைத் தலையில் சூடியவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் வரிசையான அழகிய மாடிவீடுகளை உடைய நீடூரானும் ஆவான். நீசனேன் அவனை நினையாதவாறு என்னே!
2199 | கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர் சீரரவக் கழலானை நிழலார் சோலைத் நீரரவத் தண்கழனி நீடூ ரானை |
6.011.8 |
மேம்பட்ட ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமாலும், குளிர்ந்த பொய்கையில் தோன்றும் தாமரையை இருப்பிடமாக உடைய பிரமனும் ஆகிய இருவரும் காண முயன்றும் அறியமாட்டாத அப்பெருமான் இயல்பினை யாவர் உள்ளவாறு அறிய இயலும்? அவனை அறிவோம் என்று நினைக்கும் தேவர்களுக்கும் உண்மையில் அறிய முடியாதவனாய் ஒலிக்கும் அழகிய வீரக்கழலை அணிந்த அப்பெருமான் நிழல் தரும் சோலைகள் உடைய திருப்புன்கூரை மேவியவன். அவனே நீர் பாயும் ஓசையை உடைய குளிர்ந்த வயல்களை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் பண்டு நினையாதவாறு என்னே!
2200 | கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக் பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித் நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை. |
6.011.9 |
கைகளிலிருந்து நெய் கீழே சொட்டுதலால் அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாதே கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமலிருப்பதற்குக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்ணும் கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய் உரைகளாகக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத்தீங்கில் நின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்த அடியேன், வயல்களில் செழிப்பான தாமரைகள் களைகளாகத் தோன்றும் நன்செய் நிலங்களை எல்லையாக உடைய திருப்புன்கூர் சிவலோகநாதன் என்ற பெயரில் உகந்தருளியிருப்பவனாய், கடற்கரைப் பகுதியில் நீர்வளம் உடைய மனைக்கொல்லைகளை உடைய நீடூரிலும் உகந்து தங்கியிருக்கும் அப்பெருமானை, நினையாத கீழ்மகனாய் அடியேன் இருந்தவாறு இரங்கத்தக்கது.
2201 | இகழுமா றெங்ஙனே யேழை நெஞ்சே நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத் நிகழுமா வல்லானை நீடூ ரானை |
6.011.10 |
யாதொரு பொருளையும் புறக்கணிக்காது அவற்றிலெல்லாம் உடனாய் இருப்பவன் எம்பெருமான். அவன் இராவணனைக் கயிலை மலையின் அடியில் இட்டு வருந்தச் செய்து அவன் வலிமையைக் குலைத்துப் பின் அவனுக்கு நல்லனவாகிய வாளும் நாளும் வழங்கியவன். மதத்தால் விளங்கிய யானையின் தோலைப் போர்த்தியவன். அவனே திருப்புன்கூர் மேவிய சிவலோக நாதன். தன் விருப்பப்படியே செயற்படவல்ல அப்பெருமான் நீடூரிலும் உகந்தருளியுள்ளான். 'அறிவில்லாத மனமே! அப்பெருமானைக் கீழ்மகனாகிய யான் நினையாத செயலே இரங்கத்தக்கது. அவ்வாறாக நீயும் இகழும் செயல் எவ்வாறு ஏற்பட்டது?'
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புன்கூர் - திருநீடூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னேநான், நினையா, திருப்புன்கூர், ரானைநீதனேன், நினையாதவாறு, நீசனேன், அப்பெருமான், நீடூரிலும், அச்சிவலோகன், நீடூரானும், அடியேன், மானான், தோன்றும், இரங்கத்தக்கது, திருப்புன்கூரை, நின்றான், இருப்பவன், நினைவினாலேயே, உறைபவன், பொருள்களையும், எல்லாப், மேம்பட்ட, குளிர்ந்த, நினையாத, பொருள்களாகவும், நீரில், மணிமாட, தானைத்திருப்புன்கூர், மற்றவர், பானைத்திருப்புன்கூர், அத்தகைய, விருப்புற்று, இயல்பாகவே, தேவியார், நீதனேன், சொக்கநாயகியம்மை, தானும், சுவாமிபெயர், திருமுறை, நீடூரையும், எவ்விடத்தும், திருச்சிற்றம்பலம், அப்பெருமானை, திருநீடூர்