முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.044.முடிப்பதுகங்கை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.044.முடிப்பதுகங்கை
7.044.முடிப்பதுகங்கை
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
446 |
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் நொடிப்பது மாத்திரை நீறெ கடிப்பதும் ஏறுமென் றஞ்சு பிடிப்பது பாம்பன்றி இல்லை |
7.044.1 |
எம் பெருமான் தலையிற் சூடுவது கங்கையையும் சந்திரனையும், அழித்தது மூன்று மதில்களை, அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார். தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு. அது கடித்தவுடன், நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன்; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ!
447 |
தூறன்றி யாடரங் கில்லை நீறன்றிச் சாந்தமற் றில்லை கூறன்றிக் கூறாவ தில்லை ளேறன்றி யேறுவ தில்லை |
7.044.2 |
எம் பெருமானுக்கு, ஆடுகின்ற அரங்கு, காடன்றி வேறு இல்லையோ! சாந்து, சுடலைப்பொடியாகிய சாம்பலன்றி வேறு இல்லையோ! தனது திருமேனியில் ஒரு கூறாய் நிற்பது மலையரையன் மகளது கூறன்றி வேறு இல்லையோ! ஏறுவது, முல்லை நிலத்தில் உள்ள சிறுமையுடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ!
448 |
தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் ஒட்டெனும் ஒட்டெனு மாநி சிட்டன் திரிபுரஞ் சுட்ட வெட்டெனப் பேசன்மின் தொண்டர் |
7.044.3 |
மன அலைவையும், எல்லாப் பொருட்கும் நிலைக் களமாகிய பெரிய நிலத்தின்கண் உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்னெறிக்குத் தடை என்று உணர்ந்த அடியவர்களே, மேலானவனும், திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை, வெறுத்துப் பேசன்மின்.
449 |
நரிதலை கவ்வநின் றோரி எரிதலைப் பேய்புடை சூழ சிரிதலைமாலை சடைக்க பிரிதலைப் பேசன்மின் தொண்டர் |
7.044.4 |
அடியவர்களே, நரிகள், இறந்தோரது தலைகளைக் கௌவி இழுக்க, ஓரிகள் கூக்குரலிட, செறிந்த இருட்காலத்தில், நெருப்பு எரிகின்ற இடத்தில், பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளையுடைய காட்டில், சிரிப்பதுபோலும் தலைமாலையைச் சடையின்கண் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை, விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின்!
450 |
வேயன தோளி மலைம மாயமில் மாமலை நாட ஆயன சொல்லிநின் றார்கள் பேயனே பித்தனே என்ப |
7.044.5 |
மூங்கில்போலும் தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற, வஞ்சனை இல்லாத, பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை, தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும், அவனைச் சிலர் 'அவன் பேயோடாடுபவன்; பித்துக் கொண்டவன்' என்று இகழ்வர்; எம்பெருமான், அவர் அங்ஙனம் இகழுமாறு இருத்தல் என்!
451 |
இறைவ னென்றெம் பெருமானை துறையொன் றித்தூ மலரிட் மறையன்றிப் பாடுவ தில்லை பிறையன்றிச் சூடுவ தில்லை |
7.044.6 |
தேவர் எம்பெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச்சென்று, நன்னெறியிற் பொருந்தி, தூய மலர்களைச் சொரிந்து அவன் அடியிணையைப் போற்றுவர்; அங்ஙனமாக, அவனுக்கு, பாடும்பாட்டு, மறைகளன்றி வேறு ஒன்றும் இல்லையோ! சூடும் கண்ணி, வானத்திற்செல்லும் இளம்பிறையன்றி, வேறு ஒன்றும் இல்லையோ!
452 |
தாருந்தண் கொன்றையுங் கூவி ஆரும் அளவறி யாத ஊரும்ஒன் றில்லை உலகெ பேரும்ஓ ராயிர மென்ப |
7.044.7 |
எம் பெருமானுக்கு, மாலையும், 'தண்ணிய கொன்றைப் பூ, கூவிளையிலை, மிகத் தாழ்ந்த ஊமத்தம்பூ' என்பன. அளவும் யாராலும் அறியப்படாத முதலும், முடிவும்; உலகம் முழுதுமாம். சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல; ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர்; அவன் இவ்வாறிருத்தல் என்னோ!
453 |
அரியொடு பூமிசை யானும் வரிதரு பாம்பொடு வன்னி புரிதரு புன்சடை வைத்த எரியன்றி அங்கைக்கொன் றில்லை |
7.044.8 |
கீற்றுக்களையுடைய பாம்போடு, 'வன்னி, ஊமத்தை, பிறை' என்பவைகளை, புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை, திருமாலும், பூமேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார்; பிறர் ஆர் அறிவார்! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ!
454 |
கரிய மனச்சமண் காடி எரிய வசவுணுந் தன்மை பெரிய மனந்தடு மாற கரியின் உரியல்ல தில்லை |
7.044.9 |
எம் பெருமானுக்கு கரிய மனத்தையுடைய, கஞ்சியைக் குடிக்கின்ற, கழுமரங்கள் போலத் தோன்றுகின்ற சமணர்களால், மனம் எரிந்து இகழப்படுதல்தான் இயல்போ! மலையரையன் மகளாகிய தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்க வேண்டி, அவன் மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோலல்லது போர்வை வேறு இல்லையோ!
455 |
காய்சின மால்விடை மாணிக் தீசனை ஊரன் எட்டோ ஆயின சீர்ப்பகை ஞானியப் ஏசின பேசுமின் தொண்டர் |
7.044.10 |
அடியவர்களே, காய்கின்ற சினத்தையுடைய, பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும், கறுப்புநிறத்தையுடைய கண்டத்தையுடைய இறைவனும் ஆகிய பெருமானை, அவன் அடித்தொண்டனும், மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும், ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால், எம் பெருமானைப் பாடுமின்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிப்பதுகங்கை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இல்லையோ, பிரானுக்கே, எம்பெருமானை, தில்லை, பிரானையே, பேசன்மின், தொண்டர், அடியவர்களே, காள்எம், பெருமானுக்கு, றில்லை, அவனுக்கு, பெருமானை, மத்தமும், பாடியனவும், ஆதியும், ரால்எம், ஒன்றும், திருச்சிற்றம்பலம், தட்டெனுந், மலையரையன், முடிப்பதுகங்கை, பிடிப்பது, வான்மகள், திருமுறை