முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.012.திருவேகம்பம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.012.திருவேகம்பம்

2.012.திருவேகம்பம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
1590 | மறையானை
மாசிலாப் புன்சடை மல்குவெண் பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத் துறைவானை யல்லதுள் காதென துள்ளமே. |
2.012. 1 |
வேதவடிவினன், குற்றமற்ற சிவந்த சடையிற் பொருந்திய வெண்பிறையினன். பெண்ணும் ஆணுமாகிய பெருமான் எல்லாப் பொருள்களிலும் உறைபவன். அழகிய கச்சிப்பதியில் திருஏகம்பம் என்னும் கோயிலில் உறைபவன். அத்தகையோனை அல்லது என் உள்ளம் பிறவற்றை நினையாது.
1591 | நொச்சியே
வன்னிகொன் றைமதி கூவிளம் உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான் கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே. |
2.012. 2 |
நொச்சியிலை, வன்னிஇலை, கொன்றை மலர் பிறைமதி, வில்வம் ஆகியவற்றை முடியிற்புனைந்துள்ளமை அவன் அடையாளமாகும். விடைஊர்தியை உடையவன் அவன். கச்சியில் திருவேகம்பத்தில் எழுந்தருளிய அக்கறைக்கண்டனை விரும்பித் தொழுவீர்களாக. உம்மேல் வரும் வினைகள் மெலியும்.
1592 | பாராரு
முழவமொந் தைகுழல் யாழொலி சீராலே பாடலா டல்சிதை வில்லதோர் ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச் சேராதா ரின்பமா யந்நெறி சேராரே. |
2.012. 3 |
உலகிற் பொருந்திய முழவம், மொந்தை, குழல், யாழ் ஆகியவற்றின் ஒலியோடு முறையான பாடலும் ஆடலும் குறையாத அழகிய கச்சி ஏகம்பத்து எம்மானைச் சேராதவர் இன்பமான நெறிகளைச் சேராதவர் ஆவர். நும் வினை-உங்கள் கர்மம், மேல்வினை-ஆகாமியம்.
1593 | குன்றேய்க்கு
நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய் மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள் மின்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம் சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே. 4 |
2.012.d |
குன்றுகள் போன்று உயர்ந்த சுதைமாடங்களில் கட்டிய கொடிகள் கூடிச் சென்று மின்னல்கள் உராயும் முகில்களைத் தோயும் விரிந்த கச்சிப்பதியில் பலவாறு மன்றுகளில் புகழப்படும் சீர்மையை உடையவன் எழுந்தருளிய திருஏகம்பத்தை அடைந்து மனம் பொருந்த வழிபாடு செய்யும் அடியவர்கள்மேல் வினைகள் சேரா.
1594 | சடையானைத்
தலைகையேந் திப்பலி தருவார்தம் கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள் புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம் உடையானை யல்லதுள் காதென துள்ளமே. |
2.012. 5 |
சடைமுடியை உடையவனும், தலையோட்டைக் கையில் ஏந்திப் பலியிடுவார் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் உடல் பொருள் ஆவி ஆகியவற்றைக் கொண்டவனும் ஆகிய ஆரவாரம் நிறைந்த கச்சிப் பதியில் பொன்னிறமலர்கள் மலரும் கம்பை நதிக்கரையில் விளங்கும் திருஏகம்பம் உடையானை அல்லது பிறரை எனது உள்ளம் விரும்பாது.
1595 | மழுவாளோ
டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங் கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம் தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே. |
2.012. 6 |
மழுவாள் அழகிய சூலம் ஆகிய படைகளை ஏந்தியவர். தம்மிடம் பொருந்திய ஒளியுடையவர். இமயமலையின் உச்சியில் உறைபவர். உமையம்மை கங்கை ஆகியோருடன் கூடி அவர் எழுந்தருளிய பெருகும் புகழ் பொருந்திய ஏகம்பத்தைத் தொழுபவரே விழுமியோர் ஆவர். அவரை வினைகள் அணுகா.
1596 | விண்ணுளார்
மறைகள்வே தம்விரித் தோதுவார் கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத் தண்ணலா ராடுகின் றவலங் காரம்மே. |
2.012. 7 |
வானகத்தில் உறைபவர். மறைகளாகிய வேதங்களை விரித்து ஓதுபவர்களின் கண்களின் ஒளிர்பவர். கருநிறம் உடைய காலனை வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைத்து வென்றவர். தம்மைச் சரணாக அடைபவர்களின் எழிலைக் கொள்ளும், கச்சி நகரில் விளங்கும் திருஏகம்பத்துத்தலைவர் ஆடுகின்ற ஆடல் மிக்க அழகுடையது.
1597 | தூயானைத்
தூயவா யம்மறை யோதிய வாயானை வாளரக் கன்வலி வாட்டிய தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம் மேயானை மேவுவா ரென்றலை மேலாரே. |
2.012. 8 |
தூயவன். தூயனவாகிய மறைகளை ஓதியவாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.
1598 | நாகம்பூ
ணேறதே றல்நறுங் கொன்றைதார் பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர் ஏகம்ப மேவியா டுமிறை யிருவர்க்கும் மாகம்ப மறியும்வண்ணத்தவ னல்லனே. |
2.012.9 |
நாகம் அவனது அணிகலன். அவனது ஊர்தி விடை. மணம் கமழும் கொன்றை அவனதுமாலை. ஒருபாகத்தில் பெண்ணைக் கொண்டவன். பிச்சையும் ஏற்பவன். மறைகளைப் பாடுபவன். கச்சித்திரு ஏகம்பத்தில் எழுந்தருளிய மகிழ்வோடு ஆடும் இறைவன். திருமால் பிரமர்க்குப் பெரிய நடுக்கத்தைத் தருவதோடு அவர்களால் அறியத் தக்க வண்ணத்தவன் அல்லன்.
1599 |
போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள் ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம் நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே. |
2.012.10 |
போதிமரநிழலில் அமர்ந்த புத்தனை வணங்குவோரும், அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தமண மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய மாமர நிழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள் விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். நும் மேல் வரும் வினைகள் நில்லா.
1600 | அந்தண்பூங்
கச்சியே கம்பனை யம்மானைக் கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால் ப சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம் பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே. |
2.012.11 |
அழகும் தண்மையும் பொலிவும் உடைய கச்சிஏகம்பத்தில் விளங்கும் தலைவனைப்பற்றி, நீர் வளமும் தண்மையும் அழகும் உடைய சீகாழிப் பதியுள் தோன்றியவனாய் ஒலிமாலை எனப்படும் திருப்பதிகங்களால் இசைத்தமிழில் பாடவல்ல ஞானசம்பந்தன்பாடிய இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆடிப் போற்றப் பாவம்கெடும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேகம்பம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மேல்வினை, விளங்கும், பொருந்திய, கச்சியுள், எழுந்தருளிய, வினைகள், கச்சியே, மல்குசீ, யேகம்பம், அடைந்து, திருஏகம்பத்தை, சென்று, உறைபவர், நிழலில், அழகும், தண்மையும், வணங்குவோரும், அமர்ந்த, வேகம்பம், ஏகம்பத்தில், மேவியா, உடையானை, கம்பனை, துள்ளமே, குற்றமற்ற, உறைபவன், யல்லதுள், சித்திரு, திருமுறை, திருச்சிற்றம்பலம், கச்சிப்பதியில், திருஏகம்பம், திருவேகம்பம், சேராதவர், உடையவன், கொன்றை, அல்லது, உள்ளம், மின்றேய்க்கு