சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
தொழீஇ அட, உண்ணார்; தோழர் இல் துஞ்சார்; வழீஇப் பிறர் பொருளை வவ்வார்; கெழீஇக் கலந்த பின் கீழ் காணார்; காணாய், மடவாய்! புலந்தபின், போற்றார், புலை. |
36 |
தொழுத்தை யடவுண்ணார், தோழரில்லிற் றனியே புக்குறங்கார், பிறர்பொருளை மறந்தாலும் வௌவிக்கொள்ளார், மருவிச்சிலரோடு நட்டபின் கீழ்மைக்குணத்தை யாராயார், மடவாய்! ஆராய்ந்து பாராய்! சிலரோடு பகைத்தபின்பு கீழ்மைக் குணத்தைப் போற்றாது எதிர்த்துக் கெடுப்பார்.
கருத்துரை: இழிவான வேலைக்காரிகள் சமைத்த உணவை யுண்ணல் முதலியவற்றை அறிஞர்கள் செய்யார்.
பொய்யாமை நன்று; பொருள் நன்று; உயிர் நோவக் கொல்லாமை நன்று; கொழிக்குங்கால், பல்லார் முன் பேணாமை, பேணும் தகைய; சிறிய எனினும், மாணாமை, மாண்டார் மனை. |
37 |
பிறர்க்குப் பொய் சொல்லாமை நன்று, பொருளுண்டாக்குத னன்று, பிரிதோ ருயிரையுந் துன்புறுக் கொல்லாமை, நன்று ஆராயுங்கால் தாம், விரும்புவன் பலரறிய விரும்பாமை நன்று. மாட்சிமைப்பட்ட தவசிகள் சிறிதாயினும் மனைவாழ்க்கையின்கண் மீள்கைக்கு மாணா தொழிகை நன்று.
கருத்துரை: பொய்யாமை, கொல்லாமை, பேணாமை முதலியன நன்மை என்பதாம்.
பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார், உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா, யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்,- காக்கையைக் காப்பு அடுத்த சோறு. |
38 |
பண்டாரத்தினையும், பல் கணக்கினையும், கண்காணியையும், தன் கோயிலு ளுறையும் மங்கையரையும், தனகாக்கு முணவினையும் பகுத்து மக்கள் யாக்கைக்குத் தக்க அறிவில்லாதாரையும் தன் தோழரைப் போலக் கொண்டு தேறிக் காக்காவிடின் அக்காவல் காக்கையைச் சோறு காக்கவிட்டதனோ டொக்கும்.
கருத்துரை: பண்டார முதலியவற்றை அறிவில்லார் காக்கவிடின் அக்காவல் சோறு காத்தற் றொழிலைக் காகத்ததிற் கிட்டாற்போலும்.
உடை இட்டார், புல் மேய்ந்தார், ஓடு நீர்ப் புக்கார், படை இட்டார், பற்றேனும் இன்றி நடை விட்டார்,- இவ் வகை ஐவரையும் என்றும் அணுகாரே, செவ் வகைச் சேவகர் சென்று. |
39 |
தமக்கஞ்சி யுடுத்த புடைவையைப் போகவிட்டார், புல்லினைப் பறித்து வாயிலிட்டார், ஓடு நீரின்கட் புக்கார், கைப்படை துறந்தார், மற்றோர்ரணின்றி ஓடமாட்டாது நிலைதளர்ந்திருந்தார் இப்பெற்றிப்பட்ட ஐவரையுமொருநாளும் தீங்கு செய்யச்சென்றணுகார் அறம்பொருள் செய்யுஞ்சேவகர்.
கருத்துரை: உடுக்கை யிழந்தவர் முதலிய ஐவரையும் வருத்தா தொழிதல் வீரர்க்குரிய அறமாம்.
பூவாதாள், பூப்புப் புறக்கொடுத்தாள், இலிங்கி, ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள், யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு, - இவ் ஐவரையும் சாரார், பகை போல் சலித்து. |
40 |
பூப்பில்லாத கன்னியும், பூப்புத் தவிர்ந்தாளும், தவத்திற்புக்க விலிங்கியும், கோலஞ் செய்கை யொருபொழுது மோவாளாகிக் கற்புக்காளாகாத கணிகையும் பிறர்யாவர்க்குரிய மனையாளு முள்ளிட்டிவ்வைவரையுஞ் சாரார் பகைபோல வேறுபட்டு.
கருத்துரை: பூவாத கன்னியையும், பூப்பு நீங்கிய விருத்தமாதையும் தவப்பெண்ணையும் வேசியையும் பிறர் மனையாளையும் அறிஞர் சேரமாட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, நன்று, கருத்துரை, இலக்கியங்கள், சோறு, ஐவரையும், சிறுபஞ்சமூலம், கொல்லாமை, பதினெண், கீழ்க்கணக்கு, பிறர், அக்காவல், இட்டார், புக்கார், சாரார், யார், தக்க, பொய்யாமை, முதலியவற்றை, சங்க, பேணாமை, மடவாய், யாக்கைக்குத், காப்பு