முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.086.திருவாலம்பொழில்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.086.திருவாலம்பொழில்
6.086.திருவாலம்பொழில்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆத்மநாதீசுவரர்.
தேவியார் - ஞானாம்பிகையம்மை.
2937 | கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய |
6.086.1 |
எல்லாவற்றிற்கும் முதல் ஆனவனும், நுதலிடத்துக் கண் பெற்றவனும், பிரமனது தலையை அரிந்து, அரிந்த அத்தலை ஓட்டை விரும்பிக் கொண்டவனும், அழகிய உமையம்மை விளங்கும் உடலின் ஒரு கூற்றை உடையவனும், உயிர்களுடைய உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அவ்வுணர்வுகளை உணர்த்தும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழியில் மன்னும் எம்பெருமானும், மறைக்காட்டிலும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மையுடையவனும் ஆகும், தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழில் சிவபெருமானை, நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக.
2938 | உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத் பரித்தானைப் பவளமால் வரையன் னானைப் சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய |
6.086.2 |
களிற்றின் தோலை உரித்தவனும், அத்தோலைப் போர்வையாகவும், புலியின் தோலை உடையாகவும், உடையவனும், சடைமேல் கங்கையைத் தரித்தவனும், அழகிய கையிடத்து உருவத்தழலை ஏந்தியவனும், ஆலகால விடத்தை அமுது செய்தவனும், இக்கோலத்தையெல்லாம் மேற்கொண்டு நின்றவனும், பவளப் பெருமலையன்னவனும், ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு திருமாலுக்கு அன்று சக்கராயுதத்தை வழங்கி மகிழ்ந்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக.
2939 | உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக் கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய |
6.086.3 |
அயன், அரி, அரன் என்னும் நிலைகளால் மூவுருவாகியும் உண்மையை உணருமிடத்து அம்மூவுருவம் ஓருரு ஆனவனும், ஓங்காரத்தின் மெய்ப்பொருளாய்த் திகழ்பவனும், உடம்பின் உள்ளே கருவாய்த் திகழும் மனம் எண்ணும் வஞ்சனையான கொடிய எண்ணங்களை அறிபவனும், இயமனைக் கழலணிந்த தன் திருவடியால் உதைத்து மாணியாகிய மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த பெறுதற்கரிய அமுது அன்னவனும், தேவர்களுக்குத் தலைவனும் அன்புமிகப் பெருகி எம்பெருமானே என்று விளித்து அடி அடைவார்க்கு என்றும் நன்மைகளை உண்டாக்குபவனும் ஆகிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவபெருமானை நெஞ்சே இடைவிடாது சிந்திப்பாயாக.
2940 | பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம் தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை வாரமதாம் அடியார்க்கு வார மாகி சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய |
6.086.4 |
முழுப்பூமியும், விசும்பும், பாதாளமும் ஆகிய மூவுலகங்களாய் நின்ற மிக மேலானவனும், வண்டுகள் மொய்க்கும் குழலினையுடைய உமையம்மையைப் பாகத்திற்கொண்ட ஆரமுதம் போன்றவனும், அழகிய தில்லையிடத்து ஆடும் கூத்தனும், வாட் போக்கித் திருத்தலத்துத் தலைவனும், எம் தலைவன் என்று பாராட்டி அன்பு கூரும் அடியார்பால் அன்புடையவனும், வஞ்ச மனத்தார்க்கு என்றும் வஞ்சனும், சிறந்த அரசனும் ஆம் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2941 | வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப் திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய |
6.086.5 |
மலையில் தங்கி வளர்ந்த இளமங்கையைப் பங்கில் ஏற்றவனும் தேவர்க்குத் தேவனும், மணி போன்றவனும், முத்து அனையானும், அரையிற் பொருந்திய புலித்தோல் மேல் பாம்பைக் கட்டிய தலைவனும், அடியார்க்கு என்றுந் தலைவனாய் நின்று அருளுபவனும், வெள்ளிதாய் உயர்ந்த கோவணத்தை அணிந்த புனிதனும், பூந்துருத்தி வாழ்வானும், புகலூரானும் ஆகும், அலை எழும் நீர்நிலைகளை உடைய தென்பரம்பைக்குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2942 | விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும் தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய |
6.086.6 |
படைப்புக் காலத்து விரிந்தவனும், அழிப்புக் காலத்துக் குவிந்தவனும், வேதத்தின் வித்தானவனும், பரந்த பிறப்பும் இறப்பும் ஆகி நின்றவனும், சலந்தரன் உடல் இருகூறாய் வேறாக அரிந்தவனும், ஆழ்கடலிலிருந்து தோன்றிய நஞ்சையுண்டு இமையோரெல்லாரும் உய்ய அருள்புரிந்தவனும், பலவாகிய அசுரர்கள் வாழ்புரங்கள் மூன்றையும் பாழ்படுத்தற்கு மலையாகிய வில்லில் பாம்பாகிய நாணை ஏற்றித் திருமாலாகிய அம்பைத் தெரிந்து எய்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2943 | பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப் எல்லாருந் தன்னை யிகழ அந்நாள் சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத் செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத் |
6.086.7 |
குற்றமிக்க என்னுடம்பில் புகுதற்பொருட்டு என் உடம்பின் புறத்தே நின்று பலகாலும் ஆராய்ந்து குற்றங்களைந்து தூய்மை செய்த புனிதனும், தாருகாவனத்து முனிவர் எல்லாரும் தன்னை இகழ, அந்நாள் அவரகத்தார் இடுபலி என்ற ஒன்றை முன்னிட்டுக் கொண்டு அங்கே திரிந்தவனும், தன்னைப் புகழாதாரைத் தான் என்றும் நினையாதவனும், இடைவிடாமல் தன் பொன்னடிகளையே விரும்பி ஒழுகுவாரை மற்றவர் செல்லாத ஞான நெறியிலே செலுத்த வல்லவனும் ஆகும் திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2944 | ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப் பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப் சிந்திய வெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத் |
6.086.8 |
ஐந்தலைப் பாம்பாகிய படுக்கையில் கிடந்த திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாத தலைவனும், பந்து பொருந்தும் மெல்லிய விரலினளாகிய பார்வதியைப் பாகமாகக் கொண்டவனும், பராய்த்துறையிலும், வெண்காட்டிலும் பயின்று நிற்பவனும், ஓட்டைகளுடைய வெள்ளிய தலையில் பிச்சை ஏற்பவனும், பூவணத்தும் புறம்பயத்தும் பொருந்தி நிற்பவனும், துன்புறுத்திய எம் கொடுவினைகளைத் தீர்ப்பவனும் ஆகிய திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
2945 | கையிலுண் டுழல்வாருஞ் சாக்கியருங் பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப் கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக் செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய |
6.086.9 |
கையில் உணவை ஏற்று உண்ணும் சமணரும் சாக்கியரும் ஆகிய கல்விப்பயனடையாத வலிய மூடர்க்கு நல்லன் அல்லனும், நெஞ்சில் கரவு இல்லாதார்க்குக் கரவாது வெளிநின்று அருள்பவனும், பூணாக அணிகின்ற நாகமே நாணாகவும், மலையே வில்லாகவும், அக்கினிதேவனும் வாயுதேவனும் கையிற் பொருந்திய அம்பினுடைய ஈர்க்கும் கோலுமாகக் கொண்டு கொடிய தவத்தைச் செய்து வரங்களைப் பெற்ற அசுரர்களுடைய நெடிய புரங்கள் மூன்றையும் நெருப்பில் வீழ்த்தவனும், வயல்கள் நிரம்பிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாலம்பொழில் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நெஞ்சே, தென்பரம்பைக், சிந்தி, பொழிலானைச், சிவபெருமானை, சிந்திப்பாயாக, சார்ந்த, குடியின், குடியைச், இடைவிடாமல், மேயதிருவாலம், திருவாலம்பொழிற், தலைவனும், திருவாலம், இடைவிடாது, கொண்டு, ஆனவனும், என்றும், புனிதனும், பொருந்திய, நின்று, புரங்கள், நிற்பவனும், தன்னைத்திருவாலம், கிடந்த, பாம்பாகிய, புனிதன், பொருந்தி, மூன்றையும், நின்றவனும், கொண்டவனும், நின்றான், திருச்சிற்றம்பலம், திருமுறை, உடையவனும், திருவாலம்பொழில், அடியார்க்கு, பொழிற், உடம்பின், போன்றவனும்