ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள்

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில் |
அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).
45. சான்றோர் இனத்திரு |
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
46. சித்திரம் பேசேல் |
பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.
47. சீர்மை மறவேல் |
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
48. சுளிக்கச் சொல்லேல் |
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.
49. சூது விரும்பேல் |
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய் |
செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.
51. சேரிடம் அறிந்து சேர் |
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
52. சை எனத் திரியேல் |
பெரியோர் 'ச்சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.
53. சொல் சோர்வு படேல் |
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.
54. சோம்பித் திரியேல் |
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள், நூல்கள், அவ்வையார், ஆத்திசூடி, | , இலக்கியங்கள், திரியேல்