அகப்பொருள் விளக்கம்
2.45 வருந்தொழிற்கு அருமை வகை
தாயும் நாயும் ஊருந்தும் சாமை
காவலர் கடுகுதல் நிலவு வெளிப்படுதல் கூகை குழறுதல் கோழி குரல் காட்டுதல் ஆகிய ஏழும் அல்லுக்குறித் தலைவன் வருந்தொழிற்கு அருமை பொருந்துதல் உரிய | 161 |
2.46 இரவுக்குறிஇடையீட்டின் விரி
திரட்டி இவ்வாறு செப்பிய ஒன்பதிற்று
இரட்டியும்(*) இரவுக்குறி இடையீட்டு வகையே |
162 |
2.47 வரைதல் வேட்கை வகை
அச்சம் உவத்தல் ஆற்றாமைஎன
மெச்சிய வரைதல் வேட்கை மூவகைத்தே |
163 |
2.48 இதன் விரி
பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி
அருமறை செவிலி அறிந்தமை கூறலும் தலைமகன் வருந்தொழிற்கு அருமை சாற்றலும் தலைமகன் ஊர்க்குச் செல ஒருப்படுதலும் பாங்கி இறைவனைப் பழித்தலும் பூங்கொடி இறையோன் தன்னை நொந்து இயல்பட மொழிதலும் கனவு நலிபு உரைத்தலும் கவின்அழி உரைத்தலும் தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டலும் துன்புறல் பாங்கி சொல் எனச் சொல்லலும் அலர்பார்த்து உற்ற அச்சக் கிளவியும் ஆறுபார்த்து உற்ற அச்சக்கிளவியும் காமம் மிக்க கழிபடர் கிளவியும் தன்னுள் கையாறு எய்திடு கிளவியும் நெறிவிலக்கு வித்தலும் குறிவிலக்கு வித்தலும் வெறிவிலக்கு வித்தலும் பிறவிலக்கு வித்தலும் குரவரை வரைஎதிர் கொள்ளுவித்தலும் என உரைபெற வகுத்த ஒன்பதிற் றிரட்டியும் வரைதல் வேட்கை விரி எனப்படுமே |
164 |
2.49 வரைவுகடாதலின் வகை
பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தல் என்று
ஒருநால் வகைத்தே வரைவு கடாதல் |
165 |
2.50 இதன் விரி
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பலும்
அலர் அறிஉறுத்தலும் தாய்அறி உணர்த்தலும் வெறி அச்சுறுத்தலும் பிறர்வரை உணர்த்தலும் வரைஎதிர் உணர்த்தலும் வரையுநாள் உணர்த்தலும் அறிவறிஉறுத்தலும் குறிபெயர்த்து இடுதலும் பகல் வருவானை இரவுவருக என்றலும் பகலினும் இரவினும் பயின்று வருக என்றலும் பகலினும் இரவினும் அகல் இவண் என்றலும் உரவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறலும் ஆறுபார்த்து உற்ற அச்சம் கூறலும் ஆறாத்தன்மை ஆற்றக் கூறலும் காவல் மிக உரைத்தலும் காமம் மிக உரைத்தலும் கனவுநலி உரைத்தலும் கவின்அழி உரைத்தலும் எனமுறை நாடி இயம்பிய இருபதும் வரைவு கடாதல் விரி எனப் படுமே |
166 |
2.51 ஒருவழித்தணத்தல் வகை
செலவு அறிஉறுத்தல் செலவு உடன்படாமை
செலவு உடன் படுத்தல் செலவு உடன் படுதல் சென்றுழிக் கலங்கல் தேற்றி ஆற்றுவித்தல் வந்துழிநொந்துரை என்று எழுவகைத்தே ஒன்றக் கூறிய ஒருவழித் தணத்தல் |
167 |
2.52 இதன் விரி
தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றலும்
மென்சொல் பாங்கி விலக்கலும் தலைவன் நீங்கல் வேண்டலும் பாங்கி விடுத்தலும் தலைவி நெஞ்சொடு புலத்தலும் சென்றோன் நீடலில் காமம் மிக்க கழிபடர் கிளவிவியும் கோல்தொடிபாங்கி ஆற்றுவித்தலும் அவன் வந்தமை உணர்த்தலும் வந்தோன் தன்னொடு நொந்து வினாதலும் வெந்திறல் வேலோன் பாங்கியொடு நொந்து வினாதலும் பாங்கி இறைவியை ஆற்றுவித்திருந்த அருமை கூறலும் என்னும் ஆரிரு கிளவியும் ஒருவழித் தணத்தலின் விரி எனப்படுமே |
168 |
2.53 வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவின் வகை
பிரிவு அறிஉறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன் படுத்தல் பிரிவு உடன்படுதல் பிரிவுழிக் கலங்கல் வன்புரை வன்பொறை வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று ஒருமையிற் கூறிய ஒன்பது வகைத்தே வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவே |
169 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்