சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
எண்நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம் நண்ணிய விந்துவொடு நாதத்து-- கண்ணில் பகர் அயன்மா லொடு பரமன் அதிதெய்வம் அகரஉக ரம்மகரத் தாம் | 26 |
16: இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்வான்மாச் சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது.
ஏது: அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துகொடு நிற்றலான்
உதாரணம்:
மாய தனுவிளக்காம் மற்று உள்ளம் காணாதேல் ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய்--- வீயாத வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல் தன்னை மலம் அன்றணைதல் தான் | 27 |
17: மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்வான்மா, சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீமாயுள்ள பஞ்ச அவத்திதனாய் நிற்கும் என்றது.
ஏது: அதுதான் மல சொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான்.
உதாரணம்:
ஒன்று அணையா மூலத்து உயிர் அணையும் நாபியினில் சென்றணையும் சித்தம் இதயத்து-- மன்ற ஏய் ஐயைந்தாம் நல்நுதலில் கண்டத்தின் வாக்காதி மெய்யாதி விட்டு அகன்று வேறு | 28 |
இலாடத்தே சக்கிரத்தை எய்திய உள்ளம் இலாடத்தே ஐந்தவத்தை எய்தும்-- இலாடத்தே அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே அவ்வவற்றின் நீங்கல் அது ஆங்கு | 29 |
ஐந்தாம் சூத்திரம்
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத் தாம்தம் உணர்வின் தமியருள் காந்தம் கண்ட பசாசத்து அவையே |
என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், இவ்வான்மாக்களிடத்துத் தமது முதல் உபகாரம் உணர்த்துதல் நுதலிற்று.
18. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது.
ஏது: அவற்றினான் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான்
உதாரணம்:
ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம்--ஐம்பொறியில் காணாதேல் காணாது காணும் உளம் காணாதேல் காணாகண் கேளா செவி | 30 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், உள்ளம், உதாரணம், காணாதேல், இலாடத்தே, சிவஞானபோதம், என்றது, சாத்திரங்கள், சித்தாந்த, மேற்கோள், அதிகரணம், சூத்திரம், அதுதான், நிற்றலான், இலக்கியங்கள்