அகப்பொருள் விளக்கம்
5.30 வெளி உவமம்
வெளிப்படை உவமம் வினை பயன் மெய்யுரு
வெளிப்பட நின்று விளங்குவது ஆகும் |
239 |
5.31 இறைச்சிப் பொருள் இயல்
கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே | 240 |
5.32 அகப்புற கைக்கிளை
காமம் சாலா இளமையோள் வயில்
குறிப்பு அறிவுறாது குறுகி ஆங்கு அவளோடு இறப்பக் கூறுவது அகப்புறக் கைக்கிளை |
241 |
5.33 இதனுக்கு உரியோர்
அதுவே
இறைமையில்லோர்க்கும் இழிகுலத்தோர்க்கும் முறைமையின் உரித்தே முன்னுங்காலை |
242 |
5.34 அகப்பொருள் பெருந்திணை
அகன்றுழிக் கலங்கலும் புகன்ற மடற்கூற்றும்
குறியிடையீடும் தெளிவிடை விலங்கலும் வெறிகோள் வகையும் விழைந்து உடன் போக்கும் பூப்பியல் உரைத்தலும் பொய்ச்சூள் உரையும் தீர்ப்பு இல் ஊடலும் போக்கழுங்கு இயல்பும் பாசறைப் புலம்பலும் பருவம் ஆறுபடுதலும் வன்புறை எதிர்ந்து மொழிதலும் அன்புறு மனைவியும் தானும் வனமடைந்து நோற்றலும் பிறவும் அகப்பொருள் பெருந்திணைக்கு உரிய |
243 |
5.35 அகப்புறப் பெருந்திணை
மடல் ஏறுதலொடு விடைதழால் என்றா
குற்றிசை தன்னொடு குறுங்கலி என்றா சுரநடைதன்னொடு முதுபாலை என்றா தாபத நிலையொடு தபுதார நிலை எனப் புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின் அகன்ற அகப்புற பெருந்திணை ஆகும் |
244 |
5.36 அகப்பாட்டுடைத் தலைவர்
பாட்டுடைத்தலைவன் கிளவித் தலைவன் எனப்
பாட்டினுள் பாடப் படுவோர் இருவர் |
245 |
5.37 இதனுள் உயர்வு
அவருள்
உயர்ந்தோர் பாட்டுடைத் தலைவன் ஆகும் |
246 |
5.38 பாட்டுடைத் தலைவர்க்கு இடுவன
நிலைப்பெயர் வினைப்பெயர் பண்புகொள் பெயரொடு
குலப்பெயர் இயற்பெயர் கூறுப அவர்க்கே |
247 |
5.39 இசையா பெயர்
அவற்றுள்
இயற்பெயர் கிளவித் தலைவற்கு இசையார் |
248 |
5.40 தலைமக்கள் வருகை
இருவரும் ஒருங்கே வருதலும் தனித்தனி
வருதலும் இருவரும் வாராது ஒழிலும் உரிய என்மனார் உணர்ந்திசினோரே |
249 |
5.41 அகப்புறப்பாட்டிற்காகும் நெறி
அகப்புறப்பாட்டும் இகப்பில அவையே | 250 |
5.42 முதல் கரு உரி இவையின் வழு அமைதி
முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய |
251 |
5.43 அதிகார புறநெறி
கூறிய அல்ல வேறு பிற தோன்றினும்
கூறிய அவற்றொடும் கூட்டிமெய்கொளக் கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே |
252 |
நாற்கவிராச நம்பியின்
அகப்பொருள் விளக்கம் முற்றிற்று
அகப்பொருள் விளக்கம் முற்றிற்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்