சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
13. ஆறாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.
உதாரணம்:
அறிந்தும் அறிவதே ஆயும் அறியாது அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி-- அறிந்தது எது? அறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின் அதுஅதுதான் என்னும் அகம். | 21 |
14. ஏழாம் அதிகரணம்
மேற்கோளும் ஏதுவும்: இனி, மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது என்றது.
பொழிப்புரை: அவைதாம் வெவ்வேறு பெயர்பெற்று நிற்றலான்.
உதாரணம்:
கலைஆதி மண் அந்தம் காணில் அவை மாயை நிலையாவாம், தீபமே போல--- அலையாமல் ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் அதுதனுவாம் தானத்தின் வேறாகும் தான். | 22 |
பொதுவதிகாரம்:இலக்கணவியல்
நான்காம் சூத்திரம்
அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவை சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே |
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், இதுவும் அது.
15: முதல் அதிகரணம்.
மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில் ஒன்று அன்று என்றது.
ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம்:
மனம் ஆதியால் உணர்தல் மன்னு புலன்கள் மனம் ஆதி மன்புலனின் அல்லன்-- மனமேல் உதித்து ஒன்றை உள்ளம் உணர்தல் அதனில் உதிக்கும் கடல்திரையை ஒத்து | 23 |
சிந்தித்து ஆய்ச் சித்தம் தெளியாதாய் ஆங்காரம் புந்தியாய் ஆய்ந்து மனமாகிப்-- பந்தித்து வெவ்வேறு தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம் அவ்வேறாம் போதுபோல் ஆங்கு | 24 |
அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி மகாரம் மனம் சித்தம் விந்து--- பகாது இவற்றை நாதம் உளவடிவாம் நாடில் பிரணவமாம் போதம் கடற்றிரையே போன்று | 25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், என்றது, நூல்கள், சிவஞானபோதம், உதாரணம், அதிகரணம், சித்தாந்த, மனம், சாத்திரங்கள், சூத்திரம், அன்று, உணர்தல், சித்தம், உள்ளம், நாடில், புத்தி, பொழிப்புரை, ஏதுவும், மேற்கோளும், இலக்கியங்கள், ஆன்மா, உளது, வெவ்வேறு, அவைதாம், நிற்றலான்