அகப்பொருள் விளக்கம்
5.16 கிழவன்/கிழத்தி கூற்று கேட்போர்
கிழவோன் கூற்றும் கிழத்திக் கூற்றும்
பழமறையொன் முதல் பதின்மரும் கேட்ப |
225 |
5.17 மறையோன் /அறிவர் கூற்று
இறையோன் முதலா எனைவரும் கேட்ப | 226 |
5.18 இடம்
நெற்¢ப்படு கருமம் நிகழ்வழி இடமே | 227 |
5.19 காலம்
சென்றதும் நிகழ்வதும் எதிர்வதும் எனமுறை
நின்று பொருஞ் உணர நிகழ்வது காலம் |
228 |
5.20 பயன்
இப்பொருள் பயக்கும் இ·து என்பதுவே | 229 |
5.21 முன்னம்
இன்னார்க்கு இன்னுழி இன்னது பயக்கும் எனும்
முன்னம் தருவது முன்னம் ஆகும் |
230 |
5.22 மெய்ப்பாடு
நகை முதலாம் இருநான்கு மெய்பாடும்
நிகழ்பொருள் மெய்ப்பட நிற்ப மெய்ப்பாடே |
231 |
5.23 எச்சம்
சொல்லே ஆயினும் குறிப்பே ஆயினும்
செல்லி முடித்தல் வேண்டுவது எச்சம் |
232 |
5.24 பொருள்
ஒருதிணைக்கு உரிமை பூணா நிலைமை
பொருள்வகை என்மனார் புலமையோரே |
233 |
5.25 துறை
சொல்லிய அல்ல ஒன்றினும் அவற்றோடு
ஒல்லும் வகைதேர்ந்து உணர்த்தி இயல் வழாமல் உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி உரைக்கும் கவியே உரைப்பது துறையே |
234 |
5.26 எச்சம் வேறு
அவற்றுள்
எச்சம் இன்றியும இயையும் என்ப |
235 |
5.27 அகப்பாட்டு பொருளாவன
உவமைப் பொருளும் இறைச்சிப் பொருளும் என்று
இருவகைப் பொருளும் எய்தும் அகப்பாட்டினுள் |
236 |
5.28 உவம வகை
உள்ளுறை உவமம் வெளிப்படை உவமம் என
எள்ளரும் உவமம் இருவகை உடைத்தே |
237 |
5.29 உள்ளுறை உவம இயல்
அவற்றுள் உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்
புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும் |
238 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்