திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு
மிகைப் பாடல்கள்
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல், இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று ஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும் ஓவாதே திங்கட்கு உள. (புறத்திரட்டு. 1222) |
1 |
மறைந்து வாழ்பவர்களைப் போல் பகலில் தோன்றலும், இரப்பவர்கள் போல் தேய்ந்து காணப்படுதலும், இரப்பவர்களுக்கு கொடுப்பவர்கள் போல் முகம் ஒளிருதலும், ஆகிய இம்மூன்றும் சந்திரனுக்கு உள்ள இயல்புகளாகும்.
பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும் அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான் திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும், - மூன்றும் பரிந்தாலும் செய்யா பயன். (புறத்திரட்டு.1228) |
2 |
பொருள் இல்லாதவனின் இளமையும், அருள் இல்லாதவனின் அறத்தன்மையும், தெளிவில்லாதவன் பெற்ற கல்வியும், ஆகிய இம்மூன்றினாலும் பயனில்லை.
சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில் மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை உடன்கொண்டு மீளா அரசும், - இம் மூன்றும் கடன் கொண்டார் நெஞ்சில் கனா. |
3 |
ஏர்க் குற்றம் பாரா உழவனும், இன் அடிசில் பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்கு வரும் குற்றம் பாராத மன்னும், - இம் மூவர் இருந்திட்டு என்? போய் என், இவர்? |
4 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், மூன்றும், திரிகடுகம், போல், கீழ்க்கணக்கு, பதினெண், இல்லாதவனின், கல்வியும், அருள், பாரா, குற்றம், உழவனும், இளமையும், பொருள், ஒன்று, தோன்றல், புறத்திரட்டு, ஆகிய, சங்க, ஒருவற்கு