முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.010.திருக்கச்சிஅனேகதங்காவதம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.010.திருக்கச்சிஅனேகதங்காவதம்

7.010.திருக்கச்சிஅனேகதங்காவதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காவதேசுவரர்.
தேவியார் - காமாட்சியம்மை.
94 |
தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு கோனை எரித்தெரி யாடி இடம்குல மானை இடத்ததொர் கையன் இடம்மத ஆனை யுரித்த பிரான திடங்கலிக் |
7.010.1 |
தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையை யுடைய எம்பெருமானும், அழகு விளங்கும், ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும், தீயில் நின்று ஆடுபவனும், மேலானவனும், மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும், மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
95 |
கூறு நடைக்குழி கட்பகு வாயன வேறு படக்குட கத்திலை யம்பல ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக் |
7.010.2 |
மேலைத்தில்லை அம்பலவாணன், குறுநடையையும், குழிந்த கண்களையும், பிளந்த வாயினையுமுடையனவாகிய பேய்கள் உடன் விரும்பி யாடவும் நரிகள் நின்று ஊளையிடவும், சிறப்புண்டாக நின்று ஆடுதலை விரும்புவதும், உயர்ந்த இடபக்கொடியையுடைய எம்பெருமானும், தேவர் பெருமானும், உமாதேவிக்குக் கணவனும், சடையின்கண் கங்கையை யுடைய தந்தையும் ஆகிய அவ்விறைவனுக்கு உரித்தாயதுமாகிய இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண் உள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
96 |
கொடிக ளிடைக்குயில் கூவு மிடம்மயி கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக் செடிகொள் வினைப்பகை தீரும் இடம்திரு தடிக ளிடம்மழல் வண்ணன் இடம்கலிக் |
7.010.3 |
துன்பத்தைக் கொண்ட வினையாகிய பகை நீங்குவதும், நன்மை வளர்வதும், மழுப்படையை யுடைய, விளக்கத்தைக் கொண்ட நீரைச் சடையில் ஏற்ற, பிறைத் துண்டமாகிய கண்ணியை யணிந்த நெற்றியை யுடைய நீலகண்டனும், அழகிய மார்பிடத்தனவாகிய பல அணிகலங்களையுடைய தலைவனும், நெருப்புப் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவனுக்கு உரியதும் ஆகிய இடம், கொடி போலும் மகளிர் பாடல்களுக்கு இடையே குயில்கள் கூவுவதும், அவர் ஆடல்களுக்கு இடையே மயில்கள் ஆடுவதும் ஆகிய ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள. 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
97 |
கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங் மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப் சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள் அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக் |
7.010.4 |
தேனால் நுழைவிக்கப்பட்டனவாகிய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையும், கங்கையையும், பிறையையும் அணிந்த சடையினையுடைய, மேகங்கள் தவழும் மலையில் வளர்ந்த மங்கையும் சிறந்த தேவியுமாகிய உமையை ஒரு பாகத்தில் பொருந்தியிருக்குமாறு மகிழ்ந்து வைத்து உயிர்கட்கு அருள் புரிகின்ற, சங்கக் குழையை அணிந்த காதினின்றும் வெள்ளொளிக் கற்றையாகிய அருவித்திரள் பாய, அவற்றாலும் அவியாத நெருப்புப் போலத் தோன்றுதலையுடைய அங்கையின் மழுவானது இடையறாது ஒளி வீசுகின்ற தன்மையையுடைய இறைவனது இடம், ஆரவாரத்தையுடைய கச்சி மாநகர்க்கண் உள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
98 |
பைத்த படத்தலை ஆடர வம்பயில் சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ் வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக் |
7.010.5 |
ஆடும் பாம்பாகிய ஆதிசேடனது பையின் தன்மையைப் பெற்ற படத்தினையுடைய தலையின்கண் நீங்காதிருக்கின்ற இடமாகிய நிலவுலகத்தில் வாழப்புகுவோர், தமதுள்ளத்தை ஒரு நெறிக்கண்ணே வைத்தபொழுது, அவர்க்கு உயர்ந்து விளங்குவதும், திருவாளனாகிய சிவபிரானது திருவடிக் கண்ணே பிறழாது வைத்த மனத்தையுடையவராகிய அடியார். தம் மனம், விரும்பிக் கொள்ளுமாறு அதனுள் இருத்தப்பட்டதும், மழுப்படையையுடைய தலைவனும், நெருப்புப்போலும் நிறத்தையுடையவனும் ஆகிய அப்பெருமானுக்கு உரித்தாயதும் ஆகிய இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
99 |
தண்ட முடைத்தரு மன்தமர் என்தம பிண்ட முடைப்பிற வித்தலை நின்று கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த தண்ட முடைப்பெரு மான திடங்கலிக் |
7.010.6 |
தண்டாயுதத்தை யுடைய இயமனது ஏவலாளர், என் சுற்றத்தாராகிய சிவனடியாரை நலியக் கருதும் வலிய துன்பத்தைத் தீர்ப்பதும், உடம்பை யுடைய இப்பிறவியின்கண் மனம் பொருந்தி நின்று நினைப்பவரது பிறவியை அறுப்பதும், தனது கண்டம் உடைத்தாயுள்ள கரிய நஞ்சினை, உண்ணும் பொருளாக உண்ட தலைவனும், ஏழு கடல்களின் உள்ளே உள்ள நிலமேயன்றி அண்டம் முழுவதையும் உடைய பெரியோனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாயதும் ஆகிய இடம், ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
100 |
கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற் மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு அட்ட புயங்கப் பிரான திடங்கலிக் |
7.010.7 |
பாசப் பிணிப்பால் உண்டாகும் திரிபுணர்வை நீக்கியவர், கைகுவித்துக் கும்பிட்டுத் துதிப்பதும், இடபவாகனத்தை யுடையவனும், அட்டமா நாகங்களையும் அணிந்தவனுமாகிய இறைவனுக்கு உரித்தாயதுமான இடம், பகலவனது ஒளியினின்று நீங்கியதும், குயிற் பேடை தனது சேவலோடு கூடி விளையாடுவதும் ஆகிய சோலைக் கண் ஒப்பற்ற மாதவியில் தேன் ததும்பி மலர்ந்த மலர், மணத்தைப் பொருந்துகின்ற, ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண்ணுள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
101 |
புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர் வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங் கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல் அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக் |
7.010.8 |
'முன்பே அடையப் பட்டவனைக் கடைபோகத் தொழுது உய்வோம்' என்று நினையாது, புத்தனது பொய்யுரையால் மயங்கிய அசுரரது அரண்கள் மூன்றினையும் சாம்பலாக்கிய வில்லை யுடையவனும், யாவரிடத்தும் கண்ணோடாது உயிரை வெளவும் கொடிய காலனை அழிந்தொழியும்படி காலால் கொன்றவனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாய இடம், குளிர்ந்த வனமல்லிகை, முல்லை, குரா, மகிழ், குருக்கத்தி, புன்னை இவற்றின் மலர்களது அகவிதழில் பெண் வண்டுகள் உறங்குகின்ற, ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகரில் உள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
102 |
சங்கை யவர்புணர் தற்கரி யான்றள மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை மங்கைய வன்னன லேந்து பவன்கனல் தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக் |
7.010.9 |
ஐயப்பாடுடையவர் அடைதற்கரியவனும், முல்லையரும்புபோலும் நகையினை யுடையாளாகிய, என்றும் பிரிவில்லாத, மிக்க புகழை யுடைய உமாதேவி மகிழும்படி சுடு காட்டில் நின்று நடனமாடுகின்ற சங்கரனும், எம் அங்கைப் பொருளாய் உள்ளவனும், நெருப்பை ஏந்துபவனும், நெருப்பிற் பொருந்தியுள்ள ஒளிபோலும் ஒளியை யுடைய பெரிய மழுப் படையை ஏந்திய அங்கையை யுடையவனும் ஆகிய இறைவன் நீங்காது உறைகின்ற இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க் கண் உள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலே.
103 |
வீடு பெறப்பல ஊழிகள் நின்று பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு பாடு மிடத்தடி யலான்புகழ் ஊரன் கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக் |
7.010.10 |
முத்தி பெறுதற் பொருட்டுப் பல்லூழி கால மாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும், அதனால் வினைநீங்கப்பெறும் இடமும், பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று, அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவிக் கடலில் வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய, ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, 'திருவனேகதங்காவதம்' என்னும் திருக்கோயிலைப் பாடப் புகும் பொழுது, சிவபிரானுக்கு அடியவனாகிய, புகழையுடைய நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார் அடையும் இடம், சிவபிரானது இடமே யாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கச்சிஅனேகதங்காவதம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அனேகதங், காவதமே, நின்று, என்னும், திருவனேகதங்காவதம், திருக்கோயிலே, ஆரவாரத்தையுடைய, கச்சிமாநகர்க்கண், இடங்கலிக், இறைவனுக்கு, யுடையவனும், விரும்பி, கச்சிமா, திடங்கலிக், இடமும், தலைவனும், வண்டுகள், போலும், சிவபிரானது, ஆரவாரத்தை, உரித்தாயதும், நெருப்புப், அணிந்த, இடம்திரு, எம்பெரு, இறைவன், பெரியோனும், திருச்சிற்றம்பலம், திருக்கச்சிஅனேகதங்காவதம், எம்பெருமானும், வாளுடைய, திருமுறை, வண்ணன்