முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.076.திருப்புத்தூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.076.திருப்புத்தூர்

6.076.திருப்புத்தூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புத்தூரீசர்.
தேவியார் - சிவகாமியம்மை.
2840 | புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண் விரிந்துபல வுயிராகி விளங்கி னான்காண் தெரிந்துமுதற் படைத்தோனைச் சிரங்கொண்டோன்காண் திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில் |
6.076.1 |
தேவர்கள் விரும்பித்துதித்து வணங்கும் புகழுக்கு உரியவனும், போர்த்தொழில்வல்ல இடப ஊர்திக்குத் தலைவனும், உலகங்கள் ஏழுமாகிப்பல உயிரும் ஆகி விளங்கியவனும், மணமிக்க கொன்றைக் கண்ணியை உடையவனும், வேதம் நான்கையும் உணர்ந்து முற்படப் படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரமனதுசிரத்தைக் கொய்தவனும், குற்றமற்றவனும், திருமாலைஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிப் பண்படுத்தப் பட்டவயல்கள் நாற்புறமுஞ் சூழ விளங்கும் திருப்புத்தூர்த்திருத்தளியில் திகழுஞ் சிவபெருமான் என்சிந்தையில் என்றும் நீங்காமல் நிற்பவன் ஆவான்.
2841 | வாராரும் முலைமங்கை பாகத் தான்காண் கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங் காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண் தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில் |
6.076.2 |
கச்சணிந்த முலையினையுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் பெரிய வேதங்கள் ஆனவனும், நிலமும் விண்ணும், வெம்மைமிகு தழலும் காற்றும் நீரும் உயர்மலையும் ஆயவனும், கொடிய நஞ்சையுண்டுகறுத்த கண்டத்தவனும், எண்டோளினனும், கயிலைமலையாகிய பொருப்பைத் தன் வாழிடமாகக் கொண்டவனும் ஆகித்தேரோடும் நெடுவீதிகளையுடைய திருப்புத்தூர்த் திருத்தளியில் என்றும் விருப்போடு விளங்கும் சிவ பெருமான் என்சிந்தையிலே என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான்.
2842 | மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில் |
6.076.3 |
மின்னலும் கொடியும் போன்ற இடையினையுடைய உமையம்மையால் என்றும் விரும்பப்படும் கேள்வனும், மலையாகிய வலிமைமிக்க வில்லை வளைத்த கையினனும், நல்ல பாட்டுக்களையாக்க வல்ல புலவனாய்ச் சங்கம் போந்து நல்லபொற் கிழியைத் தருமிக்கு அருளியவனும் ஆகி, மணமிக்ககொன்றை மலர் பொன்னின் வனப்பைக் காட்ட, அருகேநின்ற மேட்டு நிலக் காந்தள் கைகளின் வடிவினைக்காட்ட, இவற்றைக் கண்டு வண்டு இசைபாடும் முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய வளமிக்க திருப்புத்தூர்த் திருத்தளியில் விளங்கும் சிவபெருமான் என் சிந்தையில் என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான்.
2843 | ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும் தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந் மாடேறி முத்தீனுங் கானல் வேலி சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில் |
6.076.4 |
இதழ்கள் நிறைந்த தாமரைமலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் இந்திரனும், பணிந்து துதிக்கும் வண்ணம் இருப்பவனும், இதழ்களையுடையகொன்றை, வன்னி, ஊமத்தை ஆகிய மலர்கள் செறிந்த செஞ்சடையினனும், குற்றமற்ற சங்கம் பக்கத்தே ஏறிமுத்தை ஈனும் கடற்கரையை எல்லையாக உடைய மறைக்காட்டில்வாழ் மணியும் ஆகி, வளவிய பயிர்களை மேயும் எருமைகரை மீது ஏறி நீர் நிலையில் படியும் திருப்புத்தூர்த்திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என்சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான்.
2844 | கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண் பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும் தருமருவு கொடைத்தடக்கை யளகைக் கோன்றன் திருமருவு பொழில்புடை சூழ்திருப்புத் தூரில் |
6.076.5 |
பிறப்பைப் பொருந்துவதற்கு ஏதுவாகிய வலிய வினை நோயை நீக்கியவனும்,விருப்பம் வருதற்குரிய பொலிவுடன் விளங்கும் கச்சிஏகம்பனும், நிலையாமைப் பெருமை மேவும் பெரிய நிலவுலகில் பொருந்தும் பிணிகளைத் தீர்க்கும் குளிர்ச்சிமிக்க பெரும் பற்றப் புலியூர் மன்றாடியும், கற்பகத்தருப் போலக் கொடுக்கும் பெருமை மிக்க கையினையுடைய அளகைக் கோன் ஆகிய குபேரனுக்கு மிக்க நண்பனும், ஆரூரில் அமர்ந்த ஒப்பற்ற யானையும் ஆகித் திருப்புத்தூர்த்திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என்சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான்.
2845 | காம்பாடு தோளுமையாள் காண நட்டங் பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண் தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில் |
6.076.6 |
மூங்கில் போன்ற தோளுடைய உமையம்மை காணுமாறு பல கூத்து விகற்பங்களையும் கலந்து ஆடியவனும், சீற்றம்மிக்க பாம்பு கையிற் கங்கணமாய்ப் பொருந்தி ஆடத் தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும், பவளத்தால் ஆன பெரிய மலை போன்ற வடிவினனும், கயிற்றால்பிணித்தற்குரிய சினமிக்க இடபத்தையே யானை எனமதிக்கத்தக்க ஊர்தியாகக் கொண்ட சங்கரனும், பொங்கும் சினப் பாம்பையே அரைப்பட்டிகையாகப்புனைந்தவனும் ஆகி நீர்ச் சேம்புகள் நிறைந்த வயல்கள்நாற்புறமும் சூழ்ந்த திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான்.
2846 | வெறிவிரவு மலர்க் கொன்றை விளங்கு திங்கள் பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண் செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில் |
6.076.7 |
மணம்நாறும் கொன்றை மலரையும் விளக்கமுடைய திங்களையும் வன்னியையும் விரிந்த சடைமேல் சூடியவனும், புள்ளிகள் பொருந்திய கோபிக்கும் நாகத்தையும், எலும்பினையும் அணியாகப் பூண்டவனும், போர்க்குணமுடைய புலியினது தோலை ஆடையாகக் கொண்டவனும், அறிதற்கரிய நுண்பொருள்களாய் ஆனவனும், ஆயிரம் பேர் உடையவனும் ஆகி, அழகியதும், குளிர்ந்ததும் ஆகிய கடற்கரையிடத்தே நெருங்கிவிளங்கும் பொழில்கள் சூழ்ந்ததும், வரிசையாயமைந்த மாடங்களை உடையதுமாகிய திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான்.
2847 | புக்கடைந்த வேதியற்காக் காலற் காய்ந்த மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண் அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை திக்கணைந்து வருமருங்கின் திருப்புத் தூரில் |
6.076.8 |
தன்பால் அடைக்கலம்புக்க வேதியன் மார்க்கண்டேயனுக்காக இயமனைக் கோபித்துக் கொன்ற புண்ணியனும், வெள்ளிய பற்களையும் வெள்ளிய வளையல்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறுசினம் மிக்கு எதிர்த்த யானை நடுங்க அதன் தோலை உரித்தவனும், வெள்ளிய மதிப்பிறையைத் தலையில்தரித்து அருளியவனும், மன்மதன் வில்லாகக் கொள்ளுதற்கு வாய்ப்புடைய அக்கரும்பும், பெருமைமிக்க புன்னையும் நெருங்கிய சோலைமிக்க ஆரூர்க்கு அதிபதியும் ஆகி,மெல்லிதாய்க் குளிர்ந்த தென்றல் வடக்குத் திக்கினை அணையவரும் இடத்தில் உள்ள திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்றுநிலவுபவன் ஆவான்.
2848 | பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும் கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம் செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில் |
6.076.9 |
அண்டினார்க்குத்துணையானவனும், தேவர்க்கும் மற்றையவர்க்கும் அவரின் வேறுபட்டு மேலானவனும், அவரோடு கலந்து நின்று அவரைப் போலக் கீழானவனும், தக்கனது வேள்வியை அழித்த வெற்றியினனும், கொடிய சினத்தை முற்றிலும் அழித்தவனும், ஞானத்தை மேன்மேலும்வளரச் செய்தலைத் தன்கொள்கையாகக் கொண்டவனும், அருவி விளங்கும் கழுக்குன்றில் யாம் வணங்கும் தலைக்கோலம் உடையவனும், மிக்க எழில் படைத்த மன்மதனை விழித்து அழித்தவனும், ஆகி, புகழ்மிக்க திருப்புத்தூர்த்திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான்.
2849 | உரம்மதித்த சலந்தரன்தன் ஆகங் கீண்ட வரம்மதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண் அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில் |
6.076.10 |
தனது வலியைப் பெரிதாகமதித்த சலந்தரனின் உடலைப் பிளந்த ஒப்பற்ற ஆழியைப் படைத்தவனும், உலகினைச் சூழவருவோனாய் எல்லாராலும் மேலாக மதிக்கப்பட்ட சூரியனுடைய பல்லைப் பறித்தவனும், இந்திரனுடைய புயத்தை நெரித்த வன்மை யுடையவனும், பாம்பினைச் செம்பொன் ஆரமாகவும் பூணாகவும் மதித்து அணிந்தவனும், அலைகடல் சூழ் இலங்கைக்கு இறையாகிய இராவணனுடைய சிரங்களை நெரியச் செய்த சேவடியினனும் ஆகி, திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புத்தூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்றும், சிந்தை, திருப்புத், காண்அவனென், சிவபெருமான், தூரில்திருத்தளியான், திகழும், நின்று, விளங்கும், திருத்தளியில், சிந்தையில், நிலவுபவன், திருப்புத்தூர்த், கொண்டவனும், உடையவனும், வெள்ளிய, நீங்காமல், ஒப்பற்ற, ஆரூரில், பெருமை, உமையம்மை, கொன்றை, அழித்தவனும், அந்தண், திருமுறை, கலந்து, வணங்கும், திருப்புத்தூர், ஆனவனும், காற்றும், புலவனாய்ச், சங்கம், என்சிந்தையில், நிறைந்த, அருளியவனும், திருச்சிற்றம்பலம்