அகப்பொருள் விளக்கம்
1.83 நாடு இடைபெயர் காலத்து அறிவிக்கும் நெறி
காலில் சேறலும் கலத்தில் சேறலும்
ஊர்தியில் சேறலும் நீதியாகும் |
83 |
1.84 அந்தணர்க்குரிய நெறி
புலத்தில் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக்
காலத்தில் சேர்தல் கடன் என மொழிப |
84 |
1.85 மன்னர் குலமாதரொடு செல்லல் ஆகா
வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்
குலமட மாதரொடு கலமிசைச் சேறலும் பாசறைச் சேறலும் பழுது என மொழிப |
85 |
1.86 தலைமகன் செலவு அழுங்கல் ஆதல்
ஓதல் முதலா ஓதின ஐந்துனும்
பிரிவோன் அழுங்கற்கும் உரியன் ஆகும் |
86 |
1.87 செலவு அழுங்கல் களம்
இல்லத்து அழுங்கலும் இடைச்சுரத்து அழுங்கலும்
ஒல்லும் அவற்கு என உரைத்திசினோரே |
87 |
1.88 செலவு அழுங்கல் ஏது
தலைவி தன்னையும் தன் மனந்தன்னையும்
அலமரல் ஒழித்தற்கு அழுங்குவது அல்லது செல்த் தோன்றல் செல்வான் அல்லன் |
88 |
1.89 ஓதல் பிரிவு காலம்
அவற்றுள்
ஓதற் பிரிவு உடைத்து ஒரு மூன்றியாண்டே |
89 |
1.90 மூவகைப் பிறிவு காலம்
துதிற் பிரிவும் துணைவயின் பிரிவும்
பொருள்வயிற் பிரிவும் ஓர் ஆண்டுடைய |
90 |
1.91 பரத்தையர் பிரிவு காலம்
பூத்த காலை புனை இழை மனைவியை
நீராடியபின் ஈராறு நாளும் கருவயிற்று உறூஉங் காலம் ஆதலின் பிரியப் பெறாஅன் பரத்தையின் பிரிவோன் |
91 |
1.92 ஓதற்பிரிந்தேனுக்கு தகாதன
ஓதற்கு அகன்றோன் ஒழிந்திடை மீண்டு
போதற்கு இயையவும் புலம்பவும் பெறாஅன் |
92 |
1.93 தூது துணை சென்றார்க்கு நெறி
தூதும் துணையும் ஏதுவாகச்
சென்றோன் அவ்வினைநின்று நீட்டித்துழிப் புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே |
93 |
1.94 கற்பில் தலைமகளுக்கு உரிய நெறி
பூத்தமை சேடியில் புரவலர்க்கு உணர்த்தலும்
நீத்தமை பொறாது நின்று கிழவோனைப் பழிக்கும் காமக்கிழத்தியைக் கழறலும் கிழவோர் கழறலும் வழிமுறை மனைவியைக் கொழுநனொடு வந்து எதிர் கோடலும் அவனொடு பாங்கொடு பரத்தையை பழித்தலும் நீங்கிப் புறநகர்க் கணவனெடு போகிச் செறிமலர்ச் சோலையும் காவும் மாலையும் ழனியும் மாலை வெள்அருவியும் மலையும் கானமும் கண்டுவிளையாடலும் கடும்புனல் யாறும் வண்டு இமிர் கமல வாவியும் குளனும் ஆடிவிளையாடலும் கூடும் கிழத்திக்கு |
94 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்