அகப்பொருள் விளக்கம்
நம்பி அகப்பொருள் என்பது தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் தமிழ் இலக்கணம் பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும்.
சூத்திர வடிவில் அமைந்துள்ள இந்நூல் நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்து பிரிவுகளாக இந் நூலை ஒழுங்கு படுத்தியுள்ளார் இதன் ஆசிரியர்.
பாயிரம்
பூமிசை நடந்த
வாமனை வாழ்த்தி வடமலைச் சென்னி ஈண்டிய கடவுளர் வேண்டலிற் போந்து குடங்கையின் அலைகடல் அடக்கி ஈண்டிய தென்மலை இருந்த இருந்தவன் இயற்றமிழ் கெழீய அகப்பொருள் தழீய நோக்கி வழிகொடுத்து நிறீஇ வகுத்துப் புலப்படுத்தாங்கு இகப்பில் அகப்பொருள்விளக்கம் பகர்ந்தனன் எழுதி செந்தமிழ் நாட்டு மைந்தன் குரிசில் பாற்கடல் பலபுகழ் பரப்பிய நாற்கவிராச நம்பி என்பவனே |
[பழம் பாயிரம்]
பூமலி நாவன் மாமலைச் சென்னி
ஈண்டிய இமையோர் வேண்டலின் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த்து அலைகடல் அடக்கி மலையத்து இருந்த இருந்தவன் தன்பால் இயல் தமிழ் உணர்ந்த புலவர் பன்னிருவருள் தலைவனாகிய தொல்காப்பியன் அருள் ஒல்காப் பெரும்பொருள் அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ இகப்பரும் சான்றோர் இலக்கிய நோக்கித் தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்கு அகப்பொருள் விளக்கம் என்று அதற்கு ஒரு நாமம் புலப்படுத்தி இருள் அறப் பெருள் விரித்து எழுதினன் மாந்தரும் தேவரும் வாழ்த்த முக்குடைக்கீழ் ஏந்தெழில் அரிமான் ஏந்து பொன்அணைமிசை மதி மூன்று கவிப்ப உதய மால்வரைக் கதிர் ஒன்று இருந்தெனக் காண் தக இருந்து தத்துவம் பகர்ந்தோன் சரணம் பொருந்திய உத்தமன் புளிங்குடி உய்யவந்தான் எனும் முத்தமிழ் ஆசான் மைந்தன் இத்தலத்து இருபெரும் கலைக்கும் ஒருபெரும் குரிசில் பாற்கடல் புகழ் பரப்பிய நாற்கவிராச நம்பி என்பவனே |
[சிறப்புப் பாயிரம்]
நூல்
1 அகத்திணை இயல்
1.1 இதன் வகை
மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என எழு பெற்றித்து ஆகும் |
1 |
1.2 இதன் திறன்
அதுவே
பு¨¨ந்துரை உலகியல் எனும் திறன் இரண்டினும் தொல் இயல் வழாமல் சொல்லப் படுமே |
2 |
1.3 கைக்கிளை இன்னது
அவற்றுட்
கைக்கிளை உடையது ஒருதலைக் காமம் |
3 |
1.4 ஐந்திணை இன்னது
ஐந்திணை உடையது அன்புடைக் காமம் | 4 |
1.5 பெருந்திணை இன்னது
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் | 5 |
1.6 ஐந்திணை வகை
குறிஞ்சி பாலை முல்லை மருதம்
நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே |
6 |
1.7 ஐந்திணைக்கு உரிய பொருள் வகை
அவைதாம்
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எனமுறை நுதற்பொருள் மூன்றினும் நுவலப் படுமே |
7 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்