முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.006.திருவெண்காடு
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.006.திருவெண்காடு

7.006.திருவெண்காடு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்.
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
52 |
படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் அடங்க லார்ஊர் எரியச் சீறி மடங்க லானைச் செற்று கந்தீர் விடங்க ராகித் திரிவ தென்னே |
7.006.1 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து, பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி, பகைவரது திரிபுரங்கள் எரிந்தொழியுமாறு வெகுண்டு, அந்நாளிற்றானே அவ்வூரிலுள்ள மூவருக்கு அருள் பண்ணினீர்; கூற்றுவனை முன்னர்க் கொன்று, பின்னர் உயிர்ப்பித்து, அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர்; இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும், தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?
53 |
இழித்து கந்தீர் முன்னை வேடம் தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட அழிக்க வந்த காம வேளை விழித்து கந்த வெற்றி யென்னே |
7.006.2 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், அரி பிரமர்க்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி, அவற்றை விரும்பித் தோள்மேற் கொண்டீர்; 'என்றும் இறவாதபடி காப்பவன்' என்னும் புகழை விரும்பாது, எல்லாப் பொருள்களையும் அழித்தொழித்து, அதன்பின்னர் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினீர்; அங்ஙனமாக, நீர் முன்பு மேற்கொண்ட, மேலான தவத்தினை, தேவர் வேண்டிக்கொண்டமையால் அழித்தற்கு வந்த மன்மதனை, அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்யமாட்டாது பார்த்துக் கொண்டிருக்க. நெற்றிக்கண்ணால் எரித்து, பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது என்?
54 |
படைக ளேந்திப் பாரி டம்மும் உடையோர் கோவ ணத்த ராகி சடைகள் தாழக் கரண மிட்டுத் விடைய தேறித் திரிவ தென்னே |
7.006.3 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், பூதகணங்கள் பலவகையான படைகளை ஏந்திக் கொண்டு உம் திருவடிகளை வணங்கித் துதிக்க. உம் தேவியுடனே. உடையைக் கோவண உடையாக உடுத்துக்கொண்டு, சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் களித்துப் பின்னர், இல்வாழ்க்கை யுடையாரைப் பெருமையாகச் சொல்லி, அவர்தம் இல்லங்களில் பிச்சைக்குத் திரிதல் என்? உமது உண்மை நிலையைச் சொல்லியருளீர்.
55 |
பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர் கண்ணு ளீராய்க் கருத்தில் உம்மைக் மண்ணு ளீராய் மதியம் வைத்தீர் விண்ணு ளீராய் நிற்ப தென்னே |
7.006.4 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், விண்ணுலகத்தில் உள்ளோர் சூழ்ந்து போற்ற ஆங்கு உள்ளீராய் இருந்தும், இம் மண்ணுலகத்தில் பண்களாகியும், அவற்றையுடைய பாட்டுக்களாகியும், அடியார்களது உள்ளத்தில் நிறைந்தும், மக்கள் முதலிய உயிர்களின் கண்களாகியும், உம்மை உள்ளத்தில் நினைபவர், புறத்தேயும் காணும்படி உருவங் கொண்டும் இருத்தல் என்?
56 |
குடமெ டுத்து நீரும் பூவுங் நடமெ டுத்தொன் றாடிப் பாடி வடமெ டுத்த கொங்கை மாதோர் விடம்மி டற்றில் வைத்த தென்னே |
7.006.5 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, அடியார்கள் குடத்தைச் சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக் கொண்டு வந்து உமக்குப் பணிசெய்ய, நீர், உம்மை என்றும் பிரியாது உடனிருத்தற் பொருட்டு, மணிவடம் அணிந்த தனங்களையுடைய மங்கை ஒரு பாகத்தில் இருக்க நடனத்தை மேற்கொண்டு, ஆடலும் பாடலும் நன்கு இயைய ஆடியும் பாடியும் அவர்கட்கு இன்பந் தருவீர்; அவ்வாறிருந்தும், நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது என்?
57 |
மாறு பட்ட வனத்த கத்தின் பீறி இட்ட மாகப் போர்த்தீர் கூறு பட்ட கொடியும் நீருங் வேறு பட்டுத் திரிவ தென்னே |
7.006.6 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர் உம்மொடு மாறுபட்டு நின்ற, காட்டில் வாழப்பிறந்த, வலியகளிற்றை உரித்து, அதன் தோலை, விருப்பம் உண்டாகப் போர்த்தீர்; அன்ன வீரத்தை உடையீராயும், உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும், பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து, நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் என்?
58 |
காத லாலே கருதுந் தொண்டர் பூதம் பாடப் புரிந்து நட்டம் நீதி யாக ஏழி லோசை வேத மோதித் திரிவ தென்னே |
7.006.7 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று, பூதங்கள் பாட, உலகம் உயர்த்துக்கூறுமாறு, நடனத்தை விரும்பி ஆடவல்லீர்; அவ்வாறாகவும், உலகியல் விளங்குதற் பொருட்டு, யோகியர் சூழ, ஏழிசையின்வழி நிலைத்து நின்று, வேதத்தை ஓதித் திரிதல் என்?
59 |
குரவு கொன்றை மதியம் மத்தங் விரவு கின்ற சடையு டையீர் பரவும் என்மேற் பழிகள் போக்கீர் வெருவ வேழஞ் செற்ற தென்னே |
7.006.8 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், 'குரா மலர், கொன்றை மலர், ஊமத்த மலர், பிறை, தனங்களையுடைய நங்கையாகிய கங்கை, பாம்பு' ஆகிய எல்லாம் தலைமயங்கிக் கிடக்கின்ற சடையினை யுடையீர்; யாவர்க்கும் மூத்தீர்; அங்ஙனமாயினும், எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீராதலோடு, உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு, யானையை உரித்துப் போர்த்தது என்?
60 |
மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர் பாடுங் காட்டில் ஆடலுள்ளீர் நாடுங் காட்டில் அயனும் மாலும் வேடங் காட்டித் திரிவ தென்னே |
7.006.9 |
கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், உம்மைத் தௌந்த உள்ளத்துடன் நினைப்பவர் முன்னே, உயர்ந்த மாளிகைகளையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளியுள்ளீர்; என்றாலும், பேய்கள் பாடும் காட்டில் ஆடலை உடையீர்; அதுவன்றியும், அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணுதற்குக் கொண்ட சான்றிடத்து, அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப்பிழம்பாய் நின்ற வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது என்? உம்மையாங்கள் வழிபடுவது எவ்வாறு?
61 |
விரித்த வேதம் ஓத வல்லார் விருத்த னாய வேதன் றன்னை அருத்தி யால்ஆ ரூரன் தொண்டன் தெரித்த வண்ணம் மொழிய வல்லார் |
7.006.10 |
விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற, கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள, யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை, அவனுக்குத் தொண்டனும், அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தொடு சிலவற்றை வினவிச் செய்த, தமிழ்ச்சொற்களாலாகிய மாலை பத்தினையும், அவன் தெரித்துச் சொன்ன குறிப்பில் நின்று பாட வல்லவர், கோட்டம் நீங்கிய உணர்வினையுடையராய். சிவலோகத்தில் இருப்பவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெண்காடு - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சூழ்ந்த, சூழ்வெண், திருவெண்காட்டையுடைய, இறைவரே, தென்னே, வண்ணம், காட்டில், கொண்டு, நின்று, நீரும், கருத்தில், கந்தீர், திருச்சிற்றம்பலம், திருமுறை, போர்த்தீர், நடனத்தை, தனங்களையுடைய, பாகத்தில், கொன்றை, விருத்த, காட்டித், வல்லார், வல்லவர், மாலும், அயனும், பரவும், யாவர்க்கும், பொருட்டு, கொங்கை, என்றும், பின்னர், கொண்டீர், முன்னை, பிச்சைக்குத், திரிவது, சடைகள், மனைகள், உள்ளத்தில், தொண்டர், மதியம், ளீராய், திரிதல், திருவெண்காடு, இருந்தும்