சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இரண்டாம் சூத்திரம்
அவையே தானே ஆய், இரு வினையிற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே |
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோவெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.
4. முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது.
ஏது: அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில், ஏகம் என்று சுட்டுவது உண்மையின் அத்துவிதம் என்ற சொல்லே அந்நிய நாத்தியை உணர்த்துமாயிட்டு.
உதாரணம்:
கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம் இட்டதொரு பேர் அழைக்க என் என்றாங்கு-- ஒட்டி அவன் உளம் ஆகில்லான் உளம் அவன் ஆ மாட்டாது அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு. | 6 |
ஒன்று என்றது ஒன்றேகாண் ஒன்றே பதிபசுவாம் ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைக் காண்--- ஒன்று இன்றால் அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல் இக்கிரமத்து என்னும் இருக்கு. | 7 |
பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்-- அண்ணல்தாள் அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது அத்துவிதம் என்று அறையும் ஆங்கு | 8 |
அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கற்போல் உருக்கி உடங்கு இயைந்து நின்று--- பிரிப்பு இன்றித் தாமே உலகாம் தமியேன் உளம் புகுதல் யானே உலகு என்பன்இன்று | 9 |
5. இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வருமென்றது
ஏது: ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவல் இட்டாங்கு அவை அவனது ஆக்கினை ஆகலான்
உதாரணம்:
உள்ளதே தோற்ற உயிர் அணையும் அவ்வுடலில் உள்ளதாம் முற்செய்வினை உள் அடைவே--- வள்ளலவன் செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்யேபோல் செய்வன், செயல் அணையா சென்று. | 10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், அத்துவிதம், நூல்கள், ஒன்று, சிவஞானபோதம், சித்தாந்த, சாத்திரங்கள், அவன், உளம், உயிர், ஏகம், என்றது, உதாரணம், அதிகரணம், இரண்டாம், இலக்கியங்கள், சூத்திரம், ஆணையின், மேற்கோள், நிற்கும், முதல்வன்