அகப்பொருள் விளக்கம்
1.31 கைக்கிளையில் மற்றோர் வகை
அதுவே
மொழிந்தோர் நால்வரும் ஒழிந்த ஐந்நிலத்துறை இழிந்தோர் தம்முள் உயர்ந்தோரும் எயதுப |
31 |
1.32 இயற்கைப் புணர்ச்சி இ·தெனல்
தெய்வம் தன்னின் எய்தவும் கிழத்தியின்
எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி |
32 |
1.33 இயற்கைப் புணர்ச்சியில் சிறப்பு
இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி
முயற்சி இன்றி முடிவது ஆகும் |
33 |
1.34 களவினுள் புணர்ச்சி வகை
உள்ளப் புணர்ச்சியும் மெய்உறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்கு உரிய |
34 |
1.35 உள்ளப் புணர்ச்சி நிகழ்வு களம்
பொருவிறந்தோற்கு பெருமையும் உரனும்
நல்நுதல் கச்சமும் நாணும் மடனும் மன்னிய குலங்கள் ஆதலின் முன்னம் உள்ளப் புணர்ச்சி உரியது ஆகும் |
35 |
1.36 மெய்உறு புணர்ச்சி நிகழ்வு களம்
காட்சி முதலாச் சாக்காடு ஈறாக்
காட்டிய பத்தும் கைவரும் எனினே மெய்உறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே |
36 |
1.37 களவுப் புணர்ச்சி நிகழ்வு களம்
பகற்குறி இரவுக்குறி எனும் பான்மைய
புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழ் இடனே |
37 |
1.38 பகல் இரவுக்குறி ஈதெனல்
இல்வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி
இல்வரை இகவா இயல்பிற்று ஆகும் |
38 |
1.39 களவில் பிரிவு வகை
ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப்
பொருள்வயில் பிரிதல் என்று இருவகைத்து ஆகும் நிறைதரு காதல் மறையினிற் பிரிவே |
39 |
1.40 ஒருவழித் தணத்தலின் இயல்
அவற்றுள்
ஒருவழிதணத்தற்குப் பருவம் கூறார் |
40 |
1.41 வரைவிடைவைத்துப் பொருள்வியின் பிரிவின் இயல்
வரைவிடைவைத்துப் பொருள்வியின் பிரிவோர்
இருதுவின் கண் உடைத்து என்மனார் புலவர் |
41 |
1.42 வரைவு நிகழ் களம்
களவு வெளிப்படா முன்னும் பின்னும்
விளையு நெறித்தென விளம்பினர் வரைவே |
42 |
1.43 களவு அறியப்படுமுன் வரைவிற்கு களம்
நான்கு வகைப் புணர்வினும் தான்றெருண்டு வரைதலும்
களவு வெளிப்படா முன் வரைதல் ஆகும் |
43 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்