சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
38. மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்: இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனக் கண்டு வழிபடுக என்றது.
ஏது: அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே அல்லாத விடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம்:
தன்உணர வேண்டித் தனது உருவைத் தான்கொடுத்து தன் உணரத் தன்னுள் இருத்தலால் -- தன் உணரும் நேசத்தர் தம்பால் நிகழும் ததிநெய்போல் பாசத்தார்க்கு இன்றாம் பதி | 76 |
கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தில் அங்கிவேறு உண்டல்போல் நின்று அங்கு உளதாமால் -- கண்ட உருத் தான் அதுவாய் அன்று ஆனான் தான் அதுவாய்த் தோன்றானோ தான் அதுவாய்க் காணும் தவர்க்கு | 77 |
39. நான்காம் அதிகரணம்
மேற்கோள்: இனி இவ்விடங்களில் வழிபடுக என்றது.
ஏது: நரம்பு நாடி முதலானவற்றைத் தானதுவாய் வரும் புருடன் அவையாகாவாறு அப்புருடனும் ஆகலான்.
உதாரணம்:
அது இது என்றது அதுஅல்லான் கண்டார்க்கு அது இது என்றதையும் அல்லான் -- பொது அதனில் அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே அத்திவிதி அன்பின் தொழு | 78 |
வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினைதீரின் அன்றி விளையா -- வினைதீர ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும் ஆனத்தால் அன்பின் தொழு. | 79 |
தன்னை அறிவித்துத் தான் தானாய்ச் செய்தானைப் பின்னை மறத்தல் பிழையல் அது -- முன்னவனே தானே தானாச் செய்தும் தைவமென்றும் தைவமே மானே தொழுகை வலி | 80 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், தான், என்றது, சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞானபோதம், தொழு, உதாரணம், அன்பின், தைவமே, வழிபடுக, இலக்கியங்கள், அதிகரணம், மேற்கோள், இவ்விடங்களில்