முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.065.திருவேகம்பம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.065.திருவேகம்பம்

6.065.திருவேகம்பம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
2736 | உத்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண் தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந் எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.1 |
பார்வதி கண்டு அச்சத்தால் தளருமாறு, வலிய யானையின் தோலை உரித்தவனாய், ஓங்காரத்தால் உணர்த்தப்படுகின்ற பரம் பொருளாய் மெய்ஞ்ஞானத்தை விரித்தவனாய், நான்கு வேதங்களையும் ஓதுபவனாய், உலகில் பல உயிர்களையும் ஊழ்வினைப்படி படைத்தவனாய், எங்கும் சிறுதெய்வங்களாகவும் தோன்றிப் பரந்திருப்பவனாய், முப்புரங்களும் சாம்பலாகுமாறு வில்லால் எரித்தவனாய், அழகு நிறைந்த சோலைகள் நிரம்பிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்தில் உள்ளான்.
2737 | நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண் ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.2 |
அடியார்க்கு அன்பனாய், தன்னிடம் அன்பு இல்லாத கீழ்மக்களை நினைத்துக் கூசி அகல்பவனாய், தன்னை வணங்குதற்கு நாணாதவர் மனத்தின் கண் எளிமையாய்த் தங்கும் இளையவனாய், அழகிய மணம் கமழும் கொன்றையை அணிந்தவனாய், பார்வதி பாகனாய், தேவர்கள் எப்பொழுதும் வணங்கித் துதிக்கும் எழிலாரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2738 | பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் தான்காண் பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.3 |
பூமி முதலிய எழு உலகங்களையும் தாங்கி, மேம்படும் பாரத்தைச் சுமப்பவனாய், புண்ணியனாய், தாமரையில் உறையும் வேதா எனப்படும் பிரமனாய், அவனைப்படைத்த திருமாலாய், நீண்ட சடையில் பாம்போடு பிறையைச் சூடியவனாய், பிறையைப் போன்ற பற்களையும் பிளந்த வாயையும் உடைய பேய்களோடு சுடுகாட்டில் இரவில் கூத்து நிகழ்த்தும் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2739 | பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண் சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ் பேரவன்காண் பேரா யிரங்க ளேத்தும் ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.4 |
பூமியாய், வானமாய், வெள்ளத்தை உடைய கடலாய், பனி உறையும் மலைகளாய், இரவாய்ப் பகலாய் உள்ள சிறப்பை உடையவனாய், திசைகளாய், திசைகள் எட்டின் கண்ணும் செறிந்தவனாய், அடியவர்கள் சிறப்பாகத் தியானிக்கும் பெயர்களை உடையவனாய், ஆயிரம் பெயர்களால் போற்றப்படும் பெரியவனாய், அடியார் அல்லார்க்குக் கிட்டுதற்கு அரியவனாய், காளையை இவரும் அழகினை உடையவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2740 | பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண் மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண் அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.5 |
பெரிய தவக்கோலத்தையும், தலைக்கோலத்தையும் உடையவனாய்ப் பிறையைச் சூடியவனாய், அடியேனுடைய துன்புறுத்தும் நோயைத் தீர்க்கும் மருந்தாய், மந்திரங்களாய், தேவர்கள் வணங்கும் பெருந்தேவனாய், மிக்க தவத்தை உடைய பார்வதி பாகனாய், தேவர்கள் அர்ச்சனை செய்து துதிக்குமாறு இருப்பவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2741 | ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்கம் ஆறும் காய்ந்தவன்காண் கண்ணழலாற் காமன் ஆகங் பாய்ந்தவன்காண் பண்டுபல சருகால் பந்தர் ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.6 |
அரிய வேதங்களையும், ஆறு அங்கங்களையும் ஆராய்பவனாய், படம் எடுத்து ஆடும் பாம்பு, எலும்பு, ஆமை இவற்றை அணிந்தவனாய், கண்ணிலிருந்து புறப்பட்ட தீயினால் மன்மதனுடைய உடம்பை எத்தவனாய், வெகுண்டெழுந்த கூற்றுவனுடைய உடம்பு அழியுமாறு காலால் பாய்ந்தவனாய், ஒரு காலத்தில் பல சருகுகளைத் தன் வாயிலிருந்து வெளிப்படும் நூலால் இணைத்துத் தனக்கு நிழல் தரும் பந்தலை அமைத்த சிலந்திக்கு நாட்டை ஆளும் செல்வத்தை ஈந்தவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2742 | உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண் இமய வடகயிலைச் செல்வன் தான்காண் சமயமவை யாறினுக்குந் தலைவன் தான்காண் இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.7 |
பார்வதி பாகனாய், மகிழ்ந்து கங்கையைச் சடையில் ஒடுக்கியவனாய், இமயமலையில் உள்ள வடகயிலை மலையில் உறையும் செல்வனாய், வீடுகள் தோறும் பிச்சைக்கு அலையும் வறியவனாய், ஆறுவகை வைதிகச் சமயங்களுக்கும் தலைவனாய், மெய்ப்பொருளாய், உயர்வற உயர்நலம் உடையவனாய்த் தனக்குத்தானே நிகராகும் தேவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2743 | தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண் உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண் வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண் எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.8 |
அடிமை செய்யும் அடியார் துயரங்களைத் தீர்ப்பவனாய், தூய மலர்போன்ற திருவடிகளை உடைய, எம் சோதி வடிவினனாய், உண்டவிடத்தைக் கழுத்தில் ஒடுக்கியவனாய், கடலிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தைத் தேவர்களுக்கு உதவியவனாய், வண்டுகள் பொருந்தும் கொன்றை மலர் மாலையனாய், ஒளி பொருந்திய சந்திரனும் விண்மீன்களும் ஆயினவனாய், எட்டுத் திசைகளிலும் அழகு நிறைந்த பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2744 | முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண் தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.065.9 |
யாவரினும் முற்பட்டவனாய், மும்மூர்த்திகளிலும் வேறுபட்டு, அவர்கள் தோற்றத்துக்குக் காரணனாய், முத்தலைச் சூலம் ஏந்தியவனாய், முருகனுக்கும் யானைமுகத்தானாகிய விநாயகனுக்கும் தந்தையாய், பணிந்து தன் திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்கு அவர்கள் சிந்தையில் அகப்படுபவனாய், புறப்பொருள்கள் மாட்டுச் செல்லாத உள்ளத்தாருக்கு இன்பவடிவினனாய், செங்கண்ணனாகிய திருமாலைக் காளையாகக் கொண்டு இவரும் எம் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2745 | பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் தான்காண் தன்னிசைய வைத்தஎழி லரவி னான்காண் மின்னிசையும் வெள்ளெயிற்றோன்வெகுண்டு வெற்பை இன்னிசைகேட் டிலங்கொளிவா ளீந்தோன் கச்சி |
6.065.10 |
பொன்போன்ற ஒளிவீசும் முறுக்கேறிய சடையை உடைய எம் தூயோனாய், பூதகணத் தலைவனாய், புலித்தோலாகிய ஆடையின் மேல் இறுக்கிச் சுற்றிய அழகிய பாம்பினை உடையவனாய், காதில் சங்கினாலாகிய குழையை அணிந்த திறமை உடையவனாய், மின்னலைப் போல ஒளி வீசும் வெள்ளிய பற்களை உடைய இராவணன், கோபம் கொண்டு கயிலை மலையை அசைக்கத் தன் திருவடி அவனை நசுக்க, பின்னர் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட இனிய இசையைக் கேட்டு, அவனுக்குச் சந்திரகாசம் என்ற வாளினை வழங்கிய கச்சி ஏகம்பன் என்எண்ணத்திலுள்ளான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேகம்பம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஏகம்பன், எழிலாரும், காண்அவன்என், எண்ணத், கச்சிஏகம்பன், பொழிலார், எண்ணத்தானே, பொழில், உடையவனாய், பார்வதி, தலைவனாய், தேவர்கள், உறையும், பாகனாய், அவர்கள், அடியார், கொண்டு, பகலாய், இவரும், வணங்கும், திருவடிகளை, வெளிப்பட்ட, வாயிலிருந்து, ஒடுக்கியவனாய், சடையில், எப்பொழுதும், திருச்சிற்றம்பலம், நிறைந்த, வேதங்களையும், அணிந்தவனாய், திருவேகம்பம், பிறையைச், உமையாள், தாங்கி, திருமுறை, சூடியவனாய்