திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

திருவுந்தியார் சைவசித்தாந்த நூல்களுள் முதல் நூல். சைவசித்தாந்த நூல்களுக்குள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு இது முற்பட்டது. இந் நூலை இயற்றியவர் திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் ஆவார். 45 பாடல்களைக் கொண்டது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (மலங்கள்) என்பவற்றின் இயல்புகளைப் பற்றியும், உயிர்கள் இறைவனுடன் சேருவதற்கான வழிகளைப் பற்றியும் இன் நூல் எடுத்துரைக்கின்றது.
நூல்
அகளமா யாரு மறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற. | 1 |
பழக்கந் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்பெணே யுந்தீபற ஒருபொரு ளாலேயென் றுந்தீபற | 2 |
கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர் * பிண்டத்தில் வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. | 3 |
* பிண்டத்து |
* இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ங னிருந்ததென் றுந்தீபற அறிவு மறிவதென் றுந்தீபற. | 4 |
* எங்ங |
ஏகனு மாகி யநேகனு மானவன் நாதனு மானானென் றுந்தீபற நம்மையே யாண்டனென் றுந்தீபற. | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, திருவுந்தியார், நூல்கள், நூல், சித்தாந்த, சாத்திரங்கள், னிருந்ததென், இலக்கியங்கள், சைவசித்தாந்த, பற்றியும்