அகப்பொருள் விளக்கம்
5.4 களவில் கூற்றில் உரிமை
தலைவன் தலைவி பார்ப்பான் பாங்கன்
பாங்கி செவிலி என்று ஈங்கு இவ்அறுவரும் சாற்றிய களவில் கூற்றிற்கு உரியர் |
213 |
5.5 கற்பில் கூற்றில் உரிமை
நற்றாய் கண்டோர் பாணன் கூத்தர்
விறலி பரத்தை அறிவர் என்று எழுவரும் அறுவர் என்ற அவரும் ஆகிய அனைவரும் குறைவறு கற்பில் கூற்றிற்கு உரியர் |
214 |
5.6 கூற்றில் உரிமை இன்மை
பயந்தோன் தன்னை உயங்கு நோய் அறிவொர்
ஊரவர் அயலோர் சேரியோர் என்று இவர் முகத்துரை நிகழா அகப்பொருள் அகத்தே |
215 |
5.7 தலைவன் கூற்று ஓர் வகை
தமர் வரின் இ¨Sடச்சுரம் தன்னில் கிழத்தியோடு
அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும் |
216 |
5.8 தலைவி கூற்று ஓர் வகை
உடன்போய் மீண்ட கொடுங்குழை மடந்தை
பிரிவுழித் தலைவனொடு சுரத்தியல் பேசலும் பிரிவுழி நெஞ்சொடும் பிறரெடும் வருந்திச் சொல்லும் உரியள் சொல்லுங் காலை |
217 |
5.9 நற்றாய் கூற்று இன்மை
தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள் | 218 |
5.10 நற்றாய் கூற்று
புணர்ந்து உடன்போயது உணர்ந்த பின்னர்
அந்தணர் தெய்வம் அயலோர் அறிவர் சிந்தைநோவு அறிவோர் செவிலி பாங்கியொடு கண்டோர்க்கு உரைக்கும் பண்புடை நற்றாய் |
219 |
5.11 செவிலிக் கூற்று
தாயொடும் பாங்கி தான் முதலாரொடும்
சேயிழை செவிலியும் செப்பும் ஆங்கே |
220 |
5.12 கண்டோர் கூற்று
தாயர் பாங்கியர் தலைவன் தலைவியோடு
ஏயும் என்ப கண்டோர் கூற்றே |
221 |
5.13 ஏனையோர் கூற்று
சாற்றா எழுவரும் தலைவன் தலைவியோடு
ஏற்றன கூறுப இடந்தொறும் இடந்தொறும் |
222 |
5.14 தலைவி கூற்று-வேறு
நெஞ்சு நாணு நிறைசேர் அறிவும்
செஞ்சுடர் பருதியும் தங்களும் மாலையும் புள்ளும் மாவும் புணரியும் கானலும் உள்ளுறுத்தியன்றவும் ஒழிந்தவை பிறவும் தன்சொல் கேட்குந போலவும் ஏவல் செய்குந போலவும் தோற்றுந போலவும் மொய்குழல் கிழத்தி மொழிந்தாங்கு அமையும் |
223 |
5.15 யாவரின் கூற்று-வேறு
இறையோன் முதலோர் யாரொடும் இன்றித்
தம்மொடு தாமே சாற்றியும் அமைப |
224 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்