அகப்பொருள் விளக்கம்
2.35 பகற்குறியின் வகை
கூட்டல் கூடல் பாங்கிற் கூட்டல்
வேட்டல் என்று ஒருநால் வகைத்தே பகற்குறி | 151 |
2.36 இதன் விரி
குறிஇடம் கூறல் முதலாப் பெறல் அரும்
விருந்திறை விரும்பல் ஈறாப் பொருந்தப் பகர்ந்த பன்னிரன்டும்(*) பகற்குறியே | 152 |
(*) 2.32 அதனில் காடப்பெற்றுள்ள (மேற்படி
குறித்த-12) விரிகளை மீண்டும் இங்கு கொள்க |
2.37 ஒரு நோக்கு பகற்குறியின் வகை
இரங்கல் வன்புறை இல்செறிப் புணர்த்ல் என்று
ஒருங்கு மூவகைத்து ஒருசார் பகற்குறி | 153 |
2.38 இதன் விரி
கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்
பொழுது கண்டு இரங்கலும் பாங்கி புலம்பலும் தலைவன் நீடத் தலைவி வருந்தலும் தலைவியைப் பாங்கி கழறலும் தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதலும் இன்னுயிர்ப் பாங்கியொடு பகர்தலும் பாங்கி அச்சுறுத்தலும் நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கலும் தலைவிக் கவன் வரல் பாங்கி சாற்றலும் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தலும் முன்னிலைப் புறமொழி மொழிந்து அறிவுறுத்தலும் முன்னின் உணர்தலும் முன்னின் உணர்த்தி ஓம்படை சாற்றலும் மேம்படு கிழவோன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும் என்ற ஈரேழும் எல்லுக் குறியே | 154 |
2.39 பகற்குறி இடையீ£ட்டின் வகை
விலக்கல் சேறல் கலக்கம் என்று ஆங்கு
இகப்பின் மூவகைத்§து பகற்குறி இ¨யீடு | 155 |
2.40 இதன் விரி
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலும்
இறைவியைக் குறிவரல் விலக்கலும் இறைமகள் ஆடிட நோடுக்கி அழிதலும் பாங்கி ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறலும் பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்று இரங்கலும் வறுங்களம் நாடி மறுகலும் குறுங்தொடி வாழும் ஊர் நோக்கி மதிமயங்கலும் எனும் ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே | 156 |
2.41 இரவுக்குறி வகை
வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல்
கூடல் பாராட்டல் பாங்கியிற் கூட்டல் உயங்கல் நீங்கல் என்று ஒன்பது வகைத்தே இயம்பிப் போந்த இரவுக் குறி§யே | 157 |
2.42 இதன்விரி
இறையோன் இருட்குறி வேண்டலும் பாங்கி
நெறியினது அருமை கூறலும் இறையோன் நெறியின் தெளிமை கூறலும் பாங்கி அவன் நாட்டு அணிஇயல் வினாதலும் கிழவோன் அவள்நாட்டு அணிஇயல் வினாதலும் அவற்குத் தன்நாட்டு அணிஇயல் பாங்கி சாற்றலும் இறைவிக்கு இறையோன் குறிஅறிஉறுத்தலும் நேராது இறைவி நெஞ்சொடு கிளத்தலும் நேரிழை பாங்கியொடு நேர்ந்து உரைத்தலும் நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்கு உரைத்தலும் குறியிடை நிறீஇத் தாய் துயில் அறிதலும் இறைவிக்கு இறைவன் வரவு அறிஉறுத்தலும் அவள் கொண்டு சேறலும் குறிஉய்த்து அகறலும் வண்டுறை தாரோன் வந்து எதிர்ப்படுதலும் பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கலும் புரவலன் தேற்றலும் புணர்தலும் புகழ்தலும் இறைமகள் இறைவனை குறிவிலக்கலும் அவன் இறைவியை இவ்வயின் விடுத்தலும் இறைவியை எய்திப் பாங்கி கையுறை காட்டலும் இல்கொண்டு ஏகலும் பின்சென்று இறைவனை வரவு விலக்கலும் பெருமகன் மயங்கலும் தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தலும் திருமகள் புணர்ந்தவன் சேறலும் என்று ஆங்கு இருபத்தேழும் இரவுக்குறி விரியே | 158 |
2.43 இரவுக்குறிஇடையீட்டின் வகை
அல்லற்குறி வருந்தொழிற்கு அருமை என்று ஆங்கு
எல்லிக்குறி இடையீடுஇருவகைத்து ஆகும் | 159 |
2.44 அல்லற்குறி
இறைவிக்கு இகுளை இறைவரைவு உணர்த்துழித்
தான்குறி மருண்டமை தலைவி அவட்கு உணர்த்தலும் பாங்கி தலைவன் தீங்கு எடுத்து இயம்பலும் புலந்து அவன் போதலும் புலந்தபின் வறுங்களம் தலைவி கண்டு இரங்கலும் தன்துணைக்கு உரைத்தலும் தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும் இறையோன் மேல் பாங்கி குறிபிழைப் போற்றலும் இறைவிமேல் இறைவன் குறிபிழைப் போற்றலும் அவள் குறி மருண்டமை அவள் அவற்கு இயம்பலும் அவன்மொழிக் கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பலும் என்பிழை பற்றென்று றைவி நோதலும் எனும் ஒன்று பன்னொன்றும் அல்லகுறிக்குரிய | 160 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்