அகப்பொருள் விளக்கம்
3.11 உடன்போக்கின் வகை
போக்கு அறிஉறுத்தல் போக்கு உடன்படாமை
போக்கு உடன்படுத்தல் போக்கு உடன்படுதல் போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என்று யாப்பமை உடன்பொக்கு இருநான்கு வகைத்தே |
181 |
3.12 இதன் விரி
பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தலும்
ஆங்கு அவன் மறுத்தலும் அவள் உடன்படுத்தலும் தலைவன் போக்குடன் படுதலும் பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும் தலைவி நாண்அழிபு இரங்கலும் கற்பு மேம்பாடு பூண்முலைப் பாங்கி புகறலும் தலைவி ஒருப்பட்டு ஒழுகலும் விருப்பு உடைப் பாங்கி சுரத்தியல் வைத்துழி ச் சொல்லலும் பாங்கி கையடை கொடுத்தலும் வைகிருள் விடுத்தலும் அவன் சுரத்து உய்த்தலும் அசைவு அறிந்து இருத்தலும் உவந்து அலர் சூட்டி உண் மகிழ்ந்து உரைத்தலும் கண்டோர் அயிர்த்தலும் காதலின் விலக்கலும் தன்பதி அணிமை சாற்றலும் தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தலும் என்று இவை ஒன்பதற்று இருவகைக் கிளவியும் ஒன்றிய அன்பின் உடன் போக்கு விரியே |
182 |
3.13 கற்பொடு புணர்ந்த கவ்வை வகை
செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல்
கவர்மனை மருட்சி கண்டோர் இரக்கம் செவிலி பின் தேடிச் சேறல் என்றாங்குக் கற்பொடு புணர்ந்த கவ்வை வகைத்தே |
183 |
3.14 செவிலி புலம்பல்
வினவிய பாங்கியின் உணர்ந்த காலை
இணையல் என்போர்க்கு எதிர் அழிந்து மொழிதலும் தன்னறிவு இன்மை தன்னை நொந்து உரைத்தலும் தெய்வம் வாழ்தலும் இவ்ஒரு மூன்றும் இலங்கிழைச் செவிலி புலம்புதற்கு உரிய |
184 |
3.15 நற்றாய் புலம்பல்
செவிலி அறத்தொடு நிற்றலிற் கவலையிற்
பாங்கி தன்னொடும் பாங்கியர் தம்மொடும் அயலார் தம்மொடும் பயில்இடம் தம்மொடும் தாஙகலள் ஆகிச் சாற்றிய எல்லாம் பூங்கொடி நற்றாய் புலம்பற்கு உரிய |
185 |
3.16 மனைமருட்சி
நிமித்தம் போற்றலும் சுரம் தணிவித்தலும்
தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கலும் இளமைத் தன்மைக்கு உளமெலிந்து இரங்கலும் அச்சத்தன்மைக்கு அச்சம்உற்று இரங்கலும் எனஇவை ஐந்தும் மனைமருட்சிக்குரிய |
186 |
3.17 கண்டோர் இரங்கல்
ஆயமும் தாயும் அழுங்கக் கண்டோர்
காதலின் இரங்கல் கண்டோர் இரக்கம் |
187 |
3.18 செவிலி பின்தேடல்
ஆற்றா தாயை தேற்றலும் ஆற்றிடை
முக்கோர் பகவரை வினாதலும் மிக்கோர் ஏதுக் காட்டலும் எயிற்றியொடு புலம்பலும் குராவொடு புலம்பலும் சுவடு கண்டு இரங்கலும் கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டலும் அவர் புலம்பல் தேற்றலும் புதல்வியைக் காணாது கவலை கூர்தலும் எனும் இவை ஒன்பானும் செவிலி பினதேடிச் சேறற்கு உரிய |
188 |
3.19 கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரி
முற்பட மொழிந்த முறை எழு முன்றும்
கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே |
189 |
3,20 மீட்சியின் வகை
தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பல் என
வெளிப்பட உரைத்த மீட்சி நால் வகைத்தே |
190 |
3.21 மீட்சியின் விரி
தலைவி சேண்அகன்றமை செவிலிதாய்க்கு உணர்த்தலும்
தலைவன் தம்ஊர் சார்ந்தமை சாற்றலும் தலைவி முன்செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும் ஆங்கவர் பாங்கியர்க்கு உணர்த்தலும் ஆங்கவர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தலும் நற்றாய் கேட்டவன் உளங்கோள் வேலனை வினாதலும் எனவுடன் விளம்பி இருமுன்று மீட்சியின் விரியே |
191 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்