அகப்பொருள் விளக்கம்
1.44 களவு அறியப்பட்ட பின் வரைவிற்கு இயல்
உடன் போய் வரைதலும் மீண்டு வரைதலும்
உடன் போக்கிடை ஈடுற்று வரைதலும் களவு வெளிப்பட்ட பின் வரைதல் ஆகும் |
44 |
1,45 உடன்போய் வரைதல்
அவற்றுள்
உடன்போய் வரைதல் ஒருவகைத்தாகும் |
45 |
1.46 மீண்டு வரைதல்
அவண்மனை வரைதலும் தன்மனை வரைதலும்
என மீண்டு வரைதல் இருவகைத் தாகும் |
46 |
1.47 அறத்தொடு நிலை களம்
ஆற்றுற அஞ்சினும் அவன் வரைவு மறுப்பினும்
வேற்று வரைவு நேரினும் காப்புக்கை மிகினும் ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே |
47 |
1.48 அறத்தொடு நிற்றலின் நெறியும் உரியாரும்
தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும்
பாங்கி செவிலக்கு அறத்தொடு நிற்கும் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும் நற்றாய் தந்தை தன்னையார்க்கு அறத்தொடு நிற்கும் என்ப நெறி உணர்ந்தோரே |
48 |
1.49 தலைவி அறத்தொடு நிற்கும் களம்
ஒருபுணர் ஒழிந்தவற்று ஒருவழி தணப்பவும்
வரைவிடைவைத்துப் பொருள் வயிற் பிரியவும் இறைவனைச் செவிலி குறிவயில் காணவும் மனைவயிற் செறிப்பவும் வருத்தம் கூறின் வினைவயிற் கண்ணும் வினவாக் கண்ணும் அனநடைக்கிழத்தி அறத்தொடு நிற்கும் |
49 |
1.50 பாங்கி அறத்தொடு நிற்கும் களம்
முன்னிலைப் புறமொழி முன்னிலை மொழிகளில்
சின்மொழிப் பாங்கி செவிலிக்கு உணர்த்தும் |
50 |
1.51 செவிலி அறத்தொடு நிற்கும் களம்
செவிலி நற்றாய்க்குக் கவலையின்றி உணர்த்தும் | 51 |
1.52 நற்றாய் அறத்தொடு நிற்கும் களம்
நற்றாய் அறத்தொடு நிற்குங் காலைக்
குரவனும் தன்னையும் குறிப்பின் உணர்ப |
52 |
1.53 அறத்தொடு நிற்போர் வினா எழு களம்
பாங்கி தலைவியை வினவும் செவிலி
பாங்கியை வினவும் பாங்கி தன்னையும் நற்றாய் தானும் வினவும் செவிலியில் பொன்தொடி கிழத்தியை உற்று நோக்கின் |
53 |
1.54 உடன்போக்குக் களத்து அறத்தொடு நிற்போர்
ஆங்குடன் போய்உழி அறத்தொடு நிற்ப
பாங்கியும் செவிலியும் பயந்த தாயும் |
54 |
1.55 கற்பின் வகை
களவின் வந்த கற்பும் பொற்புஅமை
களவின் வழிவாராக் கற்பும் என்றாங்கு முற்படக் கிளந்த கற்பு இருவகைத்தே |
55 |
1.56 கற்பினுள் புணர்ச்சி வகை
குரவரில் புணர்ச்சி வாயிலில் கூட்டம் என்று
இருவகைத்து ஆகும் கற்பின் புணர்ச்சி |
56 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்